வலையுலகில் நன்கு பரிச்சயமான கேபிள் ஷங்கர்
ஜியின் புத்தகம் என்பதால் மிக ஆவலுடன் படிக்கத்
துவங்கினேன். அவருடைய திரைப்பட விமர்சனங்கள்
மிகுந்த தரமுள்ளவையாக இருக்கும்.. சினிமா சம்பந்
தப்பட்ட முயற்சிகளில் ஈடுபடுவதலோ என்னவோ
இவரின் முதல் சிறுகதைத்தொகுப்பில் அனைத்துக்
கதைகளும் சிறந்த திரைக்கதையுள்ள குறும்படம்
போலவே இருக்கிறது.. சுகாசினி., பாலு மகேந்திரா
போல இவற்றைத்தொடராகவும் இயக்கலாம் இவர்.
கதைகள் எல்லாம் விறுவிறுப்பாய் இருக்கின்றன
முத்தம் முதல் கதையை நான் விகடனிலேயே
படித்து இருக்கிறேன்.. மிக நுண்ணிய உணர்வுக
ளுடனான கதை அது.. கொண்டு சென்று முடித்த
விதம் அருமை..
லெமன்ட்ரீயும் ரெண்டு ஷாட் டக்கீலாவும் இது
வாழ்க்கை வாழ்வதற்கே என்பவர்களுக்கானது.
கல்யாணம் ஒரு உறவுக்கு உடல் மட்டுமல்ல
மனமும் தேவை என்பதான கதை ..
ஆண்டாள் இந்தத்தொகுப்பில் மிக அருமையான
கதை இதுதான்.. பதின்மவயது கதை..
ஒருகாதல் இரண்டு க்ளைமாக்ஸ் நிஜ சினிமா
போல க்ளைமாக்ஸ்..
தரிசனம் என்னை மிக ஆச்சர்யப்பட வைத்த
கதை இதுதான்.. ஏனெனில் இந்தத்தொகுப்பில்
நிஜத்தை பதிவு செய்த கதை இது ..சாமியார்களை
நம்பி லட்சக்கணக்கில் பணம் செலவு செய்து
ஆசிரமம் செல்பவர்களை எனக்குத்தெரியும்..
போஸ்டர் இதுவும் எதிர்பாரா க்ளைமாக்ஸ் உள்ள
கதை.. இதை கொண்டு சென்ற விதம் அருமை..
துரை நான் ரமேஷ் சார் மிக இரக்கத்தையும்
சமூகக் கோபத்தையும் தூண்டிய கதை..
கோடம்பாக்கக் கதை..
என்னைப்பிடிக்கலையா இது திருமணமாகி
வரும் செவன்த் இயர் இட்ச் எனப்படும்
ஒரு சலிப்பான .,தவறு செய்யத்தூண்டும்.,
ஒரு மன நிலைக்கான கதை.. எனக்கு இதில்
உடன்பாடில்லை...
காமம்கொல் அடுத்த சாமியார் கதை.. துறவிக
ளெல்லாம் உண்மையில் துறவிகளல்ல..
ராமி சம்பத் துப்பாக்கி சினிமா சார்ந்து யோசிப்
பதாலோ என்னவோ முடிவு சினிமாட்டிக்காக
இருக்கு ..இந்தக்கதையில் ஒரு அவசரம்
இருக்கு., முடிவைப்போல...
மாம்பழவாசனை எல்லாத்தோல்விகளையும்
மீறி வாழ வேண்டும் என்ற எண்ணம் உருவாக்க
வேண்டும் .. காதல் தோல்வியில் தற்கொலை
தேவையில்லாதது.. ஆனால் ஏனோ ஹேமாவும்
அவர் மறைவுக்குப் பின் ஸ்டெல்லா புரூஸும்
இந்தக்கதைக்கு சம்பந்தமில்லாவிட்டலும்
ஞாபகம் வந்தார்கள்..
நண்டு இந்தத் தொகுப்பிலேயே மிகச்சிறந்த
யதார்த்தமான வலி நிறைந்த கதை இதுதான் ..
ஒரு பரிதவிப்பு .,கழிவிரக்கம் கூட உண்டாகி
விட்டது.. உண்மையான ஷங்கர் இந்தக்கதை
யிலும் ஆண்டாள் கதையிலும் தான் மிளிர்கிறார்.
சுஜாதாவின் பாணியில் இருப்பதால் சிலசமயம்
சுஜாதா கதைகளை வாசிக்கிறோமோ என்ற
எண்ணம் ஏற்பட்டாலும் பாலா சார் விமர்சனப்படி
பெண் உடல் சார்ந்த வர்ணனைகள் இல்லாமலே
கூட இந்தக்கதைகள் அருமையாய் இருக்கும்..
சினிமா சார்ந்து யோசிப்பதால் அவை தவிர்க்க
முடியாமல் இருந்தாலும் மிகச்சிறந்த சரளமான
நடையில் அவை வாசகனை திகைக்கச்செய்கின்றன.
இனிப்பில் ஏலக்காய் முந்திரி திராக்ஷை மணக்க
லாம்., கிடக்கலாம் ஆனால் இனிப்பை உண்ண
திகட்டும் அளவு அல்ல..
கேபிள்ஜியின் முதல் தொகுப்பு இது ஆண்வாசகர்கள்
அனைவருக்கும் பிடிக்கும்.. பெண்வாசகியருக்காக
அடுத்த தொகுப்பை எழுதுங்கள் கேபிள் ஜி.. உங்கள்
எழுத்துக்கள் வலிமையாகவும் நீங்கள் கொண்டு
செல்ல நினைக்கும் தளத்துக்கு வாசகனை
எடுத்துச் செல்வதாகவும் இருக்கிறது ..ஒரு சில
தவிர்த்து இந்த புத்தகம் மிக அருமையான
யதார்த்த கால பதிவு ..!!!