பலம் சேர்க்கும் பருப்பு வகைகள்.
இன்று காலை காரைக்குடியில் நடைபெற்ற ஏகன் அநேகன் தொடர் நிகழ்வில் நாச்சி ரெஸிடென்சியில் "அந்தாதியும் அனுபூதியும்" என்ற தலைப்பில் பேசினேன். அதற்காக எடுத்த குறிப்புகளை இங்கே பதிவிட்டேன் . நன்றி
அந்தாதியும் அனுபூதியும்
ஏகன் அநேகன் குழுவினருக்கும் நாச்சி ரெஸிடென்ஸிக்கும், நாச்சம்மை அண்ணாமலை அவர்களுக்கும் மற்றுமுள்ள ஆன்றோருக்கும் சான்றோருக்கும் பக்தப் பெருமக்களுக்கும் என் அன்பு வணக்கம்.
1.அவள் அருளாலே அவள்தாள் வணங்கி ஆரம்பிக்கின்றேன். ஆதியந்தம் அற்றவனின் இடப்பாகம் கொண்டவள், அவனின் சரிபாதி ஆனவள் அம்மை. எனவே அவளும் ஆதி அந்தம் அற்றவள். அதனால் அவள் அந்தாதிக்கு உரியவள்.
2.புவி ஏழையும் பூத்தவள் , புவனம் பதினான்கையும் காத்தவள், அண்டமெல்லா பூத்தவள், புவி அடங்கக் காத்தவள். அபிராமிப் பட்டர்போன்ற மெய்ஞானிகள் கண்ட இப்பேருண்மையை இன்றைய விஞ்ஞானமும் ஒப்புக் கொள்கிறது. பிக் பாங்க் தியரி என்று.
ஒன்றிலிருந்து வெடித்துப் பலவாய்ப் பெருகி ஒன்றிலேயே அடங்குதல் என்பதை. ஒன்றாய் இருந்து பலவாய் விரிந்து ஒன்றுள் ஒடுங்கும் உலகை உபநிஷதங்கள் மட்டுமல்ல அபிராமி அந்தாதியும் அழகாய் விளக்குகின்றது.
உலகம்பட்டி உலகநாத சுவாமி கோவில் கும்பாபிஷேக விழா 2017 மலர் தொகுத்த விதம் மிக அருமை.