எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
ராமர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ராமர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 24 மார்ச், 2022

யாகக் குதிரையால் விமோசனம் பெற்றவன்.

யாகக் குதிரையால் விமோசனம் பெற்றவன்

ல்வேறு பாவங்கள் செய்தவர்கள் பேய் பிசாசாகவோ ராட்சசனாகவோ மாறி அலைவார்கள். கதி மோட்சம் கிடைக்காமல் அப்படி ராட்சசனாக அலைந்த ஒருவனது கதையைப் பார்ப்போம் வாருங்கள் குழந்தைகளே.
கவுடதேசத்தில் அந்தணன் ஒருவன் வசித்து வந்தான். அவன் தபம் ஜபம் செய்து வாழ்ந்து வந்ததால் தேவதூதர்கள் வந்து அவனை சொர்க்கத்துக்கு அழைத்துச் சென்றனர். செல்லும் என்னதான் ஜபம் தபம் செய்திருந்தாலும் அவனும் உலக மாயைகளில் இருந்து விடுபடவில்லை. தேவதூதர்களுடன் சொர்க்கத்துச் செல்லும்போது வழியில் சில முனிவர்கள் தவம் செய்வதைப் பார்த்தான். அவர்கள் அருகில் அப்சரஸ் போன்ற தேவலோக கன்னிகைகள் பணிவிடைகள் செய்து நின்றார்கள்.

ஞாயிறு, 19 ஆகஸ்ட், 2018

சிறப்பானதைக் கொடுத்த சபரி. தினமலர். சிறுவர்மலர் - 30.

சிறப்பானதைக் கொடுத்த சபரி
சாதாரணாமாகவே பிறருக்கு நாம் ஒன்றைக் கொடுக்க வேண்டுமென்றால் நல்லதையே கொடுக்க வேண்டும். அதுவும் அவதார புருஷனான இராமபிரான் வரப்போகிறார் என்றால் அவருக்கு சிறப்பானதைத்தானே கொடுக்க வேண்டும். அதனால் மரங்களிலிருந்து நல்ல பழங்களைப் பறித்துக் கொண்டிருக்கிறாள் அந்த வேடுவப் பெண். ஓராண்டு ஈராண்டல்ல எட்டு வயதிலிருந்தே அவள் தினமும் அப்படி என்ன சிறப்பான பழங்களை சேகரிக்கிறாள் என்று பார்ப்போம் வாருங்கள் குழந்தைகளே.
ரிஷியமுகம் ஆசிரமம். அங்கே முனிபுங்கவர்கள் ரிஷிகள் வேதம் ஓதும் சப்தமும், ஹோமத்தின் புகையும் வானோங்குகிறது. இதுதான் சரியான இடம் என்று மதங்க முனிவரின் குடிலுக்கருகில் சென்று அமர்கிறாள் ஒரு சின்னஞ்சிறுமி. அவளுக்கு எட்டு வயதிருக்கும். காதோலைக் குருத்தணிந்து தலையை சேவற்கொண்டையிட்டு காலில் தண்டையயும் அரையில் சிற்றாடையும் அணிந்த அப்பெண்ணின் முகத்தில் தேஜஸ் ஒளிவிடுகிறது.
திருமண சமயம் வீட்டை விட்டு ஆசிரமத்துக்கு ஓடி வந்த அவளைத் தேடி அவளது வேடுவத் தந்தை வருகிறார். ”அம்மாடி பெண்ணே. உன் விருப்பத்துக்கு மாறா திருமணம் செய்யமாட்டோம். நீ ஆசைப்பட்டபடி எந்த ஆட்டையும் பலி கொடுக்காம ஆயிரம் ஆட்டையும் விடுதலை செய்து விட்டுட்டோம். நீ திரும்ப வீட்டுக்கு வா “ என்கிறார். மகளோ மறுக்கிறாள்.

வியாழன், 18 ஜனவரி, 2018

அன்புப் பரிசு அரசாளும் - தினமலர் சிறுவர்மலர் - 1

அன்புப் பரிசு அரசாளும்

மிக உயர்ந்த ஜாதி மரத்துண்டு அது. மித்ரபந்து தன் மனைவியுடன் நான்கைந்து நாட்களாக அதைப் பார்த்துப் பார்த்துச் செதுக்கிக் கொண்டிருக்கிறார்.

அது என்ன சிலையா இல்லையில்லை.. சிற்பம் போல உருவான ஒரு ஜோடி பாதரட்சை. காலில் அணியும் மரச்செருப்பு. அதைச் செய்தபின் அதன் அழகில் மயங்கி நின்றார் மித்ரபந்து. மிக மிக அழகான வடிவான இது யார் காலை அலங்கரிக்கப் போகிறது ?

யோத்தி அன்று மணக்கோலம் பூண்டிருந்தது. நகரமெங்கும் விருந்தின் வாசனை, நறுமணத் திரவியங்கள் பூசிய ஆடவர்களும், அணிகலன்கள் அணிந்து கலகலவெனச் சிரித்தோடிய இளம்பெண்களுமாக நகரம் களைகட்டியிருந்தது. முதியோர்களும் சிறார்களும் கூட சந்தோஷமாக உரையாடி விளையாடிக் கொண்டிருந்தார்கள்.
Related Posts Plugin for WordPress, Blogger...