பல்வேறு பாவங்கள் செய்தவர்கள் பேய் பிசாசாகவோ ராட்சசனாகவோ மாறி அலைவார்கள். கதி மோட்சம் கிடைக்காமல் அப்படி ராட்சசனாக அலைந்த ஒருவனது கதையைப் பார்ப்போம் வாருங்கள் குழந்தைகளே.
கவுடதேசத்தில் அந்தணன் ஒருவன் வசித்து வந்தான். அவன் தபம் ஜபம் செய்து வாழ்ந்து வந்ததால் தேவதூதர்கள் வந்து அவனை சொர்க்கத்துக்கு அழைத்துச் சென்றனர். செல்லும் என்னதான் ஜபம் தபம் செய்திருந்தாலும் அவனும் உலக மாயைகளில் இருந்து விடுபடவில்லை. தேவதூதர்களுடன் சொர்க்கத்துச் செல்லும்போது வழியில் சில முனிவர்கள் தவம் செய்வதைப் பார்த்தான். அவர்கள் அருகில் அப்சரஸ் போன்ற தேவலோக கன்னிகைகள் பணிவிடைகள் செய்து நின்றார்கள்.