எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 28 செப்டம்பர், 2010

அம்மா...அருமை அம்மா

அன்பு எனப்படுவது யாதெனின் .. அம்மா என்றால் அன்பு..

நாம் செலுத்துகிறோமோ இல்லையோ பிரதிபலனற்று நம்மிடம் அன்பு செலுத்திக்கொண்டு இருப்பவர் நம் அம்மா.. நம்மை நல்வழியில் செலுத்துபவரும் அவரே.. அம்மா என்று சொல்லும்போதே கண்டிப்புக் கலந்த கனிவுதான் தோன்றுகிறது. கனிவும் கண்டிப்பும் சேர்ந்த கலவைதான் அம்மா. உற்றது செய்யும் போது பாராட்டுதலும் அற்றது செய்யும் போது வழி நடத்துதலும் அம்மாவின் இயல்பு. அவளின் அன்புக்கு இணையுண்டோ.?

தாய்ப்பாலைப் போல முதல் முக தரிசனம் நம் அம்மா முகத்தில்தான் நிகழ்கிறது. ! நாம் பார்த்த முதல் அழகியும் அவள்தான். அவள் முந்தானை வாசம்தான் நாம் உணர்ந்த முதல் சுவாசம்.! அன்கண்டிஷனல் லவ் என்பதெல்லாம் அம்மாவிடம் கிடையாது! எல்லாம் ஒரே கண்டிஷந்தான்..!

ஞாயிறு, 26 செப்டம்பர், 2010

அன்பு வெருட்டு..

மண்ணைக் கிளறி
மூச்சை பெருக்கி
கொம்போடு விரட்டும்
அன்பு மிருகம்..

வாலும் அல்ல.,
தும்பும் அல்ல..
திமிலும் அல்ல..
பிடிக்கு எட்டாமல்..

கிளப்பும் புழுதி ...
கொடிய மூர்க்கம்..
விரட்டுகிறோமா..
வெருட்டுகிறதா..

சனி, 25 செப்டம்பர், 2010

சேமிப்பு..

குழந்தைகள் லேபிள்களையும்., சிகரட் அட்டைகளையும் ., வண்ணப் படங்களையும் ., தீப்பெட்டித் தாள்களையும்., ஸ்டிக்கர்களையும்., சேமிப்பதாய்..

பள்ளி செல்லும் வயதில் அது நாணயங்களாய்., ஸ்டாம்புகளாய் ., ஸ்கெட்சுகளாய்..

பருவ வயதில் ரெக்கார்ட் நோட்டுகளாய்., க்ரோஷாக்களாய்., எம்பிராய்டரிகளாய்.,

வெள்ளி, 24 செப்டம்பர், 2010

இனிது இனிது.... போஸ்டர்

எனக்குப் பிடித்த ஹாலிவுட் ...இந்த தலைப்பில் இடுகையைத் தொடர்பவர்களுக்கு என் முகபுத்தக நண்பர் ப்ரகாஷ்ராஜின் இனிது இனிது படத்தின் இந்த போஸ்டர் ஃப்ரீ..அட நிஜமாத்தான்பா.. நேத்து சொன்னமில்ல... அந்த சத்யத்தை நிறைவேத்திட்டோம்..:))

வியாழன், 23 செப்டம்பர், 2010

எனக்குப் பிடித்த ஹாலிவுட்....

1. ஆர்னால்டு ஸ்வஷர்நெகர்.. - ட்ரூ லைஸ்.. டெர்மினேட்டர்., டோட்டல் ரீகால்.

2. டாம் க்ரூஸ் - மிஷன் இம்பாஸிபிள் 1. 2. 3.

3. ப்ராட் பிட் - ஓஷன்ஸ் 11. 12. 13.

4. பியர்ஸ் ப்ராஸ்னன் - கோல்டன் ஐ., வர்ல்ட் இஸ் நாட் இனாஃப்.

5. அல் பசினோ - காட் ஃபாதர் .

6 ஜாக்கி சான் - ஷாங்காய் நைட்ஸ்..

செவ்வாய், 21 செப்டம்பர், 2010

இன்னும் இளமையாய்...

தந்தை கைகளுக்குள்
வளர்ந்த காலம் முடிந்து..
செல்லச் சகோதரர்கள்
குடும்பஸ்தர்களாகி..
முயல்குட்டிகளாய் அணைப்பில்
கிடந்த குழந்தைகள்
ஆளுயரம் தாண்டி.,

திங்கள், 20 செப்டம்பர், 2010

நீ என்பதான ஒன்று..

எங்கு சென்றாலும் உன்னையும்
ஏந்திச் செல்கிறேன்..
இன்பச் சுமையாய் இருப்பதால்
இலகுவாய் இருக்கிறாய்...

எப்போது புகுந்தாய்..
எங்கிருந்து வந்தாய் ..
மஹிமா ., லகிமா.,
அணிமா அறியாமலே..

நினைவு விளக்கில்
அலாவுதீன் பூதமாய்
அவ்வப்போது எழுந்து ...

சனி, 18 செப்டம்பர், 2010

செப்டம்பர் மாத லேடீஸ் ஸ்பெஷலில் துளசி கோபால்., ருக்மணி அம்மா., சித்ரா நாகப்பன்., ஹேமா மற்றும் நான்..

பண்டிகைகள் விநாயகர் சதுர்த்தியுடன் ஆரம்பிக்கின்றன..
எனவே அடுத்து அடுத்து விஷேச சிறப்பிதழ்கள்தான்..
அம்மா அருமை அம்மா என்ற தலைப்பில் என்னுடைய பகிர்வு வந்து இருக்கு. சகோதரிகள் தங்கள் அம்மாவைப் பற்றியும் பகிர்ந்து கொள்ளுங்க .. சிறப்பானது அடுத்த அடுத்த இதழ்களில் வெளிவரும்.

வெள்ளி, 17 செப்டம்பர், 2010

வெர்ச்சுவல் சாட்டிஸ்ஃபாக்‌ஷன்..

இரண்டு இல்லாமல்
எப்போதும் எதுவுமில்லை..
இருப்பு ... இருப்பின்மை..
உளதாய் ., இலதாய்..

நட்பு., பிரிவு
அன்பு., க்ரோதம்.,
ஆதரவு., அலட்சியம்.,
எழுத்து ., விமர்சனம்...

வெளி வெறுத்து
நிஜம் போலான ஒரு உருவில்.,
மௌனப்பேச்சில் நிம்மதி..
கஞ்சாக்காரனின் உலகமாய்..

வியாழன், 16 செப்டம்பர், 2010

பங்குச்சந்தை......முரட்டுக் காளையும் மிரளும் கரடியும்.

1986 பிப்ரவரி மாதம் முதல் காப்பிடல் மார்க்கெட் இதழ் வந்தது ...
பெட்ரோ பாட்டரி டிப்போ எனும் பெயரில் கடையும் ஷேர் ட்ரேடிங்கும் செய்துவந்த ஐயா சொல்வது புரிந்தும் புரியாமலுமிருக்கும்... லாங் .,ஷாட்., புல்லிஷ் .,பியரிஷ் என்று..

திருமணம் முடிந்தபின் தெரிந்தது என் கணவருக்கும் பங்குச் சந்தையில் ஆர்வம் அதிகம் என்று .. இந்திய வழக்கப்படி ராமர் செல்லும் வழியில் சீதையும் செல்ல ஆரம்பித்தேன்..( இது ரொம்ப ஓவர் என்று குரல் கேக்குது..:))
கவிதை தெரிந்த அளவு வணிகம் புரிபடவும்., பிடிபடவும் இல்லை..

பிஸினஸ் லைன்., காப்பிடல் மார்க்கெட்., எகனாமிக் டைம்ஸ்., ஹிண்டுவில் ஷேர் ப்ரைஸ் மூவ்மெண்ட்ஸ் என்று அவ்வப்போது விரும்பியும் விரும்பாமலும் பங்குச் சந்தை என்னை தொடர்ந்து கொண்டே இருந்தது.

செவ்வாய், 14 செப்டம்பர், 2010

வெம்மிளகாய்..

குடுவை உடைந்து
மீன்கள் துள்ளின..
ஆன்ம விடுதலைக்காய்..

பிணத்தின் முன் ஆட்டம்..
சாவும் கொண்டாடப்பட வேண்டுமென்றா..
நிறைபட வாழ்ந்ததற்கா..

மல்லிகை மொக்குகளில்
வெம்மிளகாய் வாசனை ..
உன் ஊடல்..

புதன், 8 செப்டம்பர், 2010

அம்மா....

அம்மாவின் புன்னகை.. ம்ம்ம் பூக்கள் என்று சொல்லலாம். சட்டென்று வாடிவிடுவதாலும்.. செல்லும் வழியில் நியானின் கோலங்கள் முகமெங்கும் கோடிழுத்துக் கொண்டிருந்தன வண்ணத்தில்.. எத்தனை வருடம் இப்படியே எங்களைப் பற்றிய சிந்தனையில் .. நெற்றிச் சுருக்கம் கூட அதிகமாகி..

எதைச் சொல்லவேண்டும் .. எப்போது சொல்ல வேண்டும் .. எப்படி சொல்ல வேண்டும் என்பது அம்மாவிடம் கற்றுக் கொண்டது.. சொல்லாமல் உணர்த்துவது கூட..

முழுமையான சரணாகதி என்பதன் அர்த்தம் அம்மா.. குழந்தைகளுக்கும் ., கணவருக்கும்..

திங்கள், 6 செப்டம்பர், 2010

நதியலையில் ஆடும் நிலவு....

ஒளிந்தும் கரைவதுமான
விளையாட்டில் நீ....

நான் நீராய் உன்னைக் கையில் ஏந்தி..
பிம்பமென அறியாமல்...

நீ நிஜம் போலிருக்கிறாய்..
காலை வரை..

பின் பகல் முழுதும் தேடுகிறேன்..
மழுங்கின இதயத்தோடு..

மாலைப் பொழுதின் மயக்கத்தில்
பின்னும் உண்மை உணராத உள்ளத்தோடு..

உணர்வுப் பெருக்கில்
உன் வரவுக்காகக் காத்து நான்..

வெள்ளி, 3 செப்டம்பர், 2010

திருமண (பண) அழைப்பு ”இதழ்..”



திருமண அழைப்பிதழ்கள் இரண்டு வந்தது..
இரண்டும் மிக அழகு.. இன்று ரஜனிகாந்தின் மகள் திருமணம் நடைபெறுவதாக முகப்புத்தகத்தில் ஏகப்பட்ட டாக்ஸ் ( TAGS ) ..
மூன்று மணமக்களுக்கும் வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.. நலமுடன்...
என் அன்புத்தங்கை புதுகைத்தென்றல் ஹைதையில் புதுமனை குடி புகுந்து இருப்பார்.. அவருக்கும் அவர் குடும்பத்தார்க்கும் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.. வாழ்க வளமுடன்.. நலமுடன்..

வியாழன், 2 செப்டம்பர், 2010

காலச்சுவடு-வீழ்தலின் நிழல்--ரிஷான் ஷெரீஃப்.. எனது பார்வையில்.




இந்த விமர்சனம் அமேஸானில் ”25 நூல்கள் - ஒரு பார்வை” என்ற தலைப்பில் புத்தகமாக்கம் பெற்றுள்ளது. அங்கே படிக்கலாம். நன்றி மக்காஸ்.

டிஸ்கி ..1 :- என்னுடைய இந்த விமர்சனம் இந்த மாதம் வல்லினம் இதழில் வெளிவந்துள்ளது..
டிஸ்கி 2 :- செப்டம்பர் 5ம் தேதி திண்ணையிலும் வந்து உள்ளது..
Related Posts Plugin for WordPress, Blogger...