எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
மகன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மகன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 23 ஜனவரி, 2011

4 கவிதைகள்.. திண்ணை.. கீற்றுவில்..

1. வற்றின கேள்விகள்..
**********************************

மீன் சுவாசக்குமிழ் வெடிக்கும்
குளத்தைப் பார்க்கும்போதெல்லாம்
குதிக்கட்டுமா என்பான்..

மாடியில் அறுந்த கொடிக்கயிறு பற்றி
கட்டைச்சுவர் எட்டிப்பார்க்கும் போதும்
கால் நீட்டி இதே கேள்வி..

புதன், 27 அக்டோபர், 2010

தேன் சிறகு முத்தம்...

தாலாட்டும் ரயில்
தாய் போலெனக்கு...

ஆடுகளும்., பாசி ஊசிகளும்
அசைபோட்டு நடந்தபடி..

கிரானைட் பெஞ்சுகளில்
சாய்ந்து அமர்ந்திருந்தோம்..
அணைத்துக் குலவியபடி..

போவோர் வருவோரெல்லாம்
புகை பொங்கப் பார்த்தபடி..

வெள்ளி, 15 ஜனவரி, 2010

விர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ரூரூரூம்ம்ம்ம்

சொல் பேச்சு கேட்பதில்லை ..
அறிவுரை கேட்பது விட ஐ பாட் கேட்பது ஆனந்தம்.
தினமும் பைக்கை உறுமச்செய்கிறான் ...
என் கட்டயத்தின் பேரில் ஹெல்மேட்...
விர்ர்ர்ர்ர்ர்ர்ர்ரூரூரூரூம்ம்ம்.................................................

ஞாயிறு, 27 டிசம்பர், 2009

சுருண்ட இறால்கள்

விரும்பியது கிடைக்காவிட்டால்
கிடைத்ததை விரும்பும்
உயர்மத்தியதரம்...

கணினியில் நிபுணனான
என் மகன் சிறுவயதில்
"டிங்குவைப்போல் ஒரு பிள்ளை"...

ஞாயிறு, 6 செப்டம்பர், 2009

விருந்து

பவள மல்லியும்,
மகிழம் பூக்களும்
இரவுச்சரத்தை வாசமேற்ற...

தலை கலைந்த பனையும்
நிலவு வருடும் தென்னையும்
சிற்பமாக...

குழந்தைகள் சிரிப்பை
அள்ளி விசிறியதாய்
நட்சத்திரங்களும்...

புதன், 12 ஆகஸ்ட், 2009

ஆனந்த அலைகள்

காலையில் கைகளில்
தவழ்ந்த எதிர்த்த வீட்டுக்
குழந்தையின் வாசம்
குளித்தபின்னும் என் மேல்...

பஞ்சுப் பொதியாயும்,
ரோஜாக் கூட்டமாயும்,
தண்ணென்ற குளுமையுடன்
சுகந்தமான சுமையாய்...
Related Posts Plugin for WordPress, Blogger...