ஒரு சஷ்டியப்த பூர்த்தி விழாவுக்காக கண்டனூர் சென்றிருந்தபோது எடுத்தது. இவ்வீட்டின் முன்புற முகப்பில் இந்த ஓவியங்கள் அழகூட்டின. கோயில்களில்தான் துவாரபாலகர்கள் பார்த்திருப்போம். ஆனால் இங்கே வீட்டைக் காவல் காக்கும் வீரர்களை ஓவியத்தில் பார்த்து ரசித்தேன். படைச் சிப்பாய் போல் இரு கைகளிலும் வாள்சுமந்து நிற்கின்றான் இவ்வீரன்.
அவன் எதிரில் இன்னொரு பட்டாலைப் பத்தியில் அதே போன்றதொரு வீரன். இடுப்பில் ஒரு சுருக்குப் பை போன்ற ஒன்றும் அதை இடுப்பைச் சுற்றிக் கட்டிய குஞ்சலமும் அழகு. போர்க்கோலத்தில் நீண்ட மீசையும் ரோமானியத் தொப்பியும் புஜங்களில் இந்திய மணிமாலைகளும் நெஞ்சில் ஆங்கிலேய சிப்பாய் போன்றதுமான ஒரு கலந்து கட்டிய காஸ்ட்யூம்.





















