பதினாறாம் அத்யாயம் ஆறாவது ஸ்லோகம்
குணை: உத்தமதாம் யாதி
ந உச்சை:
ஆஸன ஸம்ஸ்திதா: l
ப்ராஸாதசிகரஸ்த: அபி
காக: கிம் கருடாயதே ll
பொருள்:-
குணை: = ஒரு தீய தலைவன்
உத்தமதாம் யாதி = உத்தமனாக மற்றும்
ந உச்சை: = உயர்ந்தவனாகக் கருதப்படமாட்டான்
ஆஸன ஸம்ஸ்திதா: = அவன் எவ்வளவுதான் உயர்ந்த பதவியில் , உயர்ந்த
ஆசனத்தில் அமர்ந்திருந்தாலும்
ப்ராஸாதசிகரஸ்த: = கோட்டையின் கோபுரத்து உச்சியில் அமர்ந்திருந்தாலும்
அபி காக: = காகமானது
கிம் கருடாயதே = கருடனாக ஆகமுடியாது.
விளக்கம்:- கோட்டைக் கோபுரத்தின் உச்சியில் அமர்ந்திருந்தாலும்
காகமானது கருடனாக ஆகமுடியாது அதைப்போல ஒரு தீய தலைவன் உத்தமனாக மற்றும் உயர்ந்தவனாகக்
கருதப்படமாட்டான். அவன் எவ்வளவுதான் உயர்ந்த பதவியில் , உயர்ந்த ஆசனத்தில் அமர்ந்திருந்தாலும்
கூட.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)