எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
தேக்குமரச் சிற்பங்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தேக்குமரச் சிற்பங்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 19 நவம்பர், 2015

காரைக்குடி வீடுகளில் தேக்குமரச் சிற்பங்கள். TEAKWOOD CARVINGS OF CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 14

கோயில்களின் வாயில்களில் கல் யாழி, சிங்கம் யானை அண்டபேரண்டப் பட்சி  போன்ற உருவங்களைப் பார்த்திருப்பீர்கள். காரைக்குடி வீடுகளில் வீட்டின் நிலையின் பக்கவாட்டுச் சுவர்களிலும் ஓவியங்கள், மரச் சிற்பங்கள் செதுக்கப்பட்டு வர்ணமடிக்கப்பட்டிருக்கும்.

ஒரு வாயில் கதவின் இரு பக்கங்களிலும் 3 சிற்பங்கள் வீதம் 6 மற்றும் நிலை உச்சியில் கீழ் நோக்கியவாறு ஒன்று என ஏழு மரச்சிற்பங்கள். இது நிலைவாயிலில் செதுக்கப்பட்டுள்ளது. இதன் முன்புறம் சூரியப்பலகை என்னும் நிலையில் தெய்வத் திரு உருவங்கள் சமைக்கப்பட்டுள்ளன.

210. பொதுவாக காரைக்குடி நகரத்தார் சைவர்கள் - சிவ கோத்திரம் - (ஆனித்திருமஞ்சனம் ஆருத்ரா தரிசனம் முக்கியப் பண்டிகை - எல்லாப் பிரதோஷமும் ஸ்பெஷல் )  - என்றாலும் 211. முருகனுக்காக  கார்த்திகை விரதமிருந்து சோமவாரத்தை விசேஷமாகக் கொண்டாடுவது & தைப்பூசத்துக்குப் பழனி பாத யாத்திரை செல்வது என இருந்தாலும் , ஒரு சாரார் 212. பெருமாளை ( அரியக்குடி ) வணங்கிப் போற்றி புரட்டாசி மாதம் வீட்டில் ராமாயணம் படித்து ( பாராயணம் செய்து ) பட்டாபிஷேகம் நிகழ்த்தி மகிழ்வார்கள்.

ஆனால் இவ்வீட்டுக்குச் சொந்தக்காரர்கள் கௌமாரம் என்றாலும் வைஷ்ணவமும் வாயிலில் கோலோச்சுகிறது :) !!!

இது இடதுபக்கம் கீழிருக்கும் சிற்பம்.  அன்னம் போன்ற முக அமைப்பு தெரியுது ஆனா இது 213. அண்ட பேரண்டப் பட்சி. எவ்வளவு நுணுக்கம் பாருங்கள் சுற்றிலும் தாமரை அதன் பார்டராக பச்சை ரோஸ், வெளிர் ரோஸ், மஞ்சள் நீலக் கரைகள். அதன் பின் வார்னிஷ் என அடிக்கப்பட்டிருக்கு.

திங்கள், 2 நவம்பர், 2015

காரைக்குடி வீடுகளில் தேக்குமரச் சிற்பங்கள். -2.TEAKWOOD CARVINGS OF CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 12.

191. இது நிலைக்கதவில் உள்ள அமைப்பு. கைப்பிடி பாருங்கள். கோயில் கதவு போலக் கதவும் முரட்டுக் கைப்பிடியும். வார்ப்பிரும்பா பித்தளையா தெரியவில்லை. ஆனா  பாலிஷ் செய்தா மஞ்சள் கலரில் தங்க வண்ணத்தில் ( பெயிண்ட் :) ஜொலிக்கும். அதில் கோட்டைகளில் இருப்பது போன்ற கெட்டி குமிழ்கள். இது போன்ற அமைப்பை கோல்கொண்டா போன்ற கோட்டைகளில் கோட்டைக் கதவுகளில் பார்த்திருக்கிறேன். யானை வந்து முட்டினால் காயம் படும். அதுக்காக அங்கே அமைக்கப்பட்டிருக்கும். இங்கே வீடுகள் கோட்டை போல இருப்பதால் இம்மாதிரி அமைத்திருக்கலாம். ஆனால் இது முகப்பின் உள்ளே உள்ள நிலைக்கதவு. பட்டாலைக்குச் செல்லும் நிலைவாயில்.
இது வலது பக்க கொண்டி. சாவியின் துவாரமும் பெரிதாக இருக்கு. சாவிகள் எல்லாம் 192. கோயில் சாவிகள் போல இரண்டு கைகளாலும் பிடித்துத் திறக்கணும். ஊருக்கு வந்துட்டுப் போனா ரெண்டு நாளைக்கு நடு விரலும் மோதிர விரலும் சேருமிடம் வலிக்கும். கதவைத் திறந்து பூட்டி கன்னிப் போயிடும். :)  அந்தப் பித்தளை கொண்டி இருக்கும் இடத்தில் எத்தனை அடுக்காய் மரச் சதுரங்கள். அதன் கீழேயே எத்தனை அடுக்காய் சதுரங்கள். இவற்றை எப்படி சிதைவடையாமல் செதுக்கினார்கள் என ஆச்சர்யப்பட்டதுண்டு. !