எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
SATURDAY JOLLY CORNER லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
SATURDAY JOLLY CORNER லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 4 செப்டம்பர், 2021

சாட்டர்டே ஜாலிகார்னர். அன்னு செய்த அற்புத பாதுஷா !!!

எங்களுக்கெல்லாம்  செல்லமாக அன்னு எனப்படும்  அனிதாஶ்ரீகாந்த் வசிப்பது மஹாராஷ்டிரா டோம்பிவிலி ல. மழலை பள்ளி ஆசிரியராக இருக்காங்க. இரண்டு குழந்தைகளுக்கு( பையன் மூணாவது வருஷம் கம்ப்யூட்டர் இஞ்சினியர் படிக்கிறான்..பொண்ணு பத்தாவது படிக்கிறா) அம்மா. ஆனா எனர்ஜி லெவலில் டீனேஜ் யங்ஸ்டர். அதிரடி சரவெடி எழுத்துக்குச் சொந்தக்காரர்.  என் அன்புத் தங்கைகளில் ஒருவர். 


இவருக்குப் புத்தகங்கள் படிக்க ரொம்பப் பிடிக்கும். அதை விமர்சிக்கவும் பிடிக்கும். இவரை நான் கண்டடைந்ததே நுழைபுலம் என்ற நூல் விமர்சனக் குழுவில்தான். எல்லோருடனும் ஒத்திசைந்து செல்வார். அதே சமயம் செம குறும்புக்காரியும் கூட. 

சனி, 8 டிசம்பர், 2018

சாட்டர்டே ஜாலிகார்னர். செந்தில் நடேசனின் - வரிசை கொடுத்ததும் வங்கி அனுபவமும்.

ஏழெட்டு ஆண்டுகளாக முகநூலில் நண்பராயிருப்பவர் செந்தில் கே நடேசன். அவ்வப்போது குண்டச்சி தேவசேனாவுக்கு ( அனுஷ்கா) என்று குறிப்பிட்டுக் கவிதைகள் படைத்து சிரிக்க வைத்தவர். இதை காதலும் காதல் சார்ந்த இடமும் என்ற வலைப்பதிவில் பதிவேற்றி இருக்கிறார். !

இவரின் முகநூல் பக்கத்தில் நிறைய தன்னம்பிக்கை போஸ்டுகள் பார்த்திருக்கிறேன். அவரிடம் சாட்டர்டே ஜாலி கார்னருக்காக எழுதித்தரும்படிக் கேட்டிருந்தேன் . அவர் எழுதியது உங்களுக்காக இங்கே.

சாட்டர்டேன்னா இரண்டு. ஏன் பத்ரிக்கை எல்லாம் சண்டேன்னா இரண்டு பதிவு போடுறத ஆதரிக்கிறீங்கள்ல. அதுனாலதான் இன்னிக்கு விவிஎஸ் சாரோட ஜாயிண்ட் அக்கவுண்ட் பதிவும், செந்திலோட இந்தப் பதிவும். போஸ்ட் மழையில் என்ஜாய் பண்ணுங்க. :)

///பெயர்:- செந்தில் கே நடேசன் தந்தை: நடேசன் தாய்: அலமேலு ஆச்சி ஊர் :- சிலம்பவேளாங்காடு - பட்டுக்கோட்டை தொழில்: விவசாயம் தற்போதைய வசிப்பிடம்: தோஹா - கத்தார் தற்போதைய வேலை:- கொள்முதல் அலுவலர் பொழுதுபோக்கு: வாசித்தல், யோசித்தல் மற்றும் எழுதுதல் அவ்ளோதான்/////

என்னதான் கன்டினியூ ரீடிங் வர அளவுக்கு பெரிசு பெரிசா எழுதி பேஸ்புக்ல போஸ்ட் பண்ணாலும்....சார்ட்டர்டே போஸ்ட் க்கு எழுதுங்கன்னு ஆச்சி சொன்னப்போ.... ​ ஒன்னுமே தோணல... சார்ட்டர்டே போஸ்ட்ல ஏற்கெனவே போட்ட போஸ்ட்களை எல்லாம் பார்த்தப்போ , அங்கே ஏற்கெனவே பெரிய பெரிய ஜாம்பவான்களை எல்லாம் எழுத வச்சிருந்தாங்க ஆச்சி....

சனி, 14 ஜூலை, 2018

சாட்டர்டே ஜாலிகார்னர். வாசிப்பை நேசிக்கும் சரஸ்வதி காயத்ரி.

என் பெயர் சரஸ்வதி காயத்ரி வீட்டில் காயத்ரி .வெளியில்( official பெயர் சரஸ்வதி). சென்னை ,மடிப்பாக்கம்( அரசு) பள்ளியில் ஆசிரியை. 27 வருட பணி அனுபவம். சிறுவயதிலிருந்தே புத்தகங்கள் படிப்பதில் ஆர்வம் அதிகம். திருமணமானவுடன் குடும்பம்,குழந்தைகள் ,வேலை என வாசிப்பது நின்று இப்பொழுது ,2015ல் முகநூல் வந்தப்பிறகு இழந்த ஆர்வங்களையெல்லாம் மீட்டெடுத்திருக்கிறேன். அதில் வாசிப்பது தலையாயது.

சரஸ்வதி காயத்ரி என் முகநூல் தோழி. புத்தகங்களை வாசிப்பதிலும் அவற்றை மென் இறகால் தொடுவது போல மென்மையாக விமர்சிப்பதிலும் வித்தகி. சொல்லப்போனால் இவருக்கு கவிதைத் தொகுதிகள்தான் பிடிக்கும். வண்ணதாசனின் கவிதைகள் பிடிக்கும்.

இவர் தனது உறவினர்கள் பற்றி எழுதும் அனைத்தும் மனம் தொட்டவை. உறவுகளின் நெருக்கத்தையும் அன்பையும் வாசித்துக் கண்ணைக் கசியவிட்டவை. வீடு பற்றிய இவரது கவிதை என் உயிரைத் தொட்ட ஒன்று. வீடு என்பது சிதிலமானாலும் அதில் வாழ்ந்த அன்பு இன்னும் உயிர்த்துக்கொண்டிருக்கிறது இவரது எழுத்தில்.

இனி சாட்டர்டே ஜாலி கார்னருக்காக நான் இவரிடம் சிறுகதை, கவிதைகள் பற்றிய இவரது பார்வையைக் கேட்டிருந்தேன். அவர் கூறியதை இங்கே அளித்திருக்கிறேன்.

///பாவண்ணனின் " துங்கபத்திரை" படித்துக்கொண்டிருக்கிறேன்.
நந்தனார் படத்தில் தண்டபாணி தேசிகரின் குரலைப்பற்றி அவர் எழுதியிருப்பதை படித்தவுடன் படிப்பதை நிறுத்தி விட்டு பாடல்களை கேட்க ஆரம்பித்து விட்டேன்.துக்கப்பிரவாஹத்திலிருந்து மீள்வதற்கு படிக்க ஆரம்பித்து மீண்டுமொரு துக்கத்தில்..

சனி, 7 ஜூலை, 2018

சாட்டர்டே ஜாலி கார்னர். சுபஸ்ரீமோகனும் ஷி ஹுவாங்க்டி அளித்த சீனப்பெருஞ்சுவரும்.

தங்கை சுபஸ்ரீ மோஹன் முகநூலில்தான் அறிமுகம் என்றாலும்  எங்கள் நட்பு ஏழெட்டு வருடங்களுக்கு மேற்பட்டது. இவர் பெய்ஜிங்கில் வசித்து வருகிறார்.

சீனா அண்ணன் தேசம் என்ற நூலாசிரியர். இந்த நூலை இவர் சென்னையில் வெளியிட்ட நிகழ்வில் எங்கள் முகநூல் தோழமைகள் எல்லாம் கலந்து கொள்ள நான்மட்டும் கலந்து கொள்ள இயலவில்லையே என்ற வருத்தம் இருந்தது.

அதைத் தீர்க்க அவரிடம் பலமுறை இந்தச் சீனாவைப்பற்றி ஏதேனும்  சாட்டர்டே ஜாலி கார்னருக்காக எழுதிக்கொடுங்கள் என்று மன்றாடி  ( ! ) இருந்தேன். ஒருவழியாக டைம்கிடைத்து என் ஞாபகம் வந்து இன்று எழுதி அனுப்பினார் சுடச் சுட அந்த சீனப்பெருஞ்சுவர் இடுகை உங்களுக்காக இங்கே. :)

அன்பும் நன்றியும் தங்காச்சி :)

சனி, 14 அக்டோபர், 2017

சாட்டர்டே ஜாலி கார்னர். ராதிகா யோகேந்தரின் புத்தகப் பையோடு மறைந்த பாட்டி

என் அன்பிற்குரிய (முகநூல் ) தங்கை ராதிகா யோகேந்தர். அசப்பில் என் இன்னொரு தங்கை லல்லி மாதிரியே இருப்பார். குறும்பிலும் கூட. நிறைய வாசிப்பார். தினம் போடும் ஸ்டேட்டஸ்களில் நகைச்சுவை அள்ளும். அவ்வப்போது கணவரிடம் வாங்கிய பல்புகளையும் பகிர்ந்து சிரிக்க வைப்பார். மொத்தத்தில் உற்சாகப் பந்து. அன்பின் உருவம்.

இவரிடம் நான் சாட்டர்டே ஜாலிகார்னருக்காக அவங்க பள்ளிபருவ நினைவுகள் அல்லது கார் ஓட்ட கற்றுக்கொண்ட அனுபவங்கள் பத்திக்  கேட்டிருந்தேன். இந்த வாரம் கேட்டதுக்கு உடனே வரமளித்து விட்டார்ப்பா. அதிலும் புதன் இரவு கேட்டதுக்கு வியாழன் இரவே அனுப்பி விட்டார். நிறைய பேரிடம் கேட்டு எல்லாம் பெண்டிங்கில் இருக்கு. ( அவங்கள எல்லாம் பின்னாடி கவனிச்சுக்குறேன். கிர்ர்ர்ர் ) :) தாங்க்ஸ் டா ராதி உடனே அனுப்பிச்சதுக்கு
.


வணக்கம் நான் ராதிகா யோகேந்தர் ..நான் கோவைல வசிக்கிறேன் ..பிறப்பால் மலையாளி ஆனால் தமிழ் மேல் உள்ள ஆர்வத்துல தமிழ் லிட்ரேச்சர் முடிச்சு இருக்கேன்..அப்புறம் முகநூல், வாட்ஸ் ஆப்,இன்ஸ்டாகிராம் இதுல எல்லாம் களமாடிட்டு ,ஸ்முல் அப்டிங்கிற ஆப்ல பாட்டும் பாடிட்டே, வீட்டையும் கவனிச்சு,கணவர், குழந்தையை நல்லா பாத்துக்கிற ஒரு நல்ல குடும்பத்தலைவி..கணவர் அரசு பள்ளி ஆசிரியர், ஒரே மகள் சின்ன அளவான மகிழ்ச்சியான குடும்பம்.

சனி, 7 அக்டோபர், 2017

சாட்டர்டே ஜாலி கார்னர் - இப்னு ஹம்துனின் கடவுள் தேடலும் வாழ்க்கைப் பயணமும்.


முகநூல் சகோ ஃபக்ருதீன் இப்னு ஹம்துன். நான்கைந்து ஆண்டுகளாகத் தெரியும். நேரில் பார்த்ததில்லை. ஆனால் கல்யாண் நினைவுக்கவிதைப் போட்டியில் - நாங்கள் -  நான் இருமுறை பெற்ற பரிசுப் பணத்தை இந்தியா வந்திருந்தபோது மெயில்முலமாகக் கேட்டு எங்கள் வங்கி அக்கவுண்டில் செலுத்தியவர். 

இவரது வெண்பாம்கள் பிரசித்தம். அதுபோல் இவர் வல்லமை இணையம் வைத்த ஒரு கடிதப் போட்டிக்கு எழுதிப் பரிசும் பெற்றிருக்கிறார். எழுத்தாற்றல் மிக்க ஆசாத் ஜி, ஜமாலன், ஷேக் சகோ , கனவுப் பிரியன் போன்ற வளைகுடா வாழ் தமிழர்களில் இவரும் ஒருவர்.

சனி, 30 செப்டம்பர், 2017

சாட்டர்டே ஜாலி கார்னர். :- சஷிகா செய்த முதல் ரசம்


சஷிகா என்ற பெயரில் வலைப்பூவில் எழுதிவரும் எங்கள் அன்பு தங்கை மேனகா சத்யா மிக ருசியாக வகைவகையாக சமைப்பார். அது மட்டுமல்ல செக்ஷன் வாரியாகப் பிரித்து தொகுத்திருப்பார். தினம் ஒன்று ஜொள்ளு விட வைக்கும் அளவு இருக்கும். எந்த உணவுக்கு எது காம்பினேஷன் என்றும் கரெக்டாக ஜோடி சேர்த்து காம்போ வழங்குவதில் அவருக்கு இணை அவரே . 

சஷிகா என்ற பேரின் பின்னணியிலும் ஒரு தகவல் இருக்கு. மேனகாவின் கணவர் சத்யா. மகள் பெயர் ஷிவானி. சத்யாவிலிருந்து "ச " ஷிவானியிலிருந்து "ஷி" மேனகாவிலிருந்து "கா" என எடுத்து இணைத்து "சஷிகா" ஆகிவிட்டார்.   

அவரிடம் சாட்டர்டே போஸ்ட்டுக்காகக் கேட்டபோது அவர் முதல் முதலில் சமையல் செய்யும்போது என்னென்ன சொதப்பல்கள் செய்தார் எனக் கேட்டிருந்தேன். அதற்கு அவர் இதை அனுப்பினார். இரு குழந்தைகளுடன் வலைப்பூவிலும் அவர் எழுதிக் கொண்டிருப்பது பிரயத்தனமான செயல். அதற்காக அவருக்கு என் அன்பும் வாழ்த்தும்.

இனி அவர் சொன்னது இங்கே.
என்னை பற்றி

என் பெயர் மேனகா சத்யா...சஷிகா என்னும் வலைப்பூவில் சமையல் குறிப்புகளை எழுதி வருகிறேன்.சொந்த ஊர் புதுச்சேரி,இரண்டு குழந்தைகளுடன் வசிப்பது பிரான்சில்...

அன்றாடம் செய்யும் சமையல் குறிப்புகளையே வலைப்பூவில் விளக்கபடங்களுடன் எழுதுகிறேன்.

தற்போது ஆங்கில வலைப்பூவிலும் எழுதி வருகிறேன்..

சனி, 24 ஜூன், 2017

சாட்டர்டே ஜாலி கார்னர் - விமானங்களில் ”ட்ரெஸ்கோட்” பற்றி மனோ சுவாமிநாதன்.



விமானங்களில் ”ட்ரெஸ்கோட்” பற்றி மனோ சுவாமிநாதன்.



மனோ மேம் மிகப்பெரும் பதிவர். இவரது மனநலம் உடல் நலம் குறித்த இடுகைகள் எனக்குப் பிடிக்கும். இவரது உணவு வலைத்தளம் வெகு ஆண்டுகளுக்கு முன்பே பதிமூன்று லட்சம் பார்வைகளைக் கொண்டு என்னை மிரட்டியது ! 

தஞ்சையிலும் துபாயிலுமாக வசித்து வரும் இவர்களிடம் சாட்டர்டே ஜாலிகார்னருக்காகக் கேட்டபோது துபாய் பற்றியும் அங்கே செல்வதற்கு நாற்பதாண்டுகளுக்கு முன் ஃப்ளைட் நடைமுறைகள் பற்றியும் சுவாரசியமாகச் சொல்லி இருந்தார். இப்ப பச்சைத் தண்ணீர்னா கூட எகனாமிக் ஃப்ளைட்டுகளில் காசு கொடுத்து வாங்கித்தான் குடிக்கணும்.

காற்றுப் பேருந்து என்ற பதம் இப்ப ரொம்பப் பொருத்தம். ஏன்னா மும்பை – ஹைதைக்கு நான் பயணம் செய்த இண்டிகோவில் பஸ் மாதிரி ஏறி உக்கார்ந்து வறுத்த கடலை எல்லாம் சாப்பிட்டுட்டு முன்சீட்டு கவர்ல காலிபேப்பரைச் சொருகி வைச்சாங்க ஒரு மராத்தி குடும்பம் ! 

சனி, 20 மே, 2017

சாட்டர்டே ஜாலி கார்னர். துளசி கோபால் நடத்திய ஒரு கிவி இந்தியன் கல்யாணம் !

 துளசி கோபால் . கிட்டத்தட்ட 2009 இல் இருந்து என் தோழி. வேறென்ன புதுசா சொல்ல. :)

இவள் புதியவள், சூரியக் கதிர், லேடீஸ் ஸ்பெஷல் ஆகியவற்றில் எழுதிக்கிட்டு இருந்தோம். துளசிக்கும் கோபாலுக்கும் நடந்த சஷ்டியப்த பூர்த்திக்குத்தான் போக முடியலைன்னா அவங்க பொண்ணு கல்யாணத்துக்கும் போக முடில. ஏன்னா அது கிவில இல்ல நடந்துச்சு :)



(துளசி பொண்ணு கல்யாணம்னா நம்ம பொண்ணு கல்யாணம் மாதிரிதானே. அதான் ஒரு நாள் பூரா கொண்டாடலாம்னு மிட்நைட்ல போஸ்ட் போட்டுருக்கேன். வாங்க அவங்க கூடவே போய் கொண்டாடுவோம். )


சரி அந்த சுவாரசியமான அனுபவங்களை நாம படிச்சாவது அனுபவிப்போம்னு எழுதித்தரச் சொன்னேன். உடனே அவங்க வாஷிங்க்டனில் திருமணம் மாதிரி எழுதி அனுப்பிட்டாங்க. அவ்ளோ பெரிசு மட்டுமில்ல . செம ஹியூமரும் கூட. நான் சிரிச்சு ரசிச்சத. நீங்களும் ரசிங்க :)



/////அன்புள்ள தேனே,

நலமா?

இப்பதான் எழுத உக்கார்ந்தேன். துளசியின் வழக்கபடி மஹாபாரதமாப் போகுது.

இதுவரை எழுதியது இப்போ இங்கே அனுப்பறேன். பார்த்துட்டுச் சொல்லுங்க. ஓக்கேன்னா எழுதி முடிச்சுடறேன்!!!!!!!!
================================================

 கல்யாணம்...  ஹஹஹ  கல்யாணம்

மகளும் நண்பனும் கல்யாணம் கட்டிக்க முடிவு செஞ்சுட்டாங்க. என்ன மகளே.... உன் கல்யாண நிச்சயம் ஆனதைக் கொண்டாட வேணாமா? 

அதெல்லாம் எதுக்கு?  நாங்க கல்யாணத்துக்குப் பணம் சேர்க்கவேணாமா?

ஓஹ்.... அப்படியா?  எங்க இந்திய வழக்கப்படி கல்யாண நிச்சயதார்த்தமே ஒரு சின்னச் சடங்கா செய்றதுதான் வழக்கம்.  இங்கெதான் அப்படி ஒன்னுமில்லையே :-)  ஒன்னு வேணாச் செய்யலாம்.... உங்க கல்யாணம் கட்டிக்கப்போகும் முடிவை நம்ம நண்பர்களுக்கு அறிவிச்சு ஒரு சின்ன பார்ட்டி வச்சுக்கலாமா? 

மகளும் வரப்போற மாப்பிள்ளையுமாக் கொஞ்சம் யோசனையில் இருந்தாங்க. அப்பா அம்மா தரும்  பார்ட்டின்னு வச்சுக்குங்களேன்!  
சரின்னு முடிவாச்சு.  ஏற்பாடுகளையெல்லாம் மகளையே செய்யச் சொல்லியாச்சு. பொண்ணு வீட்டில் இருந்து அஞ்சு பேர், மாப்பிள்ளை வீட்டில் இருந்து ஒரு பத்து பேர்,  பொண்ணுக்கும் மாப்பிள்ளைக்குமான  நண்பர்கள் கூட்டம் இப்படி விழா நடந்தது மே மாதம் 2016 ஆம் ஆண்டு. 

மகளும் வரப்போகும் மருமகனுமா கேக் வெட்டி ஒரு கொண்டாட்டம். என்ன கேக்காம்?  வெல்வெட் கேக்!  ஆஹா.... அப்டிப்போடு! 

சனி, 13 மே, 2017

சாட்டர்டே ஜாலி கார்னர் . - கோமதி ஜெயத்தின் தோழிகளுடன் ஒரு கேரள சுற்றுலா.

 திருமதி கோமதி ஜெயம், காரைக்குடி ராமனாதன் செட்டியார் நகராட்சிப் பள்ளியில் ஆசிரியையாகப் பணிபுரிகிறார். இவர் தன் வகுப்பு மாணவர்கள் சிறப்பாகப் பயின்றமைக்காக ஒவ்வொருவருக்கும் நன்னெறிக் கதைகள் உள்ள புத்தகங்கள் பரிசளித்தார். முழுப்பரிட்சை விடுமுறைநாளில் அவற்றைப் படிக்கக் கொடுத்தது வெகு பொருத்தம். இந்நூல்களை வழங்க அவர் என்னை அழைத்திருந்தார். அன்றில் இருந்து எனது நட்பு வட்டத்துக்குள் வந்துவிட்டார்.

அவரிடம் சாட்டர்டே ஜாலி கார்னருக்கு எழுதித் தரும்படிக் கேட்டிருந்தேன். கோடைக்காலத்துக்கு ஏற்றாற்போல ஒரு சுற்றுலாவைப் பகிர்ந்துள்ளார். வாசித்துப் பாருங்கள்.

சனி, 6 மே, 2017

சாட்டர்டே ஜாலி கார்னர். இராகவன் நைஜீரியாவின் முதல் வெளிநாட்டுப் பயணம்

 இன்னிக்கு நான் எவ்ளோ சந்தோஷமா இருக்கேன்னு உங்களுக்கு எல்லாம் தெரியாது. அவ்ளோ சந்தோஷம். ஏன்னா எனது மதிப்புக்கும் மரியாதைக்கும் அன்புக்கும் உரிய நண்பர்  திரு இராகவன் ( எல்லாருக்கும் இராகவன் அல்லது ராகவன் ஸ்ரீனிவாசா. எங்களுக்கு இன்றும் இராகவன் நைஜீரியாதான் ) அவர்கள் இந்த நூற்றியோராவது சாட்டர்டே ஜாலி கார்னருக்கு எழுதி இருக்கிறார்.

வலைத்தளம் ஆரம்பித்த புதிதில் பூக்களுக்கான கவிதைகள் எழுதிய போது ( ஒரே நாளில் 3 போஸ்ட் ) போட்டாலும் எங்கிருந்தோ வந்து கலகலப்பான கமெண்ட் போட்டு உற்சாகப்படுத்திவிடுவார்.  அவர் கொடுத்த பேரூக்கம் காரணமாகவே 57 பூக்கள் கவிதைகளாக வெளிவந்து தொகுப்பாகவும் ஆகி உள்ளன. :) நன்றி ராகவன் சார்.

சனி, 29 ஏப்ரல், 2017

சாட்டர்டே ஜாலி கார்னர். ஜெயந்திரமணியின் எல்கேஜி அட்மிஷன் !


என் அன்பிற்கினிய தோழி ஜெயந்திரமணி மிக அருமையாக எழுதுவார். சிறுகதைகள் சொல்லும் விதம் தெளிவாகவும் அதன் மையக்கருத்து நச்சென்றும் இருக்கும். பொதுவாக நான் படித்த வரையில் குழந்தைகளின் நலனை மையப்படுத்தி இவர் எழுதிய ஆழ்துளைக்குழாய் சிறுகதை ஒன்றும் இக்கதையும் இவர் தொடர்ந்து குழந்தைகள் பற்றிய ( பெற்றோர்களுக்கான ) விழிப்புணர்வுச் சிறுகதைகள் படைக்கவேண்டும் என்ற என் எண்ணத்தை அதிகமாக்குகிறது. அதையே அவரிடம் கோரிக்கையாகச் சமர்ப்பிக்கிறேன் :)

தொடர்ந்து எழுதுங்கள் ஜெயந்தி. உங்கள் வாசகியாக நானும் தொடர்கிறேன். :)

சாட்டர்டே போஸ்டுக்காக இவரிடம் கேட்ட போது இச்சிறுகதையை அனுப்பி இருந்தார். பள்ளி அட்மிஷனில்தான் எத்தனை வகைக் கதை படைக்கலாம். இது இன்னொரு கோணம். படித்து ரசிங்க. யோசிங்க. :)



/////“நான் என்றால் அது அவரும் நானும்,

அவரென்றால் அது நானும் அவரும்”

சுய விவரம்

நான் தாங்க ஜெயந்தி ரமணி. பிறந்தது முதல் இன்று வரை (62

ஆண்டுகளாக) சிங்காரச் சென்னை வாசி. உங்களுக்கு ஒரு ரகசியம்

சொல்லட்டுமா? முழுநேர அக்மார்க் சென்னைவாசியாக இருந்தும் நான்

தண்ணீருக்கு கஷ்டப்பட்டதே இல்லை. இருங்க இருங்க சென்னையில

தான் தெருவுக்கு நாலு கடை இருக்கே எப்படி கஷ்டம் வரும்ன்னு நீங்க

யோசிக்கறது புரியறது. ஆனா நான் சொன்ன தண்ணீர் H2O. இப்ப

புரிஞ்சுதா.

சனி, 15 ஏப்ரல், 2017

சாட்டர்டே ஜாலி கார்னர். அல்வாவும் ரசகுல்லாவும் பின்னே நானும் - ருக்கு ஜெய்.

என் முகநூல் தோழி/தங்கை ருக்கு ஜெய். ஆசிரியையாகப் பணிபுரிகிறார். அவருடைய பதிவுகளை அவ்வப்போது படித்து ரசிப்பேன். மிக அருமையான எழுத்துக்குச் சொந்தக்காரர். மாணவர்களுடனான நிகழ்வுகளை யதார்த்தமாக விவரித்திருப்பார். மனதைத் தொடும் எழுத்துக்கள். அவருடைய தேன்மொழி எனக்கு நெருக்கமானவள். :) அவரிடம் எனது வலைத்தளத்தின் சாட்டர்டே ஜாலிகார்னருக்காக எழுதித்தரக் கேட்டிருந்தேன்.

என் வலைப்பதிவுக்காக உங்களுக்குப் பிடித்த சப்ஜெக்டில் ஏதும் எழுதித்தாருங்கள் ருக்கு.

////தங்கள் அன்பழைப்பிற்கு நன்றி மேம்.


நேரம் கிடைக்கும் போது படித்துப்பார்க்கிறேன்.இதுவரை blog எதுவும் படித்ததில்லை..முதலில் உங்கள் வலைப் பக்கத்தைப் படித்துத் தொடங்குகிறேன்.


என்னைப் பற்றி... என் பெயர் ருக்மணி .முகநூலில் Rukujey. உங்கள் பக்கத்துவீட்டுப் பெண் போல் மிக மிக சாதாரணப் பெண். அன்பான கணவர் ,இரு ஆண் குழந்தைகள் கொண்ட ஆனந்தம் விளையாடும் வீடு என்னுடையது. அரசுத் துவக்கப்பள்ளியில் ஆசிரியை பணி.26 ஆண்டுகள் முடிந்து 27 ஆம் ஆண்டாக கல்விப்பணி தொடர்ந்து கொண்டு இருக்கிறது மனநிறைவோடு.

சனி, 1 ஏப்ரல், 2017

சாட்டர்டே ஜாலி கார்னர். கலையரசியின் தட்டச்சு நினைவுகள்.

ஞா. கலையரசி.  இவர் எனக்கு வலைப்பூவின் மூலம்தான் அறிமுகம். எனது அன்னபட்சியைப் படித்து மிகச் சிறப்பாக அறிமுகம் செய்திருந்தார். அட நம் கவிதை நூலுக்கு எங்கிருந்தோ ஒரு அங்கீகாரம் அதுவும் ஒரு வலைப்பதிவரிடமிருந்து என ஆச்சர்யமாக இருந்தது. மிக அருமையான விமர்சகர்.

இவரது சொந்த ஊர் காரைக்கால். புதுச்சேரியில் கணவருடன் வசிக்கிறார். இரு குழந்தைகள். இருவருக்கும் மணமாகிவிட்டது.  கலையரசி ஸ்டேட்பாங்கில் சீனியர் ஸ்பெஷல் அசிஸ்டென்ட் ஆகப் பணிபுரிகிறார். வாசிப்பும், எழுத்தும் இவருக்கு மிகவும் பிடித்தமானவை; இரண்டுக்கும் ஆசான் இவரது தந்தையே எனக் கூறுவார். . இவரது தந்தை சொ. ஞானசம்பந்தன் அவர்கள் இலக்கியச்சாரல் எனும் வலைப்பூவை நடத்துகிறார்கள்.  நம்ம கீத்ஸ் என்னும் கீதமஞ்சரி கீதா மதிவாணன் இவரின் சொந்த தம்பி மனைவி. அவங்களும் சகலகலாவல்லி :)
 
தன்னைப் பற்றிக்கூறும்போது ஞா கலையரசி அவர்கள் “ உள்ளத்தனையது உயர்வு என்பது என் அசைக்க முடியா நம்பிக்கை. இயற்கையில் மிகுந்த ஈடுபாடு உண்டு. ” என்கிறார். அருமையான நம்பிக்கையும் ஈடுபாடும். வாழ்த்துகள் கலை. 

என் ப்லாகுக்காக சாட்டர்டே போஸ்ட் ஏதும் எழுதித்தாங்க என்று கேட்டிருந்தேன். அதற்கு அவர் எழுதியது இங்கே.


///தட்டச்சு நினைவலைகள்


கணிணி  புழக்கத்துக்கு வரத் துவங்கிய பிறகு, தட்டச்சு இயந்திரத்தின் பயன்பாடு வெகுவாகக் குறைந்ததுஅக்காலத்தில், அலுவலகப் பணிகளில், இந்த இயந்திரம் பிடித்திருந்த முக்கிய இடத்தை, இப்போது  கணிணி பிடித்து விட்டது. 

இதன் காரணமாக, மும்பையில் 1900 ஆண்டு முதல் இயங்கி வந்த  ’கோத்ரெஜ் அண்ட் பாய்ஸ் கம்பெனி,  2011 ஆம் ஆண்டு மூடப்பட்டது.

சனி, 11 மார்ச், 2017

சாட்டர்டே ஜாலி கார்னர். தேனு சந்தித்த அழகு நிலைய அட்ராசிட்டீஸ்.

புலிக்குப் பிறந்தது பூனையாகுமா. இல்ல தெரியாமத்தான் கேக்குறேன். மன்னை சதிரா அவங்களோட பொண்ணு தேனுவோட எழுத்தும் கூட நகைச்சுவைல பட்டயக் கிளப்புது. 

தேனு என்னோட பள்ளித்தோழி. முகநூல்ல என் தோழி அவங்க அம்மா சரஸ்வதி ராஜேந்திரன் அவங்க . ஃப்ரெண்டானதோட மட்டுமிலாம நான் அவளோட செட் அப்பிடீங்கிறதையும் கண்டும் பிடிச்சிட்டாங்க. அவங்க பெரிய எழுத்தாளரா இருந்தும் நம்ம ப்லாக் & எழுத்தைப் படிச்சி நம்மையும் அவ்வப்போது ஊக்கப்படுத்தித் தட்டிக் கொடுப்பாங்க. 

அவங்ககிட்ட சாட்டர்டே போஸ்ட் எழுதி வாங்கியாச்சு. அடுத்து யார்கிட்ட வாங்கலாம்னு இன்பாக்ஸ்ல தொடர்ந்து சாட்டர்டே போஸ்ட் அனுப்பவும்னு கெஞ்சிக் கேட்டு ( ஹிஹி )  காப்பி பேஸ்ட் பண்ணிட்டு இருந்துட்டு மறந்துட்டேன். அதுல சிலர் பல நாள் கழிச்சுப் பார்த்துட்டு ரிப்ளை பண்ணாங்க. அதிர்ச்சி & ஆனந்த வைத்தியம் மாதிரி என் தோழி தேனுகிட்டேருந்து போனு வேற.

’டீ நீ யாரோன்னு நினைச்சு என்கிட்ட கேட்டியான்னு. இல்லடி நீதான்னு தெரிஞ்சே உன்கிட்ட கேட்டேன். ஏதாவது எழுதி அனுப்புன்னு ஒரே கெஞ்சா கெஞ்ச அவ எனக்கென்னடி தெரியும்னு மிஞ்ச. ப்ளீஸ் ப்ளீஸ் எனக்காக என் ப்லாகுக்காகன்னு ஐஸப் போட்டு யம்மாடி. ஒரு வழியா வந்தாச்சு ‘

அவகிட்டேருந்து ரிப்ளை வந்ததும் செம சுறுசுறுப்பாயிட்டேன். அவ அனுப்புனத பலமுறை படிச்சு ரசிச்சி சிரிச்சிட்டே இருக்கேன். அந்த இன்பத்தை நீங்களும் அடைய போஸ்ட் பண்ணிருக்கேன். 

“யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் “. இதப் போயி நல்லால்லைன்னு சொன்னீங்களாமே சரஸ் மா. போங்க உங்களுக்கு வயசாயிட்டு. :) ஹாஹா. 

சரி இனி தேனு வெர்ஸஸ் தேனுவுக்காக எழுதியது.


////நான் பாட்டுக்கும் ஒரு மூலையிலே ஊர் பேர் தெரியாம
நானுண்டு என் வேலையுண்டுனு
இருந்தா...

சனி, 18 பிப்ரவரி, 2017

சாட்டர்டே ஜாலி கார்னர் - ஆகாயகாதலன் தேவராஜன் ஷண்முகம். :)

முகநூல் நண்பர் தேவராஜன். எம்.ஏ. தமிழ்இலக்கியம் பயின்றவர். . பூர்வீகம் நாகப்பட்டினம் மாவட்டம்- திருக்கண்ணபுரம். வசிப்பது காஞ்சீபுரம். 17 ஆண்டுகள் பத்திரிகைப்பணி. 500க்கும் அதிகமான கட்டுரைகள், பேட்டிகள், சிறுகதைகள், கவிதைகள் பிரசுரம். அச்சு புத்தகங்கள் 10 மற்றும் மின்புத்தகங்கள் 10 வெளியீடு என்று பிரமிக்க வைக்கிறார். 

தினமலரில் ஃபேஸ்புக் பிரபலங்களின் கதைகள் வெளிவரக் காரணமாயிருந்தவர். ( அதுல நாமளும் ஒரு ஆளுல்லா :) 

இடையறாத பத்ரிக்கை & எழுத்துப் பணியில் ஈடுபட்டிருக்கும் அவரிடம் சாட்டர்டே ஜாலிகார்னருக்காக ஏதும் எழுதித்தரும்படிக் கேட்டிருந்தேன். அவர் வித்யாசமாக ஆகாயம் பத்தி எழுதி இருந்தார் !. 

நானும் இதுபோல் எல்லாம் ஆகாயத்தை ரசித்திருக்கிறேன் என்பது ஆச்சர்யம். நீங்களும் கூட ரசித்திருக்கலாம். கொஞ்சம் ஆகாய உலா போய் வருவோம் வாருங்கள்.  உங்கள் பார்வைக்குப் புலப்படும் கொஞ்சம் ஆகாயம் . :)

  
///நான் ஆகாய காதலன் ! 

மாதத்தில் ஒரு நாளாவது நீங்கள் பவுர்ணமி வானத்தை ரசித்திருக்கிறீர்களா? தன்னந்தனியே பொன்மாலை நேரங்களில் நடந்து செல்லும்போது அன்னார்ந்து வானம் பார்த்ததுண்டா? இதற்கு ஆமெனில் உங்களுக்கு இந்தக்கட்டுரை சுவாரஸ்யம் தரும். இல்லை என்பவர்கள் படிப்பதில் நேரம் வீணடிக்க வேண்டாம்! 

பகல் ஆண். இரவு பெண். பூமி பெண். வானம் ஆண். அஃறிணைக்கு பால் பிரிப்பது சரியா என்றெல்லாம் யோசிக்காதீர்கள். எனக்கும் வானத்துக்குமான புரிதலில் இவை எல்லாம் சரியே. வானம் எனக்கு இளங்காலையில் தோழன். மதிய நேரத்தில் ஆசிரியன். மாலையில் காதலன். இரவில் தாய். நானும் வானமும் எந்த பருவத்திலும் பிரிந்ததே இல்லை. என் துயரத்திலும் சந்தோஷத்திலும் வெற்றியிலும் தோல்வியிலும் வானத்தைப் பார்ப்பேன். சிலநிமிடங்களில் நான் ஜென் நிலைக்கு உறைந்துவிடுவேன். 

சனி, 29 அக்டோபர், 2016

சாட்டர்டே போஸ்ட். கரந்தை ஜெயக்குமாரின் உயிர்காத்த நண்பன்.



எனது வலைப்பூ சகோதரர் கரந்தை ஜெயக்குமார். இவர் ஆசிரியப் பணியில் இருப்பதாலோ என்னவோ இவரின் பதிவுகள் நச்சென்று இருக்கும். மிகத் தெளிவான கருத்துகள் கொண்டதாக மிளிரும்.  வெற்றிவேல் முருகன் பேசுகிறேன் என்று தற்போது ஒரு தொடர் வெளியிட்டு வருகிறார். பரவலாக வலைப்பூ எழுத்தாளர்கள் பேராதரவைப் பெற்றவர். எட்டு நூல்களை வெளியிட்டிருக்கிறார். எழுத்து அருமையாக இருந்தால் யாவரையும் ஈர்க்கும்தானே. :) -- ( தேனம்மை நோ பொறாமை ப்ளீஸ் - எனக்கு நானே சொல்லிக்கிட்டேன் :) 

இவரிடம் சாட்டர்டே ஜாலிகார்னருக்காக எழுதித் தரும்படி கேட்டேன். அவரது பதிவு அதிர வைத்தாலும் படிப்பினை கொடுத்தது. எல்லாம் தெரிந்தாலும் ஏதோ ஒரு தருணத்தில் நாம் செயலற்று இருக்கிறோம் என்பதை அறைந்தது.  இனி அவரைப் பற்றியும் அவரது எதிர்நீச்சல் பற்றியும் படியுங்கள்.

இது அவரைப் பற்றி அவர் வலைப்பூவில் கொடுத்திருக்கும் சுயவிபரம்.


///கரந்தைத் தமிழ்ச் சங்கக் கல்வி நிலையங்களுள் ஒன்றான, உமாமகேசுர மேனிலைப் பள்ளியில் பட்டதாரி நிலை கணித ஆசிரியராகப் பணியாற்றி வருகின்றேன்.கரந்தை வரலாற்றில் சில செப்பேடுகள்,விழுதுகளைத் தேடி வேர்களின் பயணம், கணித மேதை சீனிவாச இராமானுஜன்,கரந்தை ஜெயக்குமார் வலைப்பூக்கள், கரந்தை மாமனிதர்கள், வித்தகர்கள், உமாமகேசுவரம்,இராமநாதம் முதலிய எட்டு நூல்கள் எழுதி வெளியிட்டுள்ளேன். கரந்தைத் தமிழ்ச் சங்கத் திங்களிதழாகிய தமிழ்ப் பொழில் இதழின் பதிப்பாசிரியர் குழு உறுப்பினர்.கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் இராதாகிருட்டின விருதினையும் பெற்றுள்ளேன்.///

 வடவாறு :-
************

முப்பத்து ஐந்து ஆண்டுகளுக்கு முன் ஓர் விடுமுறை நாள்,தஞ்சாவூர், கரந்தை, வடவாற்றின் பாலத்தின், அகன்ற கைப் பிடிச்சுவற்றில் ஏறி நிற்கின்றேன்.

சனி, 1 அக்டோபர், 2016

சாட்டர்டே ஜாலி கார்னர் :- கல்யாண்குமாரின் வீக் எண்டும் ”வேல்” வார்த்தையும்.



எனது முகநூல் தோழன் கல்யாண். கல்யாண்குமார். அவ்வப்போது போடும் டைரிக் கிறுக்கல்கள் கவிதைகளைப் படித்து ஒரு கமெண்ட் போடுவார். ஒரு நாள் பரிட்சை பூதம் என்ற கவிதை போட்ட போது நீங்க
எங்கேயோ இருக்க வேண்டிய ஆள் என்று எழுதி இருந்தார்
 
(*ஒரு பூதம்
என்னைப் பயம் காட்டுகிறது.

*கேள்விகளென்னும்
பற்களை நீட்டிக்
காகிதங்களில்
தன்முகம் தனைப் புகுத்தி
வினாக்குறிகளாய்
நகங்களை விரித்து
ஒரு தேர்வுப் பூதம்
என்னை வேர்க்க வைக்கிறது.

*கேள்விப் புழுக்களைத்
தூண்டிலில் மாட்டி
மீனாய் என்னைச் சிக்கவைக்கும்.
கேள்விக் கருவாடு பூட்டி
வண்டியில் நாயாய்
என்னை ஓட்டும்
ஒரு பரிட்சைப் பூதம்
என்னைப் பயம் காட்டுகிறது. )

இவரது முகநூல் பக்கத்தில் நான் படித்து இப்படியும் உண்டுமா என யோசித்த வாசகம் “விழுவதும் எழுவதும்  தொடர்கதையாய் இருக்கையில் விலாசம் சொல்வது வெட்கக் கேடு தானே. ” 87 ஆம் வருடத்தில் இருந்து திரைப்பட இயக்குநராகப் பணியாற்றி வருகிறார்.  
 
எனக்கு ரொம்பப் பிடித்த இந்தப் படங்களை இவர் பக்கத்தில் பார்த்ததும் மகிழ்ச்சியாய் இருந்தது. ”அயன் மேன், பேட்மேன், ஸ்பைடர் மேன், மென் இன் ப்ளாக், த டார்க் நைட், மம்மி, ஷ்ரெக், ஹெல்பாய், எக்ஸ் மேன், பைரேட்ஸ் ஆஃப் கரீபியன், ட்ரான்ஸ்போர்ட்டர்ஸ், ட்ரான்ஸ்ஃபார்மர்ஸ்,  நைட் அட் த ம்யூசியம், கராத்தே கிட், குங்ஃபூ பாண்டா, டெர்மினேட்டர், கோஸ்ட் ரைடர், அவதார், டைட்டானிக்,

இவர் டைரக்டரா இருப்பதால இவரிடம் நமது சாட்டர்டே ஜாலி கார்னருக்காக வீக் எண்ட் நிகழ்வு பத்தி எழுதித் தரச் சொல்லிக் கேட்டேன். அவரது பதில் இங்கே

சும்மா.. சாட்டர்டே ஜாலி கார்னர்!! இது கண்டிப்பா எனக்கான களம் அல்ல.. ஆனாலும் ஏன் ? அப்படின் னா!! தெரியாம மாட்டிக்கிட்டேன்னு ஒத்துக்கிறது தான் சத்தியம்! அப்புறம் ஏண்டா நாயே எழுதறேன்னு கேட்டா!!! ஒரே பதில்: தேனம்மா !

சனி, 24 செப்டம்பர், 2016

சாட்டர்டே ஜாலிகார்னர் :- அகிலாவின் க்ளிக்ஸ் & கலர்ஸும் புகைப்பட அரசியலும்



என் அன்பிற்கினிய தோழி அகிலாபுகழ். முகநூலில்தான் கண்டடைந்தோம்.
ஆனால் பலநாள் பழகியவர்போல உரையாடினோம். மிக அருமையான பெருமைப்படக் கூடிய நட்பு. கோவை இலக்கிய சந்திப்பில் எனது அன்ன பட்சியைப் பற்றி இலக்கியப் பார்வையை அழகாக முன்வைத்தார். அது புதிய தரிசனத்திலும் வெளிவந்தது. அநேக தருணங்களில் முகநூலில் இவர் போடும் கருத்துக்கள் என் மனதுக்கு இசைந்தவையாகவே அமைந்திருக்கும். அடிப்படையில் கவிதாயினியான ( 3 கிை நூல்கள் வந்திருக்கு ) இவர் க்ளிக்ஸ் & கலர்ஸ் என்ற புகைப்படப் பக்கத்தை உருவாக்கி நிர்வகித்து  வருகிறார். அவரிடம் சாட்டர்டே ஜாலி கார்னருக்காகக் கேட்டதும் உடன் எழுதித் தந்தார். 

கிளிக்ஸ் & கலர்ஸ் (Clicks & Colours)
(முகநூலில் இயங்கி வரும் புகைப்படக்குழு)

புகைப்படம் எடுப்பது என்பது எனக்கு ரொம்ப பிடித்தமான ஓன்று. எங்க அப்பா எனக்கு சொல்லாமல் சொல்லிக்கொடுத்த பொழுதுபோக்கு இது. திருமணம் முடிந்து, நான் தனிக்குடித்தனம் போகும்போது, அப்பா, என் கையில் ஒரு Yashica AW818 கேமரா கொடுத்தார். புகைப்படக்கலையில் ஆர்வம் என்பதை அமைதியாக கவனித்திருப்பார் போலும். அதுதான் அப்பா என்னும் மந்திரம்.

சனி, 10 செப்டம்பர், 2016

சாட்டர்டே ஜாலிகார்னர். மனோரமா ஆச்சியின் அன்பில் நெகிழ்ந்த உதவி இயக்குநர் ராம் பெரியசாமி.

முகநூலில் யாழகிலன், அருண்கருப்பையா இருவரும் என்னை அம்மா என விளிப்பார்கள். அதேபோல் உதவி இயக்குநர் ராம் பெரியசாமி  மம்மி என்பது போல் ”மீ ” என விளிப்பார். :) மிக அதிக அளவு என் பதிவுகள்  எல்லாவற்றையும் வாசித்து கருத்துக் கூறிவிடுவார்.

எளிய மனிதருக்கு இரங்கும் குணம். ஊனமுற்றோரின் பால் பாசம், குழந்தைகள் மேல் அதீதப் பிரியம் என அன்பாலே செய்த மனிதர் அவர். சினிமாத்துறையில் உதவி இயக்குநராகப் பணியாற்றுகின்றார். அவரது பல கவிதைகள் நான் வாசித்திருந்தாலும் இந்தக்கவிதை என்னை அசைத்த ஒன்று. 

////சென்னை அதிவேக
ரயிலின் கூட்டநெரிசலில்
அசதியான முகங்களின்
பார்வைகள் ஜன்னல்வழியே
கடத்திக் கொண்டிருப்பதும்...
தனியான என் மௌனங்களை
ஞாபகங்கள் கொத்தித்தின்றுக்
கொள்ளும் இவ்வேளையில்....
முகம் சூம்பி...
உடல்சூம்பி..
கைகள் சூம்பி....
ஒருவன் இடறி நிற்கையில்..
அந்த குழந்தையின் அழுகை
அவனால்தான் இருக்க முடியும்..
ஐந்துரூவாய் பேனாவை
அவன் விற்கையில்
கடவுளே இவனை
கடத்திச்செல்லென
ப்ரார்த்திக்கையில்
" நுங்கம்பாக்கம் ஸ்டேசன்
வந்திருச்சி... இறங்கிக்குங்க...
பக்கத்து ஸ்கூல்ல போலியோ
மருந்து போடுறாங்க....
தாய்களே...மறக்காதிங்க"..
அவன் தவழ்ந்து செல்கையில்
#முகவரியற்ற_ரயில்பயணங்களில்....
எல்லோர்க்கும் முகவரியை அளித்திருந்தான்.////

///ராம் பெரியசாமியிடம் அவர் பணியாற்றிய சினிமாத்துறையில் நடந்த நிகழ்வு ஒன்றைப் பற்றி சாட்டர்டே ஜாலி கார்னருக்காக எழுதித்தரச் சொன்னேன்.  ////

வணக்கம் ராம் பெரியசாமி திரைப்பட இயக்குனர்...


நான் உதவி இயக்குனராக பதினைந்து படங்கள் பணிபுரிந்திருக்கிறேன்.. கடைசியாக நான் வேலை செய்த படம் "ஜீரோ".. நிறைய அனுபவங்களை பெற்றுள்ள நான் தற்போது உங்களிடம் ஓர் சிறிய அனுபவத்தை பகிர உள்ளேன்....

Related Posts Plugin for WordPress, Blogger...