எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 24 மே, 2011

புற்றை இனம் காணுங்கள். அடையார் கான்சர் இன்ஸ்டிடியூட் சேர்மன் டாக்டர் சாந்தா பேட்டி..



புற்றை இனம் காணுங்கள்..:-
******************************************
தற்காலத்தில் பெண்களை அதிகம் பாதிப்பது
மார்பகப் புற்று மற்றும் கருப்பைப் புற்று . இந்தப்
புற்றுநோயின் தீவிரத்தினால் பெண்கள் பெரும்
துயரமடைகிறார்கள். இது இருப்பதே தெரிந்து
கொள்ளாமல் வாழும் பெண்கள் அநேகம்.
நோய் முற்றிய பிறகு கருப்பையையோ.,
மார்பகத்தையோ நீக்குதல் என்பது பெண்களை
மனதளவில் துயருறச் செய்யும்.. இந்த நோய்
பற்றி அறிந்து பெண்கள் தங்களை பரிசோதனை
செய்து கொள்ள வேண்டும்.


புற்று நோய்க்கான சிகிச்சை அளித்து தன்
வாழ்நாளில் பெரும் பகுதியை இந்த வியாதியை
தடுப்பதிலும்., நீக்குவதிலும் பாடுபட்டு மக்களுக்கு
சேவை செய்து வரும் அடையார் கான்சர்
இன்ஸ்டிட்யூட்டின் சேர்மன் டாக்டர் சாந்தா
அவர்களை நம் லேடீஸ் ஸ்பெஷல்
வாசகியருக்காக சந்தித்தேன்.. அவர்களிடம்
நம் வாசகியருக்கு கான்சர் பற்றிய
விழிப்புணர்வுத் தகவல்கள் தந்துதவுமாறு
கேட்டு அவர்கள் சொன்னதை தொகுத்துள்ளேன்.

அன்னை தெரசா., சாரதா தேவியாரை
சந்தித்ததுபோல் உணர்ந்தேன்..

அந்தத் தாயின் கரங்களினால் எத்தனை
உயிர்கள் காப்பாற்றப்பட்டிருக்கும்.. அந்தக்
கரங்களை பிடித்த போது அத்தனை உயிர்களின்
நன்றியையும் உணர்ந்தேன்..

1954 இல் கான்சர் இன்ஸ்டிட்யூட்
ஆரம்பிக்கப்பட்டது. அந்த காலத்தில் கான்சர்
என்பது பயங்கரமான வியாதி. கர்மா.
பிறவிலேயே வந்தது என மக்கள் எண்ணினார்கள்.
55 வருடம் கழித்து அந்த எண்ணத்தில்
நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கு. கான்சரை
தடுக்க முடியும். நூற்றுக்கு அறுபது சதவிகிதம்
கான்சர் குணப்படுத்தக் கூடியதே.. மிச்சம்
40 சதவிகிதம் கான்சரையும் தடுக்க
ஸ்டெப்ஸ் எடுக்கப்பட்டுக் கொண்டு இருக்கு.

அடையார் கான்சர் இன்ஸ்டிடியூட்டில்
கான்சரை தடுப்பதில் முழு முயற்சியோடு
செயல்பட்டுக் கொண்டு இருக்காங்க....

கான்சர் என்பது ஒரு தனிப்பட்ட வியாதி
இல்லை.. அது உடலில் எத்தனை பாகங்கள்
இருக்கிறதோ அத்தனை பாகங்களிலும்
வரக்கூடியது. ( ITS NOT A SINGLE DISEASE. ) .
கண்., மூக்கு., வாய்., தொண்டை., வயிறு.,
கர்ப்பப்பை., மார்பகங்கள்., சிறுகுடல்., தோல்.,
ரத்தம் என எல்லா இடத்திலும் வரக்கூடியது.
எல்லா பாகங்களிலும்., எல்லா வயதிலும்.,
குழந்தையானாலும் சரி வயதானவரானாலும் சரி.
பணக்காரர் ., ஏழை என்ற வித்யாசம்
இன்றி வரக்கூடியது.

வளர்ந்த நாடுகள்., வளராத நாடுகள்., வளர்ந்து
வரும் நாடுகள் என உலகில் எல்லா இடங்களிலும்
கான்சர் இருக்கிறது. காலரா., டைபாய்டு எல்லாம்
கிருமி மூலம் வருது. தொற்று நோய் .
ஆனா கான்சர் கிருமி மூலம் பரவுவது இல்லை.
கான்சர் என்பது உடலில் உள்ள செல்கள்
கட்டுப்பாடு இழந்து பெருகுவது.
( CELL LOST ITS CONTROL AND BREAK THE CHAIN. ).
ஆரோக்கியமான அணுக்கள் கட்டுப்பாட்டுடன்
ஒரே அளவுடன் வளர்ச்சிபெற்று தன்னிச்சையாக
தன்மைபெற்று இயங்குகின்றன.

புற்றுநோய் வளர்ந்து உடலின் மற்ற அணுக்கள்
பாகங்களுக்கும் கட்டுக்கடங்காதபடி பரவக்கூடியது.
உடலின் உள்ளே உள்ள செல்களின் அதீதமான
வளர்ச்சியும்., வெளிப்புறக் காரணங்களும்
புற்று நோய் வரக் காரணிகள்.


40 % ஆண்களுக்கு வரும் புற்று நோயும்
20 % பெண்களுக்கு வரும் புற்று நோயும்
புகையிலையினால்தான் வருகிறது

புகையிலையை எந்த விதத்திலும்
உட்கொள்ளக்கூடாது.. புகைப்பிடித்தலோ அல்லது
வாயில் போட்டு மெல்லுவதோ கூடாது. சிகரெட்.,
பீடி., சுட்கா( ஆந்திரப் பிரதேசத்தில் பெண்கள்
உபயோகிப்பது)., சிகர்., இது போல வாயில் (ORAL)
வைத்துப் பிடிக்கப்படும் புகையிலைப் பொருட்கள்
மிக அதிக அளவில் புற்றை உண்டு செய்கின்றன.
சிகரெட் போன்றவற்றில் நெருப்பு வாயில்
வெளிப்புறம் வைத்துப் பிடிக்கப்படுகிறது என்றால்
சுட்கா போன்றவை நெருப்பை வாய்க்கு உள் பக்கமாக
வைத்துப் பிடிக்கப்படுகின்றன. எனவே அதிக அளவில்
மக்கள் இதனால் புற்றால் பாதிக்கப்படுகிறார்கள்.
.
புகையிலையை முற்றிலுமாக தடை செய்தால்
புற்றுநோயை 80% தடுக்கலாம்.
பெரம்பலூர் மாவட்டத்தி்ல் 3,00,000 பேரிடம்
இது பற்றி சர்வே எடுக்கப்பட்டது. அப்போது
புகையிலையை உபயோகித்தல் என்பது் கல்வி அறிவு
அதிகமாக அதிகமாக குறைகிறது. ஏனெனில் படிப்பு
அதிமாகும்போது இது பற்றிய விழிப்புணர்வு அதிகமாகிறது.
எனவே நம் பெண்களுக்கு கல்வி அறிவு அவசியம்
தேவை. அதனால் பொருளாதார தேவைகள் பூர்த்தியாகும்
போது பெண்கள் வீடு., கணவர். குழந்தைகளை பார்த்துக்
கொள்ள முடியும். கல்வியறிவு பெற்றதனால்
புகையிலையின் தீமைகளை உணர்கிறார்கள்.
புற்றுநோயாக மாறுவதற்கு முன்பே நாம்
புற்று நோயை கண்டறியலாம். 100 சதவிகிதம்
குணப்படுத்த முடியும். வருமுன் காப்போம்.

PREVENTION IS BETTER THAN CURE. WE CAN PREVENT CANCER.

டெக்னாலஜியும் ரொம்ப இம்ப்ரூவ் ஆகி இருகிறது.
அல்ட்ரா சவுண்ட் ஸ்கேனர்., சி டி ஸ்கேனர்.,
எம் ஆர் ஐ., பெட்ஸ் ஸ்கேன்
( ULTRA SOUND SCANNER., C.T. SCANNER., M.R.I., PETS SCAN., )
இவைகள் மூலமா நாம் கான்சரை கண்டறிய முடியும்.
(WE CAN IDENTIFY WITH MEDICAL ONCOLOGY).

பெண்களில் அதிகமாக காண்பது கருப்பை ., மார்பகம்
மற்றும் வாய்ப் புற்றுநோய்கள்தான். ஆண்களில் 40 சதம்
புற்றுநோய் புகையிலையினால் வருகிறது. அவை வாய்.,
நுரையீரல்., தொண்டை., மற்றும் குரல்வளையைத்
தாக்குகின்றன.

குணப்படுத்தவே முடியாது என்று எண்ணப்பட்ட
புற்று நோய்கள் இந்நாளில் குணப்படுத்தப்படுகிறது.
கான்சர் நோயாளிகள் முற்றின நிலையில்
வருவதுதான் கஷ்டமாக இருக்கிறது..
அட்வான்ஸ்ட் கான்சருக்கு மல்டி மொராலிட்டி ட்ரீட்மெண்ட்
மூலம் தரமான சிகிச்சை கொடுக்கப்படுகிறது.

ADVANCED CANCER MULTI MORALITY TREATMENT..:_

1. SURGERY ( சர்ஜரி)

2. RADIATION ( ரேடியேஷன்)

3. CHEMORAPHY ( கீமோதெரஃபி)

4. IMMUNOTHERAPHY ( இம்மியூனோதெரஃபி)

இவற்றின் மூலம் தரமான சிகிச்சை தரப்படுது.

( NEW EQUIPMENTS AND DIFFERENT MACHINES ) .

1957-65 இல்

1.கோபால்ட் பீம் ( COBALT BEAM) .,

2. லீனியர் ஆக்ஸிலரேட்டர் ( LINEAR ACCELERATOR)

வந்தது.


ஆரம்ப நிலையில் மார்பு புற்றுநோயைக் குணப்படுத்தலாம்.
முற்றிய நிலையில் உள்ள புற்று நோய்க்கு பன்முக
சிகிச்சை தேவைப்படுகிறது. .மார்பகத்தை அகற்றாமலே
பாதிக்கப்பட்ட பகுதியை மட்டும் அகற்றலாம். .
முன்பெல்லாம் முழு மார்பகத்தையும் எடுக்க
வேண்டி வரும் . அதை பெண்கள் விரும்புவதில்லை..
ஆனால் இதன் மூலம் பாதிக்கப் பட்ட பகுதியை
மட்டும் எடுக்கலாம். போன் கான்சரில் (காலில் வரும்
புற்றுநோயில்) குறிப்பிட்ட பகுதியை
மட்டும் எடுக்கலாம். ட்ரீட்மெண்ட் தான் கொஞ்சம்
எக்ஸ்பென்சிவ். அரசு உதவியோடு இந்த சிகிச்சை
எல்லாம் வழங்கப்படுகிறது.


இதில் 40 சவிகித நோயாளிகள்தான் பணம் செலுத்தி
சிகிச்சை எடுத்துக் கொள்கிறார்கள்.

மற்ற 60 சதவிகித
நோயாளிகள் (SUBSIDISED PATIENTS) ஜெனரல் வார்டு
இதிலும் 20% இலவச சிகிச்சை
அளிக்கப்படுகிறது மீதி 40 % நாமினல் பேமண்ட்.
. மெடிக்கல் இன்சூரன்ஸ்
எடுக்கப்பட்டிருந்தால் அதுவும் அவர்களுக்கு உதவுகிறது.

தடுப்பு முறைகள்:-

1. புகையிலை ( TOBACCO) :- புகையிலையை எந்த
வடிவத்திலும் எந்த வயதிலும் உபயோகிக்கக்
கூடாது. இது புற்று நோயை மட்டுமல்ல., இதய நோய்.,
நுரையீரல் நோய் ., ட்யூபர் க்ளோசிஸ் ( காசநோய்) .,
இருமல் ஆகியவற்றை உண்டாக்குகிறது.

2. பொது சுகாதாரம்..( GENITAL HYGIENE) :- இது
செர்விக்கல் கான்சர் (CERVICAL CANCER ) எனப்படும்
கர்ப்பப்பை புற்றை தடுக்கிறது.

1. சுத்தமான நாப்கினைப் பயன்படுத்த வேண்டும்.

2. வெள்ளைப் படுதல் ., அரிப்பு
இருந்தால் பார்க்கணும்.

3. துர்நாற்றம்.,ரத்தம் சேர்ந்து
வந்தால் கட்டாயம் மருத்துவரைப் பார்க்க வேண்டும்.

4. மாதவிடாய் சமயம் தவிர மற்ற நேரங்களிலோ மற்றும்
மாதவிடாய் நின்று விட்ட பிறகோ ரத்தம்
வெளியேறினால் பார்க்கணும். மேலும்
இண்டர்கோர்ஸின் போதும் ரத்தம் வெளியேறக் கூடாது.


10 சதவிகிதம் பரம்பரையாக புற்றுநோய் வர வாய்ப்புள்ளது.


BREAST CANCER ரத்த உறவினர்களிடம்
இருந்தால் பார்க்கணும். இது 90 சவிகிதம் வருவதில்லை .
10 சவிகிதம்தான் வருகிறது. மார்பில் கட்டிகள் இருந்தால்.,
காம்பில் கசிவு இருந்தால் கட்டாயம் மாமோக்ராம்
செய்ய வேண்டும். சின்ன கட்டிகள் இருந்தால்
மருத்துவரை அணுகி பிறகு எடுக்க வேண்டும்.
தாங்களாகவே முடிவு செய்யக் கூடாது.
புற்று என்றால் மாமோகிராமில் தெரிந்து விடும்.
பொதுவாக 40 வயது ஆனால் அவ்வப்போதும்
50 வயதுக்கு மேல் வருடத்துக்கு ஒரு முறையும்
முழு உடல் பரிசோதனை
( FULL HEALTH CHCK UP ) செய்து கொள்ள வேண்டும்.

உணவுமுறை. (DIET) :- AVOID FAT., FAST FOODS.,

JUNK FOODS., RED MEAT., BEEF., TOBACCO., ALCOHOL..

கொழுப்பு உணவுப்பொருளைத் தவிருங்கள்.
ஃபாஸ்ட் ஃபுட்ஸ்., துரித உணவுகள்., டப்பாவில்
பதப்படுத்தப்பட்ட உணவுகள்., இறைச்சியில்
மாட்டிறைச்சி., இவற்றை தவிருங்கள்.


புகையிலையும்., மதுபானமும் அறவே கூடாது.

நிறைய பச்சைக் காய்கறிகள் ., பழங்கள் எடுத்துக்
கொள்ளுங்கள். சீரியல்ஸில் அரிசி., போன்றவை நல்லது.
அசைவத்தில் மீன் பரவாயில்லை.. அதிக காரம்., புளிப்பு .,
உப்பு தவிர்க்கவும். அதிகச் சூடு ., அதிகக் குளிர்ச்சியான
உணவுப் பண்டங்களையும் தவிர்க்கவும். மிதமான சூடு .,
குளிர்ச்சியுடைய உணவு நல்லது..

உணவே மருந்து. நல்ல பழக்க வழக்கங்கள் நாம்
கைக்கொள்ளும் போது நம் உடல் நம் வசப்படும்.
மருந்தை உணவாக சாப்பிடாமல் உடம்பை முன்பே
கவனித்து ஆரோக்கியமாக இருப்பது நம் கையில்தான் உள்ளது..

குறிப்பு :- பிப்ரவரி 4 உலக கான்சர் தினம்.

ஜூன் 19 ஆம் தேதியன்று இங்கே குணமான நோயாளிகள்
வருடாவருடம் ஒன்று கூடுகிறார்கள். குணமானவர்கள்
சந்திக்கும் நாள் என்று அதற்குப் பெயர். அவர்களும்
தங்களால் இயன்ற பண உதவியை கான்சர்
இன்ஸ்டிட்யூட்டுக்கு செய்கிறார்கள்.











12 கருத்துகள்:

  1. வருமுன் காக்க விழிப்புணர்வு ஏற்படுத்தக்கூடிய நல்ல பதிவு.

    பதிலளிநீக்கு
  2. பலரை சென்றடைய வேண்டிய நல்ல விழிப்புணர்வு பதிவு. விரிவான விளக்கங்களுடன் தகவல்கள் பகிர்ந்தமைக்கு, நன்றி அக்கா.

    பதிலளிநீக்கு
  3. மிகவும் உபயோகமான பதிவு

    பதிலளிநீக்கு
  4. ////வை.கோபாலகிருஷ்ணன் கூறியது...

    வருமுன் காக்க விழிப்புணர்வு ஏற்படுத்தக்கூடிய நல்ல பதிவு.////


    மிகவும் உண்மை

    பதிலளிநீக்கு
  5. மிக மிக அருமையானதொரு,அவசியமானதொரு பகிர்வு தேனு.

    பதிலளிநீக்கு
  6. பகிர்வுக்கு நன்றிங்க, தேவையான பதிவு இது

    பதிலளிநீக்கு
  7. அருமையான விபரமான பதிவு.
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  8. சரியான பதிவு அனைவருக்கும் சென்றடைய வேண்டிய ஒரு தகவல்...

    பதிலளிநீக்கு
  9. நன்றி கோபால் சார்

    நன்றி சித்து

    நன்றி ராஜா

    நன்றி ஸாதிகா

    நன்றி இரவு வானம்

    நன்றி ரத்னவேல் சார்

    நன்றி செந்தில்

    பதிலளிநீக்கு
  10. நன்றி கோபால் சார்

    நன்றி சித்து

    நன்றி ராஜா

    நன்றி ஸாதிகா

    நன்றி இரவு வானம்

    நன்றி ரத்னவேல் சார்

    நன்றி செந்தில்

    பதிலளிநீக்கு
  11. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...