எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
மருத்துவம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மருத்துவம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 31 ஆகஸ்ட், 2012

மகப்பேறு நிலையங்களா, மரணக் கிடங்குகளா..

நாலு நாளா டிவியை பார்க்க முடியல, ரேடியோ கேக்க முடியல, பேப்பர் படிக்க முடியல. முகநூலுக்கு சென்றாலும் இதே டிபேட்தான். என்னுடைய தோழி கவிதா சொர்ணவல்லி 106.4 ஹலோ எஃப். எம்மில் பணி புரிகிறார். அவரோட வார்த்தைகள்ல இந்த வலிகளைப் பதிவு செய்றேன்..

///ரெண்டு வருஷமா நானும் பாலாஜியும் ப்ரைம் டைம் ஷோ பண்ணிட்டு இருக்கோம். நிறைய நிறைய...நிறைய Awareness விஷயங்கள் பேசி இருக்கோம். எல்லாமே அதீத Involvement-ட தான் பண்ணி இருக்கோம். ஆனா எந்த ஷோ அன்னைக்கும்...இன்னைக்கு நடந்த ஷோ அளவுக்கு கை கால் நடுங்கி, தலைல கை வச்ச, கண்ணீர் கட்டுபடுத்தி.....என்னைக்கு பண்ணினதில்லை.

செவ்வாய், 10 ஜூலை, 2012

காஸ்மெடிக் சர்ஜரி .. டாக்டர் கண்பத் விஸ்வநாதன்.


டாக்டர் கண்பத் விஸ்வநாதன் சென்னையைச் சேர்ந்த பிரபல ப்ளாஸ்டிக் சர்ஜரி நிபுணர். இவர் சேத்பட்டில் விஷி காஸ்மெடிக் சர்ஜரி க்ளினிக் நடத்தி வருகிறார். அவரிடம் ப்ளாஸ்டிக் சர்ஜரி என்றால் என்ன ? அதனுடைய பயன்கள் என்ன ? எப்போது தேவைப்படுகிறது என்ற கேள்விகளை முகநூல் உள்டப்பியில்  கேட்டிருந்தேன். அதற்கு அவர் கூறிய பதில்கள் இங்கே.

டாக்டர் , "ப்ளாஸ்டிக் சர்ஜரியில் என்னென்ன வகைகள் இருக்கின்றன?. அதன் சிகிச்சை விபரம், அதற்கு ஆகும் செலவுகள் மற்றும் எங்கு ஒரு சாதாரண மனிதன் ப்ளாஸ்டிக் அறுவை சிகிச்சையை தன்னுடைய பட்ஜெட்டுக்கு ஏத்தது போல செய்து கொள்ள முடியும்.? "

டாக்டர் கண்பத் விஸ்வநாத்தின் பதில்:-

வியாழன், 1 டிசம்பர், 2011

பெண்களுக்கு மட்டுமே வரும் நோய். யூராலஜி டாக்டர் ஸ்ரீகலா ப்ரசாத் பேட்டி.. லேடீஸ் ஸ்பெஷலில்

பெண்களுக்கு மட்டுமே என்று ஏற்படக்கூடிய உடற்கூறு சம்பந்தமான ப்ரத்யேகப் ப்ரச்சனைகள் பலவுண்டு. பூப்படைதல்., பின் மாதவிடாய்., பிள்ளைப்பேறு. கர்ப்பப்பை சம்பந்தமான நோய்கள்., கர்ப்பப்பை கான்சர்., மார்பகக் கான்சர் என்று. அதில் முக்கியமானது சிறுநீர்க் கசிவு. இந்த சிறுநீர்க்கசிவு சிலருக்கு பலமான பிரச்சனையாக அமைந்து நிம்மதியைக் குலைத்துவிடும். இது சம்பந்தமாக ராயப்பேட்டை பொதுமருத்துவமனையில் சிகிச்சையளித்துவரும் டாக்டர் ஸ்ரீகலா ப்ரசாத் அவர்களை சந்தித்து நம் லேடீஸ் ஸ்பெஷல் வாசகியருக்கு தீர்வுகள் வழங்குமாறு கேட்டோம். சென்னையிலேயே இந்தத்துறையில் சிகிச்சையளித்து வரும் பெண் மருத்துவர் இருவர்தான். அதில் இவர் முக்கியமானவர். ஒரு அறுவை சிகிச்சை முடிந்து அப்போதுதான் ஆபரேஷன் தியேட்டரிலிருந்து வெளியே வந்திருந்தார்.

வியாழன், 1 செப்டம்பர், 2011

YOU R SO SWEET.. இனிப்பான மக்களுக்கு ஒரு சேதி.. டாக்டர் அஞ்சனா.




YOU R SO SWEET .. அப்பிடின்னு சிலர் புகழ கேட்டிருப்பீங்க.. இது பாராட்டுக்காக சும்மா சொல்றது.. அதென்னங்க ஸ்வீட்.. நிஜமாவே இனிப்பு அதிகமானா அதுக்கு பேர் டயபடிக் என்கிற சர்க்கரை வியாதி. நீரிழிவு நோய்னும் சொல்றாங்க. தற்காலத்துல நிறைய பேர் இதனால பாதிக்கப்பட்டிருக்கிறதால இது பத்தி விழிப்புணர்வு தரும்படி டாக்டர் மோகன் டயபடிக் ஸ்பெஷல் சென்டரைச் சேர்ந்த டாக்டர் அஞ்சனாவிடம் நம் லேடீஸ் ஸ்பெஷல் வாசகியருக்காக ஸ்பெஷலா ஒரு பேட்டி கேட்டேன். . டாக்டர் அஞ்சனா சொன்னவைகளைத் தொகுத்துள்ளேன்..

புதன், 10 ஆகஸ்ட், 2011

மழைக்காலத்தில் குழந்தைகளின் நலம் காப்பது எப்படி.? டாக்டர் முகமது ஆசிஃப்..

வெய்யில் காலம் முடிந்து மழைக்காலம் தொடங்கியவுடனே வீட்டில் இருக்கும் சின்னக் குழந்தைகளுக்கு வியாதிகள் ஆரம்பிக்கத் தொடங்கும். அதுவரையில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை கொஞ்சம் காய்ச்சல்., சளி என்று நை நை என்று அழ ஆரம்பிக்கும். பெரியவர்களுக்கு வந்தாலே கஷ்டம் எனும் போது குழந்தைகளுக்கு வந்தால் எப்படித்தாங்குவார்கள்.. ?குழந்தைகளுக்கு இதுபோல மழைக்காலம் ஆரம்பித்தபின் வரும் உடல் நலக் கோளாறுகளுக்காக என்ன செய்யவேண்டும்., எப்படிக் குழந்தைகளை இவற்றிலிருந்து பாதுகாக்க வேண்டும் என சுபம் மருத்துவமனையைச் சேர்ந்த டாக்டர் முகமது ஆசிஃப் அவர்களிடம் நம் வாசகியருக்காக நோய்த்தடுப்பு முறைகள் பற்றிக் கேட்டேன். அவர் கூறியவற்றைத் தொகுத்துள்ளேன்.

செவ்வாய், 21 ஜூன், 2011

கர்ப்பத்துக்கு முன்னும் செக்கப்...டாக்டர் மாதினி பேட்டி..



தற்காலத்தில் கருத்தரிப்புக்கு முன்னும் டாக்டர்களை கன்சல்ட் செய்யும் ஆலோசனை முறை பின்பற்றப்படவேண்டியுள்ளது.. பொதுவாக கர்ப்பகால பாதுகாப்பு மட்டும்தான் கவனத்தில் கொள்ளப்படும்.. ஆனால் கர்ப்பம் தரிக்கும் முன் மேற்கொள்ள வேண்டிய செக்கப்புகள் பற்றி அரசு மருத்துவமனையில் பணி செய்து ஓய்வுபெற்ற டாக்டர் மாதினி .. கைனகாலஜிஸ்ட்..( தற்போதும் மந்தைவெளியில் ப்ராக்டீஸ் செய்து வருகிறார்) அவர்களிடம் நம் லேடீஸ் ஸ்பெஷல் வாசகியருக்காக கர்ப்பத்துக்கு முன்னும் ., கர்ப்பகாலத்தின் போதும் மேற்கொள்ள வேண்டிய செக்கப்புக்கள்., பாதுகாப்பு முறைகள்., மருத்துவம்., உணவு., பயிற்சிகள் பற்றி விழிப்புணர்வுத்தகவல்கள் தந்துதவுமாறு கேட்டேன்.. அவர் கூறிய தகவல்களைத் தொகுத்துள்ளேன்..

சனி, 28 மே, 2011

இறவாப் புகழ் பெற்ற அனுராதா. போராடி ஜெயித்த பெண்கள் ( 9).




இறந்தும் இறவாப் புகழ் பெற்ற ஒருவரை பற்றி இந்த மாதம் பார்ப்போம்.. வாழும் போது போராடியவர் உண்டு.. வாழ்விலும் போராடி., இறந்த பின்னும் மனித குலத்துக்கு தன் உடலையும் ., கண்ணையும் தானமாய் வழங்கி இருக்கும் அனுராதாதான் அவர்.

செவ்வாய், 24 மே, 2011

புற்றை இனம் காணுங்கள். அடையார் கான்சர் இன்ஸ்டிடியூட் சேர்மன் டாக்டர் சாந்தா பேட்டி..



புற்றை இனம் காணுங்கள்..:-
******************************************
தற்காலத்தில் பெண்களை அதிகம் பாதிப்பது
மார்பகப் புற்று மற்றும் கருப்பைப் புற்று . இந்தப்
புற்றுநோயின் தீவிரத்தினால் பெண்கள் பெரும்
துயரமடைகிறார்கள். இது இருப்பதே தெரிந்து
கொள்ளாமல் வாழும் பெண்கள் அநேகம்.
நோய் முற்றிய பிறகு கருப்பையையோ.,
மார்பகத்தையோ நீக்குதல் என்பது பெண்களை
மனதளவில் துயருறச் செய்யும்.. இந்த நோய்
பற்றி அறிந்து பெண்கள் தங்களை பரிசோதனை
செய்து கொள்ள வேண்டும்.

வியாழன், 19 மே, 2011

வியர்வையை விரட்டுங்க.. கோடையைக் கொண்டாடுங்க..





கோடைகாலத்தில் வெய்யிலால் உண்டாகும் உடல்சீர்கேடுகள் என்னென்ன.. அவற்றை எப்படி எதிர்கொள்ளலாம் என சுபம் மருத்துவமனையின் டாக்டர் வேல்ராணி அவர்களிடம் நம் இவள் புதியவள் வாசகியருக்காக பேட்டி எடுத்தோம்.. அவர் கூறியவற்றை பின்பற்றி வியர்வையை விரட்டுங்க.. கோடையைக் கொண்டாடுங்க....

புதன், 23 மார்ச், 2011

குழந்தைகளைப் புரிந்து கொள்ளுங்கள்.. டாக்டர் வசந்தி பாபு.




ஒரு இல்லம் இனிய இல்லமா அமையுறது பெற்றோரால்தான்.. அந்த இனிய இல்லத்தை அமைக்க பெற்றோர் குழந்தைகள் உறவு இனிமையா இருக்குறது முக்கியம்.. பெற்றோர்தான் எனவும்., பிள்ளைகள் தான் எனவும் குற்றம் சாட்டிக் கொள்வோம். அந்த உறவு என்றும் நீடிச்சு இருக்க குழந்தைகளை நல்ல முறையில் வளர்ப்பது பற்றி., அவங்க பிரச்சனைகளை களைவது பற்றி ஹோம் ஸ்வீட் ஹோம் என்ற வெப்சைட்டையும் ., ஆர் ஏ புரத்திலும்., ராயப்பேட்டையிலும் கிளினிக்கும் நடத்திவரும் டாக்டர் திருமதி வசந்திபாபுவை சந்தித்து நம் வாசகியருக்காக ஆலோசனை தந்துதவுமாறு கேட்டோம்.

சனி, 29 ஜனவரி, 2011

கண்ணைக் காப்பாற்றுங்கள்.. ஒரு விழிப்புணர்வு.. டாக்டர் காயத்ரிஸ்ரீகாந்த்..



எண் சாண் உடம்புக்கும் சிரசே பிரதானம் என்பதறிவோம். அதிலும் கண்களே ஒருவர் மற்றவருடன் தொடர்பு கொள்ளும் முக்கிய கருவியாய் இருக்கிறது. இன்றைய காலகட்டத்தில் கண்ணைக் கண்போல பார்த்துக்கிட்டாதான் யாரையும் டிபெண்ட் பண்ணாம இருக்கலாம்.
Related Posts Plugin for WordPress, Blogger...