எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
இவள் புதியவள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இவள் புதியவள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 13 பிப்ரவரி, 2013

மாமியார் vs மருமகள்

பெண்ணுக்கு மாப்பிள்ளை பார்க்கும்போதே பையனோட தகுதிகளோடு கூட மாமியார் நல்லவங்களா., பொண்ணை நல்லா வச்சிப்பாங்களா என்பதுதான் பெற்றோரின் கேள்வியாய் இருக்கும். பின்னாளில் இந்தப் பொண்ணு நம்ம நல்லா கவனிச்சுக்குவாளா என்பதே பையனைப் பெற்ற தாயின் எண்ணமாய் இருக்கும். ஒரு ஆண்மகன் மனைவி பக்கமோ, தாய் பக்கமோ பேசமுடியாதபடி நடுநிலைமை வகிக்க வேண்டியிருக்கும். இருவருமே அவருக்கு முக்கியம்.

வெள்ளி, 12 அக்டோபர், 2012

நட்பு + காதல் = இல்லறம். தமிழ்ச்செல்வி நிக்கோலஸ்ராஜன்.

வாழுங்கள் வாழ்கையை ..
உணருங்கள் அதன் அற்புதத்தை ..

நல்ல நட்பு காதலாக மாறி இன்று இனிமையான இல்லறம் .. எங்களுடைய நட்பு நம்ம பல்லவன் போக்குவரத்து கழகம் இதில் தான் ஆரம்பித்தது.இது தொடர்ந்து ஒரு ஒன்னரை வருடங்கள் நல்ல நடப்பு பயணித்தது...எனக்கு திருமண பேச்சு ஆரம்பித்த சமயத்தில் எங்களுக்குள் ஒரு மாற்றம் ...இதை ஒரு சந்தர்ப்பத்தில் இருவருமே பகிர்ந்து கொண்டோம் அப்போது எடுத்த முடிவு தான் எங்கள் திருமணம்..

வியாழன், 11 அக்டோபர், 2012

காதலாகி கசிந்துருகி.. லலிதா முரளி..

காதலாகி கசிந்துருகி...................

நம்ம ஹீரோவை முதல் முதல்ல சந்திச்சது என் சித்தியின் வீட்டுலதான்............சித்தியின் குடும்ப நண்பர்ங்க என் கணவர்........ பார்த்தோம் பிடிச்சுது பழகினோம் அப்புறமென்ன அப்புறம் கல்யாணம்தான்..............அதிவேக நிகழ்வுங்க.......காதல் பண்ணவும் கல்யாணத்துக்கும் நடுல ஜஸ்ட் நாலே மாசம்தாங்க.... நோ ஃபைட்,நோ டூயட் நோ சேசிங்....... ஆனா அந்த நாலு மாசத்திலயும் ஒரே ரொமான்ஸ்தான்....

வெள்ளி, 6 ஜூலை, 2012

ப்லாகர் ஸ்பெஷல்..

ஸ்ரீவித்யா பாஸ்கர். இவர்தான் லேடீஸ் ஸ்பெஷலில் முதல் அறிமுகமான ப்லாகர். பகோடா பேப்பர்கள் இவர் வலைத்தளம். இவரின் மொழி ஆளுமை, மொழியாக்கத் திறன் அருமை. குழந்தைகள் காப்பகம் மற்றும் பள்ளி நடத்திவரும் இவருக்கு குழந்தைகள் முன்னேற்றம் குறித்த அக்கறை மிக உண்டு. இவரின் வலைத்தளம்.http://vidhoosh.blogspot.com

மேனகா சத்யா. சஷிகா என்பது இவரது வலைத்தளம் .. மிக அருமையான சமையற்குறிப்புகளுக்குச் சொந்தக்காரரான இவர் இரண்டாவதாக அறிமுகமான ப்லாகர். ஓவன் சமையல், விதம் விதமான கேக்குகள் , வித்யாசமான உணவுகள் இவரது ஸ்பெஷாலிட்டி. இவர் மாதம் ஒரு விரதம் என்ற தலைப்பிலும் சில கட்டுரைகள் லேடீஸ் ஸ்பெஷலுக்காக எழுதி இருக்கிறார். இவரின் வலைத்தளம்.http://sashiga.blogspot.com

வியாழன், 28 ஜூன், 2012

மற்ற மொழிக்காரர்கள் தமிழை நன்கு உச்சரிக்கின்றார்கள்.-- நடிகை ஊர்வசி..

ஊர்வசியிடம் ஒரு பேட்டி:-

1. பலவருடங்களாகத் தமிழ்த்திரையுலகிலும் தற்போது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் வெற்றிக் கொடி நாட்டுகிறீர்கள்.. இது எப்படி? சினிமாவிலிருந்து தொலைக்காட்சி நிகழ்ச்சி செய்ய எப்படி முடிந்தது.? தமிழ் ஹ்யூமர் ஹீரோயினா எப்படி உணர்கிறீர்கள்.

பல வருடங்களுக்கு முன்பு என்றால் அது கொஞ்சம் யோசிச்சிருப்பேன். இப்போ பத்து வருடங்களாக சினிமா ஆர்டிஸ்டுகள் தொலைக்காட்சித் தொடர்களிலும் நிகழ்ச்சிகளும் பங்கேற்பதால் சகஜமான ஒன்றாகி விட்டது. விஷுவல் மீடியாவில் தற்போதைய காலகட்டத்தின் மாற்றம் என்னன்னா டி வி் என்பது மக்களை ஈஸியா அடைகின்ற மீடியாவாகிவிட்டது, இது தவிர்க்க முடியாத மாற்றம்.

புதன், 29 பிப்ரவரி, 2012

ஃப்ளாட் வாங்குவது புத்திசாலித்தனமா..? ஹனு ரெட்டி ரியால்டியின் வைஸ் பிரசிடெண்ட் அருண் குமாரின் ஆலோசனை.


இன்றைய மத்தியதரக் குடும்பத்தின் ஆசைக் கனவுகளில் ஒன்று சொந்த வீடு.. இந்த சொந்த வீடு என்பது இன்றைக்கு இருக்கும் இட விலை உயர்வு., உயர்ந்து வரும் கட்டுமானப்பொருட்களின் விலை, கட்டுமானச் செலவு பொறுத்து நிறைவேறாத கனவாகவே இருக்கிறது.. செலவைக் கட்டுப்படுத்திப் புறநகரிலோ. அல்லது சிறுநகரங்களிலோ இடம் மற்றும் வீடு அல்லது ஃப்ளாட்டுக்களில் முதலீடு செய்ய நினைக்கும்போது இந்த முன்னெச்சரிக்கைகளைப் படித்துவிட்டு முதலீடு செய்யுங்கள். உங்கள் வாழ்நாளுக்கான கனவு இல்லமோ., எக்கனாமிக் ஃஃப்ளாட்டோ., எதாகயிருந்தாலும் தேர்ந்து செய்யும் முதலீடு உங்கள் பிற்கால வாழ்க்கைக்கான சேமிப்பாகும்.

செவ்வாய், 28 பிப்ரவரி, 2012

இவள் புதியவளில் டிப்ஸ்..7.



1.குக்கரில் சாதம் வைக்கும் போது வெளியில் தண்ணீரில் எலுமிச்சை தோல் அல்லது புளி போட்டு வைத்தால் குக்கர் கருக்காது.

2. ஹிந்தி, கைவேலைப்பாடுகள், ஸ்லோகம் தெரிந்தவர்கள் அக்கம் பக்கம் இருக்கும் குழந்தைகளுக்கு இலவசமாக சொல்லிக் கொடுக்கலாம். படிக்க சிரமப்படும் குழந்தைகளுக்கு இலவசமாக ட்யூஷன் எடுக்கலாம்.

வியாழன், 2 பிப்ரவரி, 2012

பொங்கல் டிட் பிட்ஸ்.. இவள் புதியவளில்.

வீரர்களின் திருநாள்;-
**************************

பனங்கிழங்கு சர்க்கரை வள்ளிக்கிழங்கு மிக அதிகமாக கிடைக்கும். இவற்றை அவித்தும் சுட்டும் உண்பார்கள். நிறைய நாட்டுக் காய்கறிகள் கிடைக்கும் காலம் இது. சேலம் பக்கம் முழு தேங்காய்க்குள் ஓட்டையிட்டு பாசிப்பருப்பு வெல்லம் போட்டு முழுதாய் சுட்டு உடைத்து தின்பார்கள்.


புதன், 1 பிப்ரவரி, 2012

ஈரோடு கதிர் அவர்களின் கொங்குநாட்டு பொங்கல் அனுபவம். இவள் புதியவளில்.


இது ஈரோடு கதிர் அவர்களின் கொங்குநாட்டுப் பொங்கல் அனுபவம். :-

ஈரோட்டை சொந்த ஊராகக் கொண்ட கதிர் கிராமமும் வயலும் வயல் சார்ந்த வாழ்வை விரும்புவர். இயற்கையோடு இயைந்த பொங்கல் கொண்டாட்டாத்தையும் ., விவசாயிகளுக்கே உரித்தான மாட்டுப் பொங்கலையும் சிறப்பாகப் பகிர்ந்து உள்ளார். ”உழுதுண்டு செல்வாரே செல்வார் ,, மற்றெல்லாம் தொழுதுண்டு பின் செல்பவர்” என்பது இங்கு பொருத்தமாய் இருக்கிறது.

செவ்வாய், 31 ஜனவரி, 2012

மீனா லெட்சுமணனின் கிராமத்துப் பொங்கல். இவள் புதியவளில்.


மீனா லெட்சுமணன் சென்னையைச் சேர்ந்தவர். ஈவண்ட் மேனேஜ்மெண்ட் செய்து வருகிறார். தன் தந்தையின் ஊரான திண்டிவனம் கிராமத்துக்கு பாட்டி வீட்டுக்குப் போனபோது கொண்டாடிய பொங்கலை உங்களோடு பகிர்ந்து கொள்கிறார்.

திங்கள், 30 ஜனவரி, 2012

மணிமேகலையின் தலைப்பொங்கல்., இவள் புதியவளில்.



மணிமேகலையின் (நகரத்தார் மக்கள் கொண்டாடும்) தலைப் பொங்கல் :-
****************************************************************************************

மணிமேகலை செட்டிநாட்டுப் பகுதியைச் சேர்ந்தவர். இவர்கள் ஊரில் பொங்கல் வீட்டில் மிகுந்த சீரோடும் சிறப்போடும் கொண்டாடப்படும். தீபாவளி சீர் போல பொங்கல் சீரும் பெண்ணுக்கு ரொம்ப முக்கியம். அந்தப் பொங்கல் சீரை தந்தை அல்லது அண்ணன் தம்பி கொண்டுவந்து தருவார்கள். ஒரு பெண்ணுக்கு பிறந்த வீட்டிலிருந்து மகிழ்வளிக்கக்கூடியது இந்த சீர்.. உன்னை நாங்கள் மறந்து விடவில்லை. உன் மனதில் என்றும் சந்தோஷம்ம் பொங்கட்டும் என பொங்கல் சீர் அளிப்பார்கள். பொங்கல் பொங்கியதும் பால் பொங்கிற்றா என கேட்பார்கள். தாய் வீட்டிற்கும் மாலையில் சென்று பால் பொங்கிற்றா என கேட்பார்கள். அவர்கள் எங்களுக்கு நல்லா பால் பொங்கிற்று. உங்களுக்கு நல்லா பால் பொங்கிற்றா என கேட்பார்கள். எனவே ஒவ்வொரு வருட பொங்கலும் பெண்களுக்கு தாய் வீட்டின் பிடிப்பை இன்னும் அதிகப்படுத்துவதாகவே அமையும்.

ஞாயிறு, 4 டிசம்பர், 2011

இது நகரத்தார் வீட்டுக் கல்யாணம், இவள் புதியவளில்.

நகரத்தார் திருமணங்கள் மிகச் சிறப்பாக நடத்தப்படுகின்றன.. முன்பெல்லாம் 7 நாள் நடந்த திருமணங்கள் 5 நாட்களாகி பின் 3 நாட்களாகி தற்போது இரண்டு நாட்கள் நடத்தப்படுகின்றன. அலமூஸ் குரூப்ஸ் என்று சின்னத்திரை நிகழ்சிகளுக்கு வீடியோ எக்விப்மெண்ட்ஸ் சப்ளை செய்யும் திரு வெங்கடாசலம் செட்டியாரின் இரண்டாவது மகனின் திருமணம் மிகச்சிறப்பாக நடைபெற்றது.

சனி, 19 நவம்பர், 2011

ரஞ்சனா கிருஷ்ணனின் கல்யாண கலாட்டா. கீழே விழுந்த மாப்பிள்ளை..



தேனியிலிருந்து காஞ்சிபுரம் வந்தார்கள் மாப்பிள்ளை வீட்டினர். மிக நீண்ட பிரயாணத்தின் காரணமாய் மிகவும் சோர்வாகவே காணப்பட்டார் அவர். மண்டபத்தின் வாயில் படியேறும்போதே தடுக்கி விட்டது. என் தோழிகள் அனைவரும் ஏய் என்னப்பா இப்பவே அவர "பிளாட்" ஆக்கிட்ட என கிண்டல் அடிக்கத் தொடங்கினர்.

வெள்ளி, 18 நவம்பர், 2011

பத்மா இளங்கோவின் கல்யாண கலாட்டா..ஹவுஸ்ஃபுல் கார்.

பத்மா இளங்கோ..:-

எங்க திருமணத்தில் முதல் நாள் ஜானவாசத்தில் பெண்ணை அலங்கரிக்கப்பட்ட காரில் ஊர்வலமாக திருமணமண்டபத்துக்கு அழைத்துச் செல்வார்கள். அப்போ அந்த கார் முழுக்க குழந்தை குட்டிகள் எல்லாம் ஏறி உக்கார்ந்துகிட்டாங்க..

வியாழன், 17 நவம்பர், 2011

ரூஃபினா ராஜின் செக்யூரிட்டி திருமணம்.

ஒரு பெண்ணைப் பெற்றவர்களே அவளின் திருமணத்தைப் பற்றி பலவாறு சிந்திக்கையில் நான் இரண்டு பெண்களைப் பெற்றவள். மூத்த பெண்ணின் திருமணத்திற்கு தயார் ஆக நீண்ட காலம் இருந்தது. அவள் திருமணம் முடித்து திரும்பிப் பார்ப்பதற்குள் அடுத்த பெண் திருமணத்திற்கு தயாராக.
தங்கத்தில் செய்த முதலீடு அபாரமானது. சிறுக சிறுக நகைகள் சேர்த்து வைத்திருந்ததால் தங்கத்தின் இமய விலை என்னை மிரட்டவில்லை.

செவ்வாய், 15 நவம்பர், 2011

எல் கேயின் கல்யாண கலாட்டா . செப் இவள் புதியவளில்.



திருமணங்களில் கலட்டாக்களுக்குக் குறைவிருக்காது. என் திருமணத்தில் நடந்த சிறு சுவாரஸ்யமான சம்பவம். கல்யாணத்திற்கு முதல்நாள் நிச்சயதார்த்தம் நடக்கும். அப்பொழுது மாப்பிள்ளைக்கு மோதிரமோ இல்லை கைக்கடிகாரமோ மச்சினன் போடுவான். இது வழக்கம். எனது திருமணத்தில் எனது மாமனார் மோதிரமும், மச்சினன் கடிகாரமும் போடுவதாக இருந்தனர்.

வியாழன், 22 செப்டம்பர், 2011

பங்குச் சந்தையில் கலக்கும் திருமதி முத்துசபாரெத்தினம் ஆச்சி அவர்கள் பேட்டி.

”அந்த பேங்க் என்ன ஆச்சு? இன்னிக்கு ஏறுமா.. வச்சுக்குவோமா, வித்திருவோமா?”


இந்த ஷேர் மார்க்கெட் குரலுக்குச் சொந்தக்காரர் 65 வயதான முத்துக்கருப்பாயி ஆச்சி. ஆண்களே அஞ்சி ஒதுங்கும் பங்குச் சந்தையில் அநாயாசமாக விளையாடிக் கொண்டிருக்கிறார் ஆச்சி.

புதன், 10 ஆகஸ்ட், 2011

மழைக்காலத்தில் குழந்தைகளின் நலம் காப்பது எப்படி.? டாக்டர் முகமது ஆசிஃப்..

வெய்யில் காலம் முடிந்து மழைக்காலம் தொடங்கியவுடனே வீட்டில் இருக்கும் சின்னக் குழந்தைகளுக்கு வியாதிகள் ஆரம்பிக்கத் தொடங்கும். அதுவரையில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை கொஞ்சம் காய்ச்சல்., சளி என்று நை நை என்று அழ ஆரம்பிக்கும். பெரியவர்களுக்கு வந்தாலே கஷ்டம் எனும் போது குழந்தைகளுக்கு வந்தால் எப்படித்தாங்குவார்கள்.. ?குழந்தைகளுக்கு இதுபோல மழைக்காலம் ஆரம்பித்தபின் வரும் உடல் நலக் கோளாறுகளுக்காக என்ன செய்யவேண்டும்., எப்படிக் குழந்தைகளை இவற்றிலிருந்து பாதுகாக்க வேண்டும் என சுபம் மருத்துவமனையைச் சேர்ந்த டாக்டர் முகமது ஆசிஃப் அவர்களிடம் நம் வாசகியருக்காக நோய்த்தடுப்பு முறைகள் பற்றிக் கேட்டேன். அவர் கூறியவற்றைத் தொகுத்துள்ளேன்.

செவ்வாய், 9 ஆகஸ்ட், 2011

ஹுசைனியின் பேச்சிலர் சமையல்...


வீட்டில் பெண்களே சமைக்கிறார்கள்.. ஒரு மாறுதலுக்கு ஆண்கள் சமைத்தால் என்ன? வாயில் வைக்க முடியுமா என்கிறீர்களா.. இந்த ஷோவை பார்த்தா அப்பிடி சொல்ல மாட்டீங்க.. நீங்களும் சின்ன பொண்ணா இருந்தப்ப இப்படித்தானே நிறைய பொருளை கெடுத்து கத்துக்கிட்டு இருப்பீங்க.. உங்களை சொல்லச் சொன்னா லிஸ்ட் போட்டு கூட சொல்வீங்க.. உங்க மலரும் நினைவுகளை..

திங்கள், 1 ஆகஸ்ட், 2011

வி ஐ பியுடன் நான். ...

ஒருநாள் முகப்புத்தகத்தில் ஒரு நண்பரை சேர்த்தேன். அது சேரன்பாண்டியன் என்ற டைரக்டர் சேரன். ஒரு முறை என்னோட ப்லாக் ஐடியை அவருக்கு அனுப்பினேன். உடனே அடுத்த நாள் ஆச்சியின் தீபாவளி பலகாரங்கள் அட்டகாசம் என்ற ஒரு பதில் வந்தது. ஒரே சந்தோஷம்தான். அதன் பின் அவர் ஸ்டேடசுக்கு பதில் போடுவதும்., படங்களுக்கு கவிதை எழுதுவதுமே எங்களைப் போன்ற ரசிகர்களின் பொழுதுபோக்கு. பலர் சென்று பார்த்துவிட்டு வந்து அது பற்றி ஃபோட்டோ போடுவார்கள்.
Related Posts Plugin for WordPress, Blogger...