எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 20 ஜூலை, 2012

”பூவரசி” ஈழவாணி ஜெயாதீபன்

பூவரசி ஈழவாணி ஜெயாதீபன். :-

வாணி ஜெயாதீபன் இலங்கையைச் சேர்ந்தவர். ஈழவாணி என்ற புனைபெயரில் எழுதி வருகிறார். இவர் ஒரு பத்ரிக்கையாளர், கவிஞர், எழுத்தாளர், குறும்பட இயக்குநர். 2004 இல் இலங்கையில் இருந்து மலேசியாவுக்கு குடிபெயர்ந்தவர். பின் 2007 இல் இருந்து இந்தியாவில் வசித்து வருகிறார்.


எழுத்தாளர்கள் பலருண்டு என்ற போதிலும் இலங்கையின் சூழலில் நிஜம் பொங்கும் “செந்தணல்” என்ற பத்ரிக்கையை தன் இருபதுகளிலேயே நடத்தியவர். ”நிறங்கள்” இவரின் முதல் கவிதைத் தொகுதி. இரண்டாவதாக ”சிதறல்” என்ற சிறுகதைத் தொகுப்பு, மூன்றாவதாக ”ஒரு மல்லிகை சிவக்கிறது” என்ற குறு நாவல், நான்காவதாக ”நெஞ்சோடு கொஞ்சும் நாட்டார் பாடல்கள்” என்ற தொகுதியையும் வெளியிட்டு இருக்கிறார்.

இந்தியா வந்தபின் ”தலைப்பு இழந்தவை” என்ற கவிதைத் தொகுதி தகிதாபதிப்பகத்தின் வெளியீடாக வந்துள்ளது. சமீபத்தில் வந்துள்ள கவிதைத் தொகுதி “ ஒரு மழை நாளும் நடுநிசி தாண்டிய ராத்திரியும்”.

 ”பூவரசி நிஜமும் புனைவும்” என்ற இணைய இதழையும் ”பூவரசி” என்ற காலாண்டிதழையும் சிறப்பாக நடத்தி வருகிறார். சமீபத்தில் அவர் எடுத்து வரும் குறும்படம் “ அம்மா வருவாள்” இது புலம் பெயர்ந்த ஒரு குழந்தையின் எண்ணங்களை சொல்வதாக இருக்கிறது.

இன்னொரு ஆவணப்படமும் எடுத்து வரும் ஈழவாணி ” தன்னுடைய எழுத்துக்களில் தான் ஒருபோதும் போதனைகள் செய்வதில்லை. சீர்திருத்துவதில்லை. தான் வாழ்ந்துவரும் இந்தக் காலகட்டதை ஒரு எழுத்தாளராக, கவிஞராக, இயக்குநராக எனக்கு இவ்வாறு நிகழ்ந்தது என்று பதிவு செய்கிறேன்” என்று கூறுகிறார்.


3 கருத்துகள்:

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...