வெள்ளி, 6 ஜூலை, 2012

மணவாளன் அவர்களின் “சாதனை அரசிகள்” விமர்சனம்

 இந்நூலை வாசித்ததும் எனக்கு ஓர் ஆச்சர்யம் ஏற்பட்டது. என்னவெனில் பெரும்பாலும் கவிஞர்கள் கற்பனை புனைந்து எழுதித்தான் மற்றவர்களை மகிழ்விப்பார்கள். ஆனால் இந்தக் கவியோ 17 பொருளாதார ரீதியாகப் பின் தங்கிய பெண் சாதனையாளர்களின் உண்மைச் சம்பவங்களை முழுமையாகக் கேட்டு ஆராய்ந்து பின்பு அதை மாத்திரை வடிவத்தில் வாசிப்பவர்களுக்கு எளிதில் புரியும் வகையில் தொகுத்து அளித்திருப்பதுதான்.

இந்நூலின் மூலம் பெண்கள் தாங்கள் பெண் என்ற எண்ணத்தை மட்டுமே நினைக்காமல் அவர்களின் தேவையை அறிந்து விடாமுயற்சியுடன் நிச்சயம் வெற்றி அடைவோம் என்ற எண்ணத்துடன் கடினமாக உரிய வகையில் உழைத்தால் ஒருநாள் அவர்கள் தேவையை அடைந்து வெற்றிக் கனியைப் பறிக்க முடியும் என்பதை இவ்வுண்மை சம்பவங்களின் மூலம் பெண்களுக்கு விழிப்புணர்வுவை ஊட்டி அவர்களை தூண்டுகிறார். அத்துடன் ஒவ்வொரு சாதனையாளரும் கூறும் ஆலோசனை “டிப்ஸ்” களையும் கொடுத்துள்ளார். எளிய நடையில் தொடர்ந்து வாசிக்கும் விதமாக தொய்வின்றித் தொகுத்து இருப்பது பாராட்டிற்குரியது. முதல் நூலாக இருப்பினும் தன் முத்திரையைப் பதிக்க நூலாசிரியர் முயற்சித்து இருப்பது வாசிக்கும்போது தெரிகிறது. இந்நூல் பெண்களின் மத்தியில் நிச்சயம் பேசப்படும், வெற்றியும் அடையும்.

இந்நூலை நான் பரிந்துரைக்கிறேன், கிராம நூலகங்களில் நிச்சயமாக இடம் பெற வேண்டியநூல். மேலும் பல சிறந்த நூலகளை எதிர்காலத்தில் இந்நூலாசிரியர் உருவாக்குவார் என்பது திண்ணம்.

 --- ஆ. மணவாளன்

டிஸ்கி:- உங்கள் விமர்சனத்துக்கு நன்றி மணவாளன் சார். உங்கள் எண்ணப்படியும் ஆசீர்வாதத்தின் படியும் அடுத்த நூல்களையும் சிறப்பாக செய்ய முயல்கிறேன்.

1 கருத்து:

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக