எதிர்பாராத மழையோ
ஆளடிக்கும் வெய்யிலோ
ஒதுங்கச் செய்கிறது
அருகாமை வீட்டை..
தெரியாதவர் வீட்டு வாசலில்
ஒதுங்குவது நல்லது.
தெரிந்தவர் வீட்டு
வரவேற்பறையை விட..
ஜூஸோ., காஃபியோ
துண்டோ தரும்
தொல்லையிலிருந்து
அவர்களும்..
ஈரமாகுமோ.,
அழுக்காக்கி விடுவோமோ
என தொற்றி அமரும்
கவலையிலிருந்து
நாமும் விடுபடலாம்.
டிவியை முறைப்பதோ.,
புத்தகம் புரட்டுவதோ
உரையாடுவதோ கூட
கடினமாயிருக்கிறது.
ஓசிக்குடை கேட்போமோ
என்று அவர்களும்
கேட்க வேண்டி வருமோ
எனத் தயங்கி நாமும்
சம்பந்தமில்லாத ஊர்க்கதையில்.
ஓரளவு நின்ற மழையோ
மூட்டமிடும் வெய்யிலோ
இன்பமளிக்கிறது
இருவரையும் அவஸ்தையில்
இருந்து விடுவித்து..
டிஸ்கி:- இந்தக் கவிதை செப்டம்பர் 2011 சமுதாய நண்பனில் வெளியானது.

ஆளடிக்கும் வெய்யிலோ
ஒதுங்கச் செய்கிறது
அருகாமை வீட்டை..
தெரியாதவர் வீட்டு வாசலில்
ஒதுங்குவது நல்லது.
தெரிந்தவர் வீட்டு
வரவேற்பறையை விட..
ஜூஸோ., காஃபியோ
துண்டோ தரும்
தொல்லையிலிருந்து
அவர்களும்..
ஈரமாகுமோ.,
அழுக்காக்கி விடுவோமோ
என தொற்றி அமரும்
கவலையிலிருந்து
நாமும் விடுபடலாம்.
டிவியை முறைப்பதோ.,
புத்தகம் புரட்டுவதோ
உரையாடுவதோ கூட
கடினமாயிருக்கிறது.
ஓசிக்குடை கேட்போமோ
என்று அவர்களும்
கேட்க வேண்டி வருமோ
எனத் தயங்கி நாமும்
சம்பந்தமில்லாத ஊர்க்கதையில்.
ஓரளவு நின்ற மழையோ
மூட்டமிடும் வெய்யிலோ
இன்பமளிக்கிறது
இருவரையும் அவஸ்தையில்
இருந்து விடுவித்து..
டிஸ்கி:- இந்தக் கவிதை செப்டம்பர் 2011 சமுதாய நண்பனில் வெளியானது.

அருமை... பாராட்டுக்கள்...
பதிலளிநீக்குதொடருங்கள்... நன்றி…