கூட்டாஞ்சோறு
– அணிந்துரை.
நிஜமான கூட்டாஞ்சோறு
என்றால் இது தான். புதுக்கவிதைகள் மட்டுமல்ல. மரபுக்கவிதைகளும் வெண்பாக்களும் க்ளெரிஹ்யூக்களும்
கூட கூட்டாஞ்சோற்றில் இடம் பெற்றுள்ளன. சுற்றுச்சூழல், இயற்கை ஆக்கிரமிப்பு, விவசாயம்,
வான்பொய்த்தல், மழை, தரிசு, வெள்ளாமை, காதல், பாசம், காமம், உறவுகள், மூன்றாம் பாலினத்தவர்,
கிராமம் எனப் பல்வேறு பாடுபொருட்களுடன் துலங்குகின்றன கவிதைகள். அனைத்துக் கவிதைகளையும்
பக்குவமாக ருசியான ஒரே கூட்டாஞ்சோறாக்கிய இம்மாபெரும் முயற்சிக்கு என் வாழ்த்துக்கள்.
கலக்கல் ட்ரீம்ஸின்
வெளியீடான இதில் பதினாறு கவிஞர்கள் எழுதி இருக்கிறார்கள். தன சக்தி, சீதா, ஸ்வேதா, கார்த்திக் மணி, ராம் சங்கரி, காயத்ரி அருண்குமார், கிருபாஷினி, மதுவதனி, கரிக்கட்டி கவிராயர், ஸ்ரீபுஷ்பராஜ், தமிழ்த்தென்றல், சாயா சுந்தரம், அனுசரன், கடவுளின் ரசிகன், மதுரை சிக்கந்தர், வைகை ராஜீவ் ஆகியோர்.