எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
சுற்றுச் சூழல் விழிப்புணர்வு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சுற்றுச் சூழல் விழிப்புணர்வு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
திங்கள், 17 டிசம்பர், 2018
சனி, 11 ஆகஸ்ட், 2018
ஞாயிறு, 22 அக்டோபர், 2017
இந்திய நதிநீர் இணைப்பு.
எத்தனை நதிகள் எத்தனை நதிகள்
அத்தனை நதியும் பெண்ணின் பெயர்கள்.
தாய்மைப் பண்பில் பெருகிடும் அன்பில்
வாய்மை தவறா மனிதர்கள் போலே
பொங்கிப் பெருகிய புதுப்புனல் ஆறுகள்
மங்கிப் போனதே மண்ணாய் ஆனதே
தவஞ்செய்து பெற்ற தவத்திரு நதிகள்
அவஞ்செய்த காரணம் காணாமல் போனதே
இடிப்பார் இல்லாமல் உரைப்பார் கேளாமல்
இந்திய நதிநீர் இழிந்தே கழிந்ததே.
அத்தனை நதியும் பெண்ணின் பெயர்கள்.
தாய்மைப் பண்பில் பெருகிடும் அன்பில்
வாய்மை தவறா மனிதர்கள் போலே
பொங்கிப் பெருகிய புதுப்புனல் ஆறுகள்
மங்கிப் போனதே மண்ணாய் ஆனதே
தவஞ்செய்து பெற்ற தவத்திரு நதிகள்
அவஞ்செய்த காரணம் காணாமல் போனதே
இடிப்பார் இல்லாமல் உரைப்பார் கேளாமல்
இந்திய நதிநீர் இழிந்தே கழிந்ததே.
சனி, 30 ஜூலை, 2016
நொய்யல் நோயில்...
எனது நொய்யல் கவிதை
நொய்(த)யல்
------------------
ஆற்றில் போட்டாலும்
அளந்து போடு..
சொல்லிக் கொடுக்கப்பட்ட
பழமொழி
சரியாகச் சேரவில்லை
சாயப்பட்டறைக்காரர்களுக்கு..
கடல் வரை
நீட்ட உத்தேசித்து
கையறு நிலையாய்
கிடத்தியதுதான் மிச்சம்..
வயலும் இல்லாமல்
வாழ்வும் இல்லாமல்
வெளிநாட்டின்
மானம் காக்கும் உடைகளில்
காயடித்துக் கிடக்கிறது
கிழிக்கப்பட்ட தோலுடன்
சாயம் பூசி நொய்யல்.
------------------
ஆற்றில் போட்டாலும்
அளந்து போடு..
சொல்லிக் கொடுக்கப்பட்ட
பழமொழி
சரியாகச் சேரவில்லை
சாயப்பட்டறைக்காரர்களுக்கு..
கடல் வரை
நீட்ட உத்தேசித்து
கையறு நிலையாய்
கிடத்தியதுதான் மிச்சம்..
வயலும் இல்லாமல்
வாழ்வும் இல்லாமல்
வெளிநாட்டின்
மானம் காக்கும் உடைகளில்
காயடித்துக் கிடக்கிறது
கிழிக்கப்பட்ட தோலுடன்
சாயம் பூசி நொய்யல்.
நன்றி:தேனம்மை லெக்ஷ்மணன்,கீற்று இணையத்தளம்
நன்றி காந்திய மக்கள் இயக்கம் திருப்பூர்.
நன்றி காந்திய மக்கள் இயக்கம் திருப்பூர்.

வெள்ளி, 2 அக்டோபர், 2015
மலைகளைக் கிள்ளும் எலிகளும் நீராதாரங்களைக் கூறாக்கும் நரிகளும்.
சரித்திரப் பிரசித்திபெற்ற கோட்டைகளுடன் கூடிய மலைகளை அறிந்திருக்கலாம். ஆனால் பூகோளத்தில் ஒரு காலத்தில் இடம்பெற்றிருந்தும் கடல் விழுங்காமல் காற்றுக் குடிக்காமல் சிதறிச் சரிந்த மலைகள் மதுரை செல்லும் வழியிலும் திருச்சி செல்லும் வழியிலும் உண்டு.
ஆட்டுக்கிடாய்களின் உப்புக்கண்டக் கவிச்சியைப் போல வெய்யிலில் காயும் வெண் துண்டங்களைக் கண்டு மனம் பதறியதுண்டு. வெட்டிச்சாய்க்கப்பட்ட மரங்களைப் போல வீழ்ந்து கிடக்கும் மலைகளைக் கண்டு கண்கசிந்ததுண்டு.
மழை வளம் , நீர் வளம் , நில வளம் இயற்கை வளம், மூலிகை வளம், வனவிலங்குகள் வளம், மேய்ச்சல் நிலம், அபூர்வ தாவரங்கள், அருவிகள், சுனைகள் இவை எவையுமே இல்லாமல் வெறும் மொட்டைப் பாறைகளாக நின்றாலும் அவை நம் எக்கோ சிஸ்டத்தில் முக்கியப் பங்கு வகிப்பவை.
ஆட்டுக்கிடாய்களின் உப்புக்கண்டக் கவிச்சியைப் போல வெய்யிலில் காயும் வெண் துண்டங்களைக் கண்டு மனம் பதறியதுண்டு. வெட்டிச்சாய்க்கப்பட்ட மரங்களைப் போல வீழ்ந்து கிடக்கும் மலைகளைக் கண்டு கண்கசிந்ததுண்டு.
மழை வளம் , நீர் வளம் , நில வளம் இயற்கை வளம், மூலிகை வளம், வனவிலங்குகள் வளம், மேய்ச்சல் நிலம், அபூர்வ தாவரங்கள், அருவிகள், சுனைகள் இவை எவையுமே இல்லாமல் வெறும் மொட்டைப் பாறைகளாக நின்றாலும் அவை நம் எக்கோ சிஸ்டத்தில் முக்கியப் பங்கு வகிப்பவை.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)