எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
விஷ்ணு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
விஷ்ணு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 24 மே, 2021

மும்மூர்த்திகளையும் குழந்தையாக்கிய அன்னை அனுசூயா.

 மும்மூர்த்திகளையும் குழந்தையாக்கிய அன்னை அனுசூயா.


பொறாமை வந்துவிட்டால் முப்பெரும் தேவியரும் மானுடர் போலத்தான் நடந்து கொள்கிறார்கள். அவர்கள் பொறாமையால் மும்மூர்த்திகளும் குழந்தையாக நேர்ந்தது. அதுவும் ஒரு முனிவரின் மனைவியான அனுசூயா அம்மூவரையும் குழந்தையாக்கி விட்டாள். நம்பமுடியவில்லைதானே. அது எப்படி நிகழ்ந்தது என்று பார்ப்போம் வாருங்கள் குழந்தைகளே.

ஞாயிறு, 21 ஜூலை, 2019

விகடக் கூத்தாடிய விச்வக்சேனர். தினமலர் சிறுவர்மலர் - 24.

விகடக் கூத்தாடிய விச்வக்சேனர்
நம்மிடம் இருக்கும் ஒரு பொருள் பறிபோய்விட்டால் அதைப் போராடிப் பெற முயல்வோம். மன்னர்கள் தம் பொருளை இழந்தால் யுத்தம் நிகழ்த்தி அப்பொருளைக் கைப்பற்றுவார்கள். ஆனால் விச்வக்சேனர் என்பவர் ஒரு பொருளைக் கைப்பற்ற விகடக் கூத்தாடினார். அது என்ன என்று பார்ப்போம் வாருங்கள் குழந்தைகளே.
விஷ்வக்சேனர் என்பவர் ஆதிசேஷன் , கருடன் போல் நித்யத்துவம் வாய்ந்தவர். துலா மாசம் பூராட நட்சத்திரத்தில் பிறந்தவர் இவர். இவரின் மனைவி பெயர் சூத்ரவதி. இவர் எல்லாத் திசைகளிலும் விஷ்ணுவின் படைகளுக்கு சேனைத்தலைவராக விளங்குபவர். அதனால் இவரை சேனை முதலி, சேனாதிபதி ஆழ்வான் அப்பிடின்னு அழைக்கப்படுகின்றார்.
நம்மாழ்வாருக்கு உபதேசம் செய்த பெருமை உடையவர். பராசரபட்டரால் வணங்கப்பட்ட பெருமைக்குரியவர். சடகோபரே இவரோட அம்சமாகத்தான் அவதரித்தார். பெருமாள் என்ன நினைக்கிறாரோ அதை உணர்ந்து செயல்படுத்தக்கூடிய வலிமை வாய்ந்தவர் விஷ்வக்சேனர்.

திங்கள், 29 ஏப்ரல், 2019

உயிர் ஒன்று உடல் இரண்டு. தினமலர் சிறுவர்மலர் - 14.

உயிர் ஒன்று உடல் இரண்டு.
அதென்ன உயிர் ஒன்று உடல் இரண்டு. அப்படி யாரும் இருக்க முடியுமா. இருந்தாலும் எப்படி வாழ முடியும். எப்படி இரு உடலில் ஒரு உயிர் இருக்கும், கேட்கவே விநோதமாக இருக்கிறதல்லவா குழந்தைகளே. அது எப்படி எனச் சொல்கிறேன் கேளுங்கள்.
மந்தார மலையை மத்தாகவும் வாசுகி என்னும் பாம்பைக் கயிறாகவும் கொண்டு பாற்கடலை அசுரர்களும் தேவர்களும் கடைந்த போது முதலில் ஆலகால விஷம் வெளிப்பட்டது. அதை ஈசன் உண்டு கண்டத்தில் நிறுத்தி உலகைக் காப்பாற்றினார்.
அடுத்து காமதேனு, கற்பக விருட்சம், லெக்ஷ்மி, சந்திரன், ஐராவதம், உச்சைசிரவஸ், அமிர்தம் போன்றவை வெளிப்பட்டன. இதில் அமிர்தம் கொண்ட கலசத்தை ஏந்தியபடி தன்வந்திரி வெளிவந்தார். இந்த அமிர்தம் சாகாவரம் கொடுக்கக் கூடியது. இதை வேண்டித்தானே அசுரர்களும் தேவர்களும் பாற்கடலைக் கடைந்தார்கள்.
அதனால் அமிர்தம் கிடைத்தவுடன் அசுரர்களுக்கும் தேவர்களுக்கும் அதை அடையப் போட்டி ஏற்பட்டது. ஒரே களேபரம். பார்த்தார் விஷ்ணு . உடனே மோகினி அவதாரம் எடுத்து தன்வந்திரியின் கையில் இருந்த அமிர்த கலசத்தைத் தன் கையில் வாங்கி அனைவருக்கும் பகிர்ந்தளிப்பதாகக் கூறினார்.

ஞாயிறு, 23 டிசம்பர், 2018

கடமை தவறியதால் அழகை இழந்த தர்மராஜன். தினமலர். சிறுவர்மலர் - 49.

கடமை தவறியதால் அழகை இழந்த தர்மராஜன்
ரு காலத்தில் மிக அழகாக இருந்த இளைஞன் ஒருவன் மிகப் பயங்கரமான உருவத்தை அடையும்படி நேரிட்டது. அந்த அழகு தர்மராஜனான அவனை அப்படிச் செய்தவர் கயிலைமலையில் வாழும் பரமேஸ்வரன்தான். அதுவும் தர்மராஜன் செய்துவந்த தொழிலின் நிமித்தம்தான். அது என்ன தொழில். ஏன் அவர் அழகை இழந்தார் எனப் பார்ப்போம் குழந்தைகளே.
ர்மராஜனின் கொள்ளுப்பாட்டன் மகாவிஷ்ணு. அவரது மகன் பிரம்மா தர்மராஜனின் பாட்டன். அவரது மகன் சூரியன் தர்மராஜனைப் பெற்றவர். சூரியனுக்கும் உஷாதேவிக்கும் பிறந்தவன் தர்மராஜன் எனப்படும் காலதேவன். இவனை யமா என்றும் அழைப்பார்கள். இவனுக்கு இவனது தாய் உஷாதேவி மூலம் மனு என்ற சகோதரனும், யமுனை என்ற சகோதரியும் உண்டு. உஷாதேவி உருவாக்கிய இன்னொரு தாயான சாயாதேவி மூலம் சனி, சாவர்ணி மனு என்ற சகோதரர்களும் தபதி என்ற சகோதரியும் உண்டு.
சிறுவயதில் சாயாதேவியைத் தன் தாய் என நினைத்து வந்த யமா ஒரு கட்டத்தில் அது தன் தாய் அல்ல, தாயின் சாயல் கொண்ட தாய் உருவம் எனப் புலப்படுகிறது. அதனால் தன் தந்தையைத் தாய் ஏமாற்றுவதாகக் குறை கூறி கோபத்தால் காலால் எட்டி உதைத்து விடுகிறான். சாயாதேவி உடனே கோபமுற்று அவனது கால் புண்ணாகும்படி சபித்துவிடுகிறார்.

புதன், 21 நவம்பர், 2018

கர்வம் தந்த அவமானம். தினமலர். சிறுவர்மலர் - 44.

சோதனைக்கு உள்ளாக்கிய ஜோதி.



ந்த விஷயத்திலும் நானே பெரியவன் என்ற கர்வம் இருந்தால் அது அழிவுக்கே வழிவகுக்கும். அப்படி நானே பெரியவன் என்று மும்மூர்த்திகளில் இருவர் சண்டையிட்டால் என்ன ஆகும். ஈசன் அந்த கர்வத்தை எப்படிக் களைந்தார் என்பதைப் பார்ப்போம் குழந்தைகளே.  
ரு முறை படைப்புக் கடவுளான பிரம்மாவுக்கும், காக்கும் கடவுளான விஷ்ணுவுக்கும் இடையில் யார் பெரியவர் என்ற அகந்தை ஏற்பட்டது. முதன் முதலில் பொருட்களையும் மனிதர்களையும் படைப்பதால் தானே பெரியவன் என்றும் தன்னால் படைக்கப்பட்ட அந்தப் பொருட்களைக் காப்பவர்தான் விஷ்ணு என்றும் ஆகையால் தானே பெரியவன் என்று கூறினார் படைப்புக் கடவுள் பிரம்மா. பொருட்களைப் படைத்தல் பெரிதல்ல. படைக்கப்பட்ட பொருட்களையும் மனிதர்களையும் காத்து வருதலே அரும்பணி என்றும் அதனால் தானே பெரியவன் என்றும் விஷ்ணு கூறினார்.
இவ்வாறு இவர்கள் இருவரும் சண்டையிட்டபடி இருந்ததை ஈசன் பார்த்தார். இருவரிடமும்  ஒன்றும் சொல்லாமல் சிவன் ஜோதி ரூபமாக விண்ணையும் பாதாளத்தையும் தொட்டபடி நின்றார். ”என் அடிமுடியை அறிந்து சொல்பவரே பெரியவர்” என்று ஜோதியில் இருந்து சக்தி வாய்ந்த அசரீரி புறப்பட்டது.

திங்கள், 13 ஆகஸ்ட், 2018

தாயைக் காத்த தனயன்.( கத்ருவைக் காத்த கருடன்.) தினமலர். சிறுவர்மலர் - 29.


தாயைக் காத்த தனயன்.( வினதையைக் காத்த கருடன்.)

தாய் சொல்லைத் தட்டாத தனயன்களைப் பார்த்திருக்கிறோம். ஆனால் தாயைக் காத்த தனயன் என்றால் அதில் முதலிடம் வகிப்பது கருடன் மட்டுமே. அவர் தாயான வினதைக்கு நேர்ந்த இக்கட்டு என்ன அதை அவர் எப்படிக் களைந்து தன் தாயைக் காப்பாற்றினார் என்று பார்ப்போம் குழந்தைகளே.

கஸ்யபர் என்ற முனிவருக்கு கத்ரு, வினதை என்று இரு மனைவிகள் இருந்தார்கள். வினதைக்குக் கருடன், அருணன் என்று இரு மகன்களும், கத்ருவுக்கு ஆயிரம் நாகங்கள் மகன்களாகவும் பிறந்தார்கள். கத்ருவின் புதல்வர்களும் வினதையின் புதல்வர்களும் தாய்ப்பாசம் மிக்கவர்கள். தங்கள் தாய் சொல்லைத் தட்டாதவர்கள்.
Related Posts Plugin for WordPress, Blogger...