புதன், 21 செப்டம்பர், 2011

குமுதமும் யவண்டம் வைரவன் செட்டியார் அவர்களும்..

குமுதம் .. எங்கள் வாழ்வில் மறக்கமுடியாத பெயர். வங்கிகள்., பல்கலைக்கழகங்கள்., கோயில் திருப்பணிகள்., தமிழிசைச் சங்கம்., சினிமா., எனப் பல துறைகளிலும் வேரோடிய நகரத்தார் பதிப்பங்களிலும் தங்கள் பங்களிப்பைச் செய்துள்ளார்கள். நிறைய புத்தக நிறுவனங்கள் ( வானதிபதிப்பகம்., மணிமேகலை., மணிவாசகர்., செல்வி ) என பதிப்பங்களுக்கு நடுவில் தேவி ப்ரஸ் என்பதும் குமுதம் ஆதிகாலத்தில் வெளியிடப்பட்ட ஒரு இடமாகும். இன்றைய குமுதம் அலுவலகம் இருக்கும் இடத்தில்தான் தேவி ப்ரஸ் இருந்திருக்கிறது.


குமுதம் நிறுவனர்கள் எஸ் ஏ பி அவர்களும்., யவண்டம் ( அன்றைய ரெங்கோனில் யவண்டம் என்ற ஊரில் கொண்டு விக்கச் சென்றதால் இந்தப் பெயர்) வைரவன் செட்டியார் அவர்களும் சின்னத்தா பெரியத்தா மகன்கள். வைரவன் செட்டியார் புதுவயலுக்கு பிள்ளை வளர வந்து விட்டார்கள். இருந்தாலும் இருவருக்கிடையேயும் அன்பும் தொடர்பும் இருந்தது. எஸ் ஏ பி அவர்களின் கல்லூரி (திருச்சி செயிண்ட் ஜோசப் காலேஜ்) நண்பர் பார்த்தசாரதி. இவர்கள் மூவரும் சேர்ந்து குமுதம் பத்ரிக்கையைத் தொடங்கினார்கள். இது வைரவன் செட்டியாருக்கு சொந்தமான தேவி பிரஸ்ஸில் அச்சடிக்கப்பட்டது.


தொடர்ந்து சில உடல் நலக்குறைவுகளால் அதில் கவனம் செலுத்த முடியாமல்., தன்னுடைய பிள்ளைகளையும் கேட்காமல் அதில் இருந்து வெளிவந்துவிட்டார்கள் வைரவன் செட்டியார் அவர்கள்.


இன்று குமுதம் ஆல்போல் தழைத்து கிளைவிட்டு அருகு போல் வேரோடி தமிழர்களின் வாழ்வோடு ஒன்றிணைந்து இருக்கிறது. அதன் வேராய் இருந்தவர்களுள் இவரும் ஒருவர் -- என் தம்பி மனைவியின் அப்பத்தா வீட்டு ஐயா -- எங்கள் உறவினர் என்பதே மகிழ்ச்சியாய் இருக்கிறது. வாழ்க குமுதம்.!!வளர்க அதன் பணிகள்..!!!!


11 கருத்துகள்:

ஹுஸைனம்மா சொன்னது…

அக்கா, வேர்களைக் குறித்த பெருமிதங்களை அழகாய்ப் பதிந்திருக்கிறீர்கள், இந்த மற்றும் சென்ற இரண்டு இடுகைகளிலும். வாழ்த்துகள்.

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

//இன்று குமுதம் ஆல்போல் தழைத்து கிளைவிட்டு அருகு போல் வேரோடி தமிழர்களின் வாழ்வோடு ஒன்றிணைந்து இருக்கிறது. அதன் வேராய் இருந்தவர்களுள் இவரும் ஒருவர் -- என் தம்பி மனைவியின் அப்பத்தா வீட்டு ஐயா -- எங்கள் உறவினர் என்பதே மகிழ்ச்சியாய் இருக்கிறது. வாழ்க குமுதம்.!!வளர்க அதன் பணிகள்..!!!!
//

கேட்கவே மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. அதானே பார்த்தேன்!!

”சும்மா” ன்னா சும்மாவா பின்னே!

பின்னனியில் பிரபல பத்திரிகை உலகமே உள்ளதே.

அதனால் தான் ’சும்மா’ பிச்சு உதறுகிறீர்களோ!

பாராட்டுக்கள். வாழ்த்துக்கள். நன்றிகள்.

"என் ராஜபாட்டை"- ராஜா சொன்னது…

Tamilmanam 2

"என் ராஜபாட்டை"- ராஜா சொன்னது…

Super post

அமைதிச்சாரல் சொன்னது…

அருமையாக பகிர்ந்திருக்கீங்க தேனக்கா..

இன்றைக்கும் அது அனைவராலும் விரும்பிப் படிக்கப்படும் பத்திரிகையாச்சே..

கணேஷ் சொன்னது…

எல்லாம் புரிந்தது. தம்பி மனைவியின் அப்பத்தா வீட்டு ஐயா என்றால்..? தம்பி மனைவியின் பாட்டியின் அப்பா என்பது பொருளா? குழப்பமாயுள்ளது சிஸ்டர்.

Amudhavan சொன்னது…

பாரம்பர்யம் கொண்ட ஏதோ ஒரு பெரிய குடும்பத்தின் வேர்களைக் கொண்டவர் நீங்கள் என்பதை உங்களின் சில பதிவுகளைப் படித்ததுமே உணர்ந்துகொண்டேன். அந்த வேர்கள் குமுதம்வரையிலும் செல்லுவதறிந்து மிக்க மகிழ்ச்சி.வாழ்த்துக்கள்.

Rathnavel சொன்னது…

நல்ல பதிவு.
விபரங்களுக்கு மகிழ்ச்சி.
வாழ்த்துக்கள்.

சே.குமார் சொன்னது…

அருமையாக பகிர்ந்திருக்கீங்க...

தேனம்மை லெக்ஷ்மணன் சொன்னது…

நன்றி ஹுசைனம்மா

நன்றி கோபால் சார்

நன்றி ராஜா

நன்றி சாந்தி

நன்றி கணேஷ்

நன்றி அமுதவன்

நன்றி ரத்னவேல் சார்

நன்றி குமார்.

தேனம்மை லெக்ஷ்மணன் சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக