எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
THENDRAL லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
THENDRAL லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 18 ஜனவரி, 2016

கல்யாண முருங்கை :- ( அமெரிக்கத் தென்றலில் )

கல்யாண முருங்கை :-
******************************



நாளை குடும்பக்கோர்ட்டில் அதிகாரபூர்வமாக விவாகரத்துக் கிடைத்துவிடும்.. அதன்பின் தனித் தனி மனிதர்களாகிவிடலாம். நினைக்க நினைக்கப் பொங்கிப் பொங்கி வந்தது சுபத்ராவுக்கு.எல்லாம் அவள் தப்பேதானா.. சிந்திக்க சிந்திக்க சுய வெறுப்பில் ஆழ்ந்தாள் அவள்.


நிலவு தேய்ந்து கொண்டிருந்தது. இன்னும் சில நாட்களில் முழுதாக மறைந்து பின் வளரும். தேய்வதும் வளர்வதும் பூமியின் நிழல்படுவதால். மனதையும் மனிதத்தையும் மூடும் நிழல்களால் வாழ்வும் உணர்வுகளும் நம்பிக்கைகளும் கூடத் தேய்ந்தும் வளர்ந்தும் கொண்டிருந்தன. தோட்டத்தில் இருந்த கல்யாண முருங்கை மரத்திலிருந்து சிவப்புப் பூக்கள் ஜொலித்துக் கொண்டிருந்தன அவள் கண்களைப் போல.


பால்கனியில் அமர்ந்திருந்த சுபத்ராவின் மேல் பாலொளியைத் தடவிக் கொண்டிருந்தது நிலா. கன்னங்களில் வழிந்த நீர்க்கோடுகள் பளபளத்துக் கொண்டிருந்தன. அர்ஜுனும் அங்கே வருந்திக் கொண்டிருப்பான். ஆனால் நிமிர்த்தமுடியாத அளவு வளைந்து உடைந்து போயிருந்தது அவர்களின் குடும்பமெனும் கப்பல். அதன் மாலுமிகள் இருவருமேதான் அதைக் கவிழ்த்து மூழ்கடித்துச் சென்றவர்கள்.

புதன், 3 ஜூன், 2015

அமெரிக்கத் ”தென்றலில் “ ஒரு சிறப்பிடம். :)


நண்பர் பார்த்தி ( பார்த்திபன் ஷண்முகம் ) அனுப்பியது. இவர் அமெரிக்காவில் வசித்து வருகிறார் :)

/////http://tamilonline.com/thendral/authnew.aspx?aid=10009

     தெரியுமா?: வலைப்பதிவர் தேனம்மை லெக்ஷ்மணன்
April 2015

புதன், 8 ஏப்ரல், 2015

அமெரிக்கத் “தென்றலில் “ எங்கள் அம்மாவுடன் நாங்களும்.

அமெரிக்கா கலிஃபோர்னியா மாகாணத்தில் இருந்து வெளிவரும் தென்றல் பத்ரிக்கையில் ( மார்ச் 2015 இதழில்)  எங்கள் சுசீலாம்மா பற்றி  மிக அழகாக ஒரு கட்டுரை எழுதி இருக்கிறார் திரு அரவிந்தன் அவர்கள். அம்மாவைப் பற்றிய முழுமையான தொகுப்பாகவே இதைக் கொள்ளலாம்.

திரு அரவிந்தன் அவர்கள் இந்தக் கட்டுரையை எழுதி இருக்கிறார்கள். அம்மாவைப் பற்றி அறியாதவர்கள் இலர். அவர்களின் மாணவிகளாய் இருந்த பாக்கியத்தாலேயே என்னைப் பற்றியும் உமா மகேஸ் பற்றியும் நாங்கள் அவருக்கு ( சுசீலாம்மாவுக்கு ) எங்கள் புத்தகத்தை சமர்ப்பணம் செய்தது குறித்தும் எழுதி இருக்கிறார் திரு அரவிந்தன்.
Related Posts Plugin for WordPress, Blogger...