எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
புரவி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
புரவி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 13 நவம்பர், 2017

புரவிக்கு சுசீலாம்மாவின் வாழ்த்துக்கடிதம்

புரவிக்கு சுசீலாம்மாவின் வாழ்த்துக்கடிதம்

நாங்கள் கல்லூரிப் பருவத்தில் கொண்டு வந்த கையெழுத்துப் பத்ரிக்கை புரவி  ( PEGASUS ).

அதற்கு சுசீலாம்மாவின் வாழ்த்துக் கடிதம்.

புரவிப் படைப்பாளிகட்கு,

புரவியின் பாய்ச்சலை ஒரே மூச்சில் ரசித்துவிட்டு, ரசனையின் சூடு ஆறுமுன் இதை எழுதுகிறேன்.

“சின்னஞ்சிறு கதைகள் பேசி” உழலும் மனித மந்தையரிடையே புரவிக் கூட்டம், அபூர்வமாய் மொட்டுவிட்டிருக்கும் ஒரு குறிஞ்சி மலர்க்கூட்டம் ! பேசிவிட்டுப் பிரியாமல் செயல் வடிவம் கொடுக்க முனைந்தமைக்கு முதற் பாராட்டுக்கள் !

எங்கள் புரவியும் மீனாக்ஷியின் கடிவாளமும்.

ஒவ்வொரு தோழிகளுக்குள்ளும் பேசிக்கொள்ள ஏகப்பட்டது இருக்கும்போது கல்லூரிப் பருவத்தில்  நான் என் தோழிகள் ( ஆங்கில இலக்கியம் - மீனாக்ஷி, கே ஆர்கே கீதா ) ஆகியோர் இலக்கியம் பற்றியும் நாங்கள் நடத்திவந்த புரவி - பெகாஸஸ் ( PEGASUS )   என்ற இதழ் பற்றியும் கடிதங்களில் பேசி இருக்கிறோம். அலையலையாய்ப் பறக்கும் பிடரியுடன் கூடிய நல்ல கம்பீரமான பறக்கும் குதிரை அட்டையை அலங்கரிக்கும். 5 முதல் 10 இதழ் வந்திருக்கலாம்.

அதற்கு சுசீலாம்மாவின் வாழ்த்துக்கடிதமும் இருக்கிறது. மிக அருமையான எழுத்து மீனாவுடையது. அவள் எழுதிய மூன்று கடிதங்களில் புரவி பற்றியும் அவளின் எழுத்தாற்றல் தெரிவதற்காக இன்னும் கொஞ்சமும் கொடுத்திருக்கிறேன் .

புரவியில் கடிவாளம் என்ற தலையங்கம் எழுதியது இவள்தான். அவள்தான் புரவியின் எடிட்டர் . இவளின் கடிவாளம் சாட்டையடியாக இருக்கும். பாலசந்தர் எங்க ஊர் கண்ணகி என்று படம் எடுத்த பிறகு காலத்துக்கேற்ப மாறும் பச்சோந்திகள் என்று அவரின் படங்களை அக்குவேறு ஆணிவேறாகப் பிய்த்துப்போட்டு விளாசியவள்.   இவ்வளவு திறமையை வைத்துக்கொண்டு இன்று சாட்டர்டே போஸ்டுக்கு எழுதிக்கொடு என்றால் கூட எழுத மாட்டேன் என்கிறாள்.

ஹ்ம்ம் புரவியைத் திரும்பக் கொண்டுவரலாமா என்ற எண்ணம் அவ்வப்போது எழுகிறது. அனைவரையும் ஒன்று சேர்க்க வேண்டும். பார்க்கலாம்.

மீனாவின் 3 கடிதங்களிலும் கே ஆர் கே கீதாவின் கடிதங்களிலும் எவ்வளவு சுவாரசியம்.

இது கே ஆர் கே கீதாவின் கடிதம். அதை முதலில் கொடுக்கிறேன்.

கே ஆர் கே கீதா :-WHEN ARE YOU COMING TO MADURAI ? OR YOU 'VE DECIDED NOT TO SHOW HEAD OR TAIL IN MDU ?

திங்கள், 9 பிப்ரவரி, 2015

விரல்கள்.:-



விரல்கள்.:-
================

பிரம்மிப்பு ஏற்பட்டது மனதில் அந்த ஓவியத்தைப் பார்த்ததும். எப்படி வரைய முடிந்தது இப்படி மனசை இழுத்துக் கட்டிக் கொள்கிறார்போல். இத்தனைக்கும் வெறும் பென்சிலால் ஷேட் மட்டும் கொடுத்து வரையப்பட்ட படம் அது. ஒரு ஆங்கிலோ இந்தியப் பெண் இதழ் பிரிக்காமல் சிரிப்பது போல் இருந்தது.

அந்த இதழின் ஓரத்தில் லேசாய் ஒரு மடிப்பு. அதுதான் சிரிப்புக்கு ஆதாரம்.அந்தப் படத்தில் அந்தப் பெண்ணின் கைகள், விரல்கள், சீராய் சமப்படுத்தப்பட்ட நகநுனிகள், கவுன் சுருக்கம், சுருள் முடி, பம்மினாற்போன்று அந்தக் கன்னம், பளபளத்த தோள்பட்டை எல்லாமே சேர்ந்து சிரிப்பதாகப் பிரமை அளித்தது. கொஞ்சநேரம் எதைப்பறியும் சிந்திக்க முடியவில்லை.

அதன் மேல் வைத்த கண்ணை வேரோடு பிடுங்கித்தான் எடுக்கவேண்டும் போலிருந்தது. மனசு வரிவரியாய் அந்த ஓவியத்தைப் பார்த்துப் புலம்பிக் கொண்டிருந்தது. ஓவியத்தின் இடது கை மூலையில் கீழ்ப்பக்கம் இராஜன் என்று போட்டிருந்தது.
Related Posts Plugin for WordPress, Blogger...