எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 17 ஜூலை, 2012

விண்ணில் பறந்த மனிதன் மனோஜ் விஜயகுமார்.

மனோஜ் விஜயகுமார். மனசு வைச்சா எதிலும் ஜெயிக்கலாம்னு சொல்ற திருப்பூர் தொழிலதிபர். எக்ஸ்டீஸ் என்ற பனியன் தயாரிப்பு நிறுவனத்தின் அதிபர். எக்ஸ்டீஸ் என்ற ப்ராண்டை சர்வதேச அளவில் பிரபலப்படுத்தியவர். இவரோட ஆன்லைன் டீ ஷர்ட் ஸ்டோர்ஸ் பற்றி என் டி டி வி , சி என் பி சி , டைம்ஸ் ஆஃப் இண்டியா, ஹிண்டு, இண்டியன் எக்ஸ்ப்ரஸ் , டெக்கான் ஹெரால்ட், பிசினஸ் வேர்ல்டு, பிசினஸ் டுடே, இந்தியா டுடே ஆகியவற்றில் வந்துள்ளது.


இன்ஃபோசிஸ், காக்னிஸண்ட் , மைக்ரோ சாஃப்ட், ஐ பி எம், அஸெஞ்சர், யாஹூ, கூகுள், ஐசிஐசிஐ வங்கி, ஆக்ஸிஸ் வங்கி, ஐ ஐ டி, ஐ ஐ எம், என் ஐ டி ஆகியவை இவர்களின் வாடிக்கையாளர்கள். வணிகம் சார்ந்த பத்ரிக்கைகளில் எழுதி வருகிறார். புத்தகம் வாசிப்பது, இசை கேட்பது, பயணங்கள் இவருக்குப் பிடித்தமானது.

இதை எல்லாம் விட அட்வென்சர்ஸ் இவருக்கு ரொம்பப் பிடித்தம். சமீபத்துல துபாய் போய் அங்கே எல்லா.( Dune bashing, Quad biking, Sky diving, Skiing, Scuba diving, Hot air balloon, Water theme parks, Deep sea fishing .) சாகச விளையாட்டுக்களிலும் ஈடுபட்டு வந்திருக்கிறார்.ஏற்ற இறக்கமான பாலைவன மணலில் ஜீப் ஓட்டுவது, கரடு முரடான மலையில் பைக் ஓட்டுவது, விமானத்தில் இருந்து டைவ் செய்து பறந்து இறங்குவது, பனிச்சறுக்கு, ஸ்கூபா டைவிங், வெப்பக் காற்று பலூனில் பறப்பது, வாட்டர் தீம் பார்க்குகள், ஆழ்கடலில் மீன் பிடித்தல் என பல்வேறு சாகச விளையாட்டுக்களை செய்து வந்திருக்கிறார்.

இதில் ஸ்கை டைவிங் என்பது பார்க்கும்போதே அட்ரீனலின் சுரப்பை அதிகப்படுத்துகிறது. மனோஜ் விஜயகுமார் துபாயில் ஏப்ரல் 3, 2012 செவ்வாய்க்கிழமை அன்று விமானத்தில் சென்று கிட்டத்தட்ட 15,000 அடியில் இருந்து விமானத்தில் ஸ்கை டைவிங் செய்து மேகங்களுக்குள் 200 கிமீ/ ஹவர் 75-90 விநாடிகள் வரை சில ஸ்டண்டுகள் செய்து அதன் பின் பாராசூட்டை பயன்படுத்திப் பறந்து கிட்டத்தட்ட 6 நிமிடங்களில் துபாய் பாம் வடிவ கட்டிடங்களைப் ( அட்லாண்டிஸ்-- பாம் ஜுமைரா ) பார்த்தபடி பறந்து தரை இறங்கி இருக்கிறார். இந்த நிகழ்வைப் வீடியோவாக இன்னும் இருவர் பறந்தபடி படம் பிடித்திருக்கிறார்கள். இந்த நிகழ்வின்போது ஃப்ரெட்டி என்பவரும் இவருடன் இணைந்து பறந்து இறங்கி இருக்கிறார்கள்.

இந்த சாகச நிகழ்வை தன் மகளுக்கு அர்ப்பணித்திருக்கிறார். பின்னாளில் தன்னைப் போல தன் மகளும் சாதனை அரசியாக வேண்டும் என்ற விருப்பத்தையும் தெரிவித்திருக்கிறார். இந்த சாகசப் பயணத்தை ஏன் செய்தீர்கள் என்று கேட்டால் ” பிறந்த அனைவரும் இறக்கிறார்கள், சிலர் மட்டுமே தங்கள் வாழ்வை பூரணமாக வாழ்ந்து சாதித்தபின் இறக்கிறார்கள். ” என்கிறார். தொடரட்டும் இவரின் சாகசங்களும் சாதனைகளும். !

 டிஸ்கி :- இந்த அறிமுகம் ஏப்ரல் 15 - 30 , 2012 இன் அண்ட் அவுட் சென்னையில் வெளியானது.

1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...