எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
முகநூல் அறிமுகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
முகநூல் அறிமுகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 4 செப்டம்பர், 2012

செஸ் அர்ஜுன்.. CHESS ARJUN.

மிகச் சிறு வயதிலேயே மிகச் சிறப்பாக செஸ் விளையாடி சர்வதேச  விருதுகள் பெற்றுள்ளான் அர்ஜுன். அர்ஜுனின் முன்னேற்றத்தில் அவனது அம்மாவின் பங்கு நிறைய. மகன் விளையாட வேண்டிய இடங்களுக்கெல்லாம் அவனது அம்மாதான் ஊக்கசக்தியாக இருந்து அவனை அழைத்துச் செல்வார். படிப்பு மட்டும்போதும் என எண்ணாமல் மகனின் திறமைகளையும் ஊக்குவிக்கும் அர்ஜுனின் அம்மாவிடம் சில கேள்விகள்.

1.அர்ஜுனின் செஸ் ஆர்வத்தை முதலில் கண்டுபிடித்தது யார்.

சனி, 1 செப்டம்பர், 2012

கவனகக்கலை செழிக்கும் கலைசெழியனின் ஃபெட்னா அனுபவங்கள்.

கவனகக்கலையில் சிறப்பாக ஜொலித்துவரும் கலைசெழியன் அவர்கள் சமீபத்தில் ஐக்கிய அமெரிக்க குடியரசில் நடைபெற்ற ஃபெட்னாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு மேடையில் சிறப்பு நிகழ்வுகளை நிகழ்த்தித் திரும்பி இருக்கிறார்.

அவரிடம் சில கேள்விகள்.

1, கவனகக் கலையில் எப்போதிருந்து ஈடுபட்டு வருகிறீர்கள். அஷ்டாவதானி, தசாவதானி என்பார்கள் ஒரே சமயத்தில் நீங்கள் எத்தனை விஷயங்களை கவனகப்படுத்தி இருக்கிறீர்கள் .

வெள்ளி, 20 ஜூலை, 2012

”பூவரசி” ஈழவாணி ஜெயாதீபன்

பூவரசி ஈழவாணி ஜெயாதீபன். :-

வாணி ஜெயாதீபன் இலங்கையைச் சேர்ந்தவர். ஈழவாணி என்ற புனைபெயரில் எழுதி வருகிறார். இவர் ஒரு பத்ரிக்கையாளர், கவிஞர், எழுத்தாளர், குறும்பட இயக்குநர். 2004 இல் இலங்கையில் இருந்து மலேசியாவுக்கு குடிபெயர்ந்தவர். பின் 2007 இல் இருந்து இந்தியாவில் வசித்து வருகிறார்.

வியாழன், 19 ஜூலை, 2012

உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் சொக்கலிங்கம் செந்தில்வேல்.

மிகச் சிறுவயதிலேயே பெரிய பதவிகளை வகிப்பவர் சொக்கலிங்கம் செந்தில்வேல். மயிலாடுதுறை ஏவிசி கல்லூரிகளின் ( 3 கல்லூரிகள்) செகரெட்டரி கரெஸ்பாண்டண்டாக 12 வருடங்களாக இருக்கிறார். மெஜெஸ்டிக் மஹேந்திராவின் ட்ராக்டர்ஸின் மேனேஜிங் டைரக்டராக 2005 லிருந்து இருக்கிறார்.

செவ்வாய், 17 ஜூலை, 2012

விண்ணில் பறந்த மனிதன் மனோஜ் விஜயகுமார்.

மனோஜ் விஜயகுமார். மனசு வைச்சா எதிலும் ஜெயிக்கலாம்னு சொல்ற திருப்பூர் தொழிலதிபர். எக்ஸ்டீஸ் என்ற பனியன் தயாரிப்பு நிறுவனத்தின் அதிபர். எக்ஸ்டீஸ் என்ற ப்ராண்டை சர்வதேச அளவில் பிரபலப்படுத்தியவர். இவரோட ஆன்லைன் டீ ஷர்ட் ஸ்டோர்ஸ் பற்றி என் டி டி வி , சி என் பி சி , டைம்ஸ் ஆஃப் இண்டியா, ஹிண்டு, இண்டியன் எக்ஸ்ப்ரஸ் , டெக்கான் ஹெரால்ட், பிசினஸ் வேர்ல்டு, பிசினஸ் டுடே, இந்தியா டுடே ஆகியவற்றில் வந்துள்ளது.

ஞாயிறு, 24 ஜூன், 2012

விளிம்புநிலை மனிதர்களின் விடிவெள்ளி . இளங்கோவன் பாலகிருஷ்ணன்.

எல்லாரும் தங்கள் தொழில், வளமை, வாழ்க்கை இதைப்பற்றி மட்டுமே எண்ணும்போது மத்திய அரசின் உயர் பதவியில் இருக்கும் இளங்கோவன் பாலகிருஷ்ணன் மட்டும் மாத்தி யோசித்திருக்கிறார். தன் வீடு, தன் மனைவி, தன் மக்கள் என்பதெல்லாம் தாண்டி ஒருவர் சிந்திக்கவும் பாடுபடவும் அடிப்படையிலேயே சேவை மனப்பான்மை இருந்தால்தான் முடியும்.

வியாழன், 14 ஜூன், 2012

நாட்டியத் தாரகைகள்..

அபிதா சதீஷ்குமார் இவர் ஒரு குச்சுப்புடி நடனக் கலைஞர். திருமணத்துக்கு முன் கலாஷேத்திராவில் பரதநாட்டியம் கற்று அரங்கேற்றம் செய்யும் வேளையில் இவரது குடும்ப சூழ்நிலை ஒத்துழைக்காமல் போக அன்று நிறுத்தியவர் கிட்டத்தட்ட ஒரு வருடத்துக்குமுன் குச்சுப் புடி கற்று 5 ஆவது நிகழ்ச்சியையும் நிகழ்த்தப் போகிறார்.

செவ்வாய், 12 ஜூன், 2012

இவரும் இவரின் “அவரும்” ISR செல்வகுமார்

திரு செல்வகுமார் மறைந்த நடிகர் திரு ஐ எஸ் ஆர் அவர்களின் மைந்தர். இவர் ஐ எஸ் ஆர் மீடியா வென்சர்ஸ் என்ற நிறுவனம் நடத்தி வருகிறார். இதன் வழியாக குறும்படங்கள் , ஆவணப் படங்கள் இயக்கி தயாரித்து வருகிறார். விஷூவல் கம்யூனிகேஷன் படிக்கும் மாணவர்களுக்கு அவ்வப்போது டிஜிட்டல் சினிமா பற்றி கருத்தரங்கு நடத்துகிறார். மனவளக்கலைப் பயிற்சியும் கொடுக்கிறார்.

வெள்ளி, 8 ஜூன், 2012

ஓவியக் காரிகைகள்


ஓவியக் காரிகைகள்.:-
************************

 மீனாக்ஷி மதன் அனுராதா நிகேத்.. இவர்கள் இருவரும் சென்னையில் வசிக்கும் பெண் ஓவியர்கள். தங்கள் கைவண்ணங்களால் மனம் கவரும் ஓவியங்களைப் படைத்து உலவவிடுவதில் பெண் பிரம்மாக்கள். இதில் மீனாக்ஷி மதன் பூக்களை ஸ்பெஷலாக வரைகிறார். அனுராதா நிகேதின் ஓவியங்கள் அப்ஸ்ட்ராக்ட் வகை ஓவியங்கள்.

செவ்வாய், 29 மே, 2012

ஆன்லைன் கல்வி சேவை.நாகராஜ ரவி

நண்பர் திரு நாகராஜ ரவி சிறுவர்களுக்காக ஆன்லைனில் இலவசக் கல்வி சேவை ஒன்றை ஆரம்பித்துள்ளார். ஒன்றாம் வகுப்பிலிருந்து 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் பிள்ளைகள் பள்ளியைத் தவிர இனி எங்கு சென்றாலும் நோட்டுப் புத்தகம் சுமக்க வேண்டியதில்லை. இன்சைட் க்ளோபல் குருப்பின் (INSIGHT GLOBAL GROUP) இந்த திட்டத்தின் மூலம் ஆங்கில மீடியம், தமிழ் மீடியம் படிக்கும் மற்றும் படிக்க முடியாத மாணவர்களுக்கு இந்த சமச்சீர் ஆன்லைன் கல்வி சேவை பயனுள்ளதாக இருக்கும்.

திங்கள், 28 மே, 2012

தலித் பெண்கள் சங்கத்தலைவி மணிமேகலை

தலித் பெண்கள் சங்கத்தலைவி மணிமேகலை. :- **************************************************

சாஸ்திரி பவனில் பெண்கள் சங்கத்தலைவியாய் இருக்கும் மணிமேகலை தங்கள் தலித் இனப்பெண்கள் வெளிவந்து தங்கள் சாதி பெயரை சொல்லவே பயப்பட்ட நிலையில் தலித் பெண்களுக்கென்றும் ஒரு சங்கம் ஆரம்பித்தார். அவர்களின் நலனுக்காக பாடுபட்டுக் கொண்டிருக்கிறார். இதனால் தற்போது பெண்கள் ஊக்கம் பெற்று தங்கள் நிலையை வெளியே சொல்வதாகவும் , அதனால் அவர்களுக்கெதிரான தவறுகள் குறைந்துள்ளதாகவும் சொன்னார்.

புதன், 23 மே, 2012

மனமாச்சர்யங்களை உடைப்போம். அணைகளை அல்ல. & புக் கிளப் இந்தியா ஒரு அறிமுகம்.

வள்ளங்களும் ஓடங்களும் கணக்கற்றுக் கிடப்பது மலையாள நாடு. கடவுளின் தேசம் எனப் புகழப்படும் அளவு வளமை, செழிப்பம். நூறு சதவிகிதம் கல்வியறிவு பெற்ற மக்கள். கம்யூனிஸ்ட் ஆட்சிதான் பெரும்பாலும். இருந்தும் எல்லாருக்கும் எல்லாவற்றையும் பகிர்ந்து தரும் பரந்த மனப்பான்மை இல்லை.

செவ்வாய், 22 மே, 2012

இனிய இல்லறம். அது நல்லறம். & இளம் மாஜிஷியன் ஆர்த்தி மங்களா சுப்ரமண்யம்.

இனிய இல்லறம்.. அது நல்லறம். :-
************************************

வீடென்று எதனைச் சொல்வீர்.. ஒரு கணவனும் மனைவியும் இணைந்து இறையாண்மையோடு செயல்படும் இடம்தான் வீடு.ஒரு இல்லம் இனிய இல்லமாக இருக்க கணவன் மனைவி இருவரின் கூட்டு முயற்சியும் புரிந்து கொள்ளலும் அவசியம். தான் தான் பெரியவன் அல்லது பெரியவள் என்ற எண்ணம் கணவன் மனைவிக்குள் பொதுவா இருக்கக் கூடாது.. விட்டுக் கொடுத்துப் போதலும் புரிந்து கொள்ளும் தன்மையும் அவசியம்.
Related Posts Plugin for WordPress, Blogger...