எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
இன் அண்ட் அவுட் சென்னை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இன் அண்ட் அவுட் சென்னை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வியாழன், 19 ஜூலை, 2012
புதன், 18 ஜூலை, 2012
செவ்வாய், 17 ஜூலை, 2012
விண்ணில் பறந்த மனிதன் மனோஜ் விஜயகுமார்.
மனோஜ் விஜயகுமார். மனசு வைச்சா எதிலும் ஜெயிக்கலாம்னு சொல்ற திருப்பூர் தொழிலதிபர். எக்ஸ்டீஸ் என்ற பனியன் தயாரிப்பு நிறுவனத்தின் அதிபர். எக்ஸ்டீஸ் என்ற ப்ராண்டை சர்வதேச அளவில் பிரபலப்படுத்தியவர். இவரோட ஆன்லைன் டீ ஷர்ட் ஸ்டோர்ஸ் பற்றி என் டி டி வி , சி என் பி சி , டைம்ஸ் ஆஃப் இண்டியா, ஹிண்டு, இண்டியன் எக்ஸ்ப்ரஸ் , டெக்கான் ஹெரால்ட், பிசினஸ் வேர்ல்டு, பிசினஸ் டுடே, இந்தியா டுடே ஆகியவற்றில் வந்துள்ளது.
திங்கள், 16 ஜூலை, 2012
TEACHERS OR CENTUM MAKING MACHINES..?
மாதா, பிதா, குரு , தெய்வம்னு சொல்றோம். இதுல குரு தெய்வத்துக்கு சமம். அந்த தெய்வங்கள்தான் நம்ம கல்விக் கண்ணைத் திறக்கிறாங்க. ஆனா அவங்களுக்கு இருக்க சிரமங்கள் எக்கச்சக்கம். இதுல நான் வகுப்புல சரியா சொல்லித்தராம தனியா ப்ரைவேட் ட்யூஷன் எடுக்கிற டீச்சர்களையோ, ஏதோ காழ்ப்புணர்வோடயோ, காம உணர்வோடயோ குழந்தைகள் கிட்ட நடந்துக்கிற ஆசிரியர்களைப் பற்றி சொல்லலை. அவங்க எல்லாம் விலக்கப்படவேண்டியவர்கள்.
ஞாயிறு, 24 ஜூன், 2012
விளிம்புநிலை மனிதர்களின் விடிவெள்ளி . இளங்கோவன் பாலகிருஷ்ணன்.
எல்லாரும் தங்கள் தொழில், வளமை, வாழ்க்கை இதைப்பற்றி மட்டுமே எண்ணும்போது மத்திய அரசின் உயர் பதவியில் இருக்கும் இளங்கோவன் பாலகிருஷ்ணன் மட்டும் மாத்தி யோசித்திருக்கிறார். தன் வீடு, தன் மனைவி, தன் மக்கள் என்பதெல்லாம் தாண்டி ஒருவர் சிந்திக்கவும் பாடுபடவும் அடிப்படையிலேயே சேவை மனப்பான்மை இருந்தால்தான் முடியும்.
வெள்ளி, 15 ஜூன், 2012
வியாழன், 14 ஜூன், 2012
புதன், 13 ஜூன், 2012
செவ்வாய், 12 ஜூன், 2012
இவரும் இவரின் “அவரும்” ISR செல்வகுமார்
திரு செல்வகுமார் மறைந்த நடிகர் திரு ஐ எஸ் ஆர் அவர்களின் மைந்தர். இவர் ஐ எஸ் ஆர் மீடியா வென்சர்ஸ் என்ற நிறுவனம் நடத்தி வருகிறார். இதன் வழியாக குறும்படங்கள் , ஆவணப் படங்கள் இயக்கி தயாரித்து வருகிறார். விஷூவல் கம்யூனிகேஷன் படிக்கும் மாணவர்களுக்கு அவ்வப்போது டிஜிட்டல் சினிமா பற்றி கருத்தரங்கு நடத்துகிறார். மனவளக்கலைப் பயிற்சியும் கொடுக்கிறார்.
திங்கள், 11 ஜூன், 2012
நேர்மறை சிந்தனையின் சக்தி..:-
உங்கள் செயல்களில் எல்லாம் வெற்றி தேவதை கை கோர்க்க வேண்டுமா ? சாதனைகளை
நிகழ்த்த வேண்டுமா,? பிசினசில் வெற்றிக் கொடி நாட்ட வேண்டுமா...நீங்க
யாரிடமும் சென்று என் எதிர்காலம் எப்படி இருக்கும் என கேட்க வேண்டாம். உங்கள்
எண்ணங்களே உங்கள் எதிர்காலம். என்ன ஆச்சர்யமா இருக்கா.. உண்மைதான். நான்
என்னவாக ஆக வேண்டும் என நீங்கள் விரும்புகிறீர்களோ அவ்வண்ணமே ஆக முடியும்.
எண்ணிய முடிதல் வேண்டும்.. நல்லவே எண்ணல் வேண்டும். இதுதான் டெக்னிக்..
வெள்ளி, 8 ஜூன், 2012
ஓவியக் காரிகைகள்
ஓவியக் காரிகைகள்.:-
************************
மீனாக்ஷி மதன் அனுராதா நிகேத்.. இவர்கள் இருவரும் சென்னையில் வசிக்கும் பெண் ஓவியர்கள். தங்கள் கைவண்ணங்களால் மனம் கவரும் ஓவியங்களைப் படைத்து உலவவிடுவதில் பெண் பிரம்மாக்கள். இதில் மீனாக்ஷி மதன் பூக்களை ஸ்பெஷலாக வரைகிறார். அனுராதா நிகேதின் ஓவியங்கள் அப்ஸ்ட்ராக்ட் வகை ஓவியங்கள்.
செவ்வாய், 5 ஜூன், 2012
செவ்வாய், 29 மே, 2012
ஆன்லைன் கல்வி சேவை.நாகராஜ ரவி
நண்பர் திரு நாகராஜ ரவி சிறுவர்களுக்காக ஆன்லைனில் இலவசக் கல்வி சேவை ஒன்றை ஆரம்பித்துள்ளார். ஒன்றாம் வகுப்பிலிருந்து 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் பிள்ளைகள் பள்ளியைத் தவிர இனி எங்கு சென்றாலும் நோட்டுப் புத்தகம் சுமக்க வேண்டியதில்லை. இன்சைட் க்ளோபல் குருப்பின் (INSIGHT GLOBAL GROUP) இந்த திட்டத்தின் மூலம் ஆங்கில மீடியம், தமிழ் மீடியம் படிக்கும் மற்றும் படிக்க முடியாத மாணவர்களுக்கு இந்த சமச்சீர் ஆன்லைன் கல்வி சேவை பயனுள்ளதாக இருக்கும்.
திங்கள், 28 மே, 2012
தலித் பெண்கள் சங்கத்தலைவி மணிமேகலை
தலித் பெண்கள் சங்கத்தலைவி மணிமேகலை. :-
**************************************************
சாஸ்திரி பவனில் பெண்கள் சங்கத்தலைவியாய் இருக்கும் மணிமேகலை தங்கள் தலித் இனப்பெண்கள் வெளிவந்து தங்கள் சாதி பெயரை சொல்லவே பயப்பட்ட நிலையில் தலித் பெண்களுக்கென்றும் ஒரு சங்கம் ஆரம்பித்தார். அவர்களின் நலனுக்காக பாடுபட்டுக் கொண்டிருக்கிறார். இதனால் தற்போது பெண்கள் ஊக்கம் பெற்று தங்கள் நிலையை வெளியே சொல்வதாகவும் , அதனால் அவர்களுக்கெதிரான தவறுகள் குறைந்துள்ளதாகவும் சொன்னார்.
சாஸ்திரி பவனில் பெண்கள் சங்கத்தலைவியாய் இருக்கும் மணிமேகலை தங்கள் தலித் இனப்பெண்கள் வெளிவந்து தங்கள் சாதி பெயரை சொல்லவே பயப்பட்ட நிலையில் தலித் பெண்களுக்கென்றும் ஒரு சங்கம் ஆரம்பித்தார். அவர்களின் நலனுக்காக பாடுபட்டுக் கொண்டிருக்கிறார். இதனால் தற்போது பெண்கள் ஊக்கம் பெற்று தங்கள் நிலையை வெளியே சொல்வதாகவும் , அதனால் அவர்களுக்கெதிரான தவறுகள் குறைந்துள்ளதாகவும் சொன்னார்.
வெள்ளி, 25 மே, 2012
புத்தகங்கள் வாசிப்போம். வாழ்வை நேசிப்போம். ( BAPASI)
புத்தகங்கள் வாசிப்போம். வாழ்வை நேசிப்போம்.
****************************** ********************
புத்தகம் வாசிப்பது என்பது ஒரு மனிதனைப் புதுப்பித்துக் கொள்ள உதவுகிறது. சென்னையில் நடக்கும் 35 ஆவது புத்தகக் கண்காட்சி தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் நடத்தும் புத்தக விரும்பிகளுக்கான ஒரு திருவிழா. இதில் தமிழ், ஆங்கிலம், மலையாளம், தெலுங்கு , ஹிந்தி மற்றும் பிற மொழி நூல்களுக்கான கிட்டத்தட்ட 400 பதிப்பகங்களும் புத்தக விநியோக நிறுவனங்களும் ஸ்டால் போட்டிருக்கிறார்கள். சென்ற வருடங்களை விட இந்த வருடம் இணையதளத்திலும், வலைத்தளங்களிலும் எழுதுவோரும் வாசிப்போரும் அதிகரித்திருக்கிறார்கள்.
****************************** ********************
புத்தகம் வாசிப்பது என்பது ஒரு மனிதனைப் புதுப்பித்துக் கொள்ள உதவுகிறது. சென்னையில் நடக்கும் 35 ஆவது புத்தகக் கண்காட்சி தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் நடத்தும் புத்தக விரும்பிகளுக்கான ஒரு திருவிழா. இதில் தமிழ், ஆங்கிலம், மலையாளம், தெலுங்கு , ஹிந்தி மற்றும் பிற மொழி நூல்களுக்கான கிட்டத்தட்ட 400 பதிப்பகங்களும் புத்தக விநியோக நிறுவனங்களும் ஸ்டால் போட்டிருக்கிறார்கள். சென்ற வருடங்களை விட இந்த வருடம் இணையதளத்திலும், வலைத்தளங்களிலும் எழுதுவோரும் வாசிப்போரும் அதிகரித்திருக்கிறார்கள்.
புதன், 23 மே, 2012
செவ்வாய், 22 மே, 2012
இனிய இல்லறம். அது நல்லறம். & இளம் மாஜிஷியன் ஆர்த்தி மங்களா சுப்ரமண்யம்.
இனிய இல்லறம்.. அது நல்லறம். :-
************************************
வீடென்று எதனைச் சொல்வீர்.. ஒரு கணவனும் மனைவியும் இணைந்து இறையாண்மையோடு செயல்படும் இடம்தான் வீடு.ஒரு இல்லம் இனிய இல்லமாக இருக்க கணவன் மனைவி இருவரின் கூட்டு முயற்சியும் புரிந்து கொள்ளலும் அவசியம். தான் தான் பெரியவன் அல்லது பெரியவள் என்ற எண்ணம் கணவன் மனைவிக்குள் பொதுவா இருக்கக் கூடாது.. விட்டுக் கொடுத்துப் போதலும் புரிந்து கொள்ளும் தன்மையும் அவசியம்.
************************************
வீடென்று எதனைச் சொல்வீர்.. ஒரு கணவனும் மனைவியும் இணைந்து இறையாண்மையோடு செயல்படும் இடம்தான் வீடு.ஒரு இல்லம் இனிய இல்லமாக இருக்க கணவன் மனைவி இருவரின் கூட்டு முயற்சியும் புரிந்து கொள்ளலும் அவசியம். தான் தான் பெரியவன் அல்லது பெரியவள் என்ற எண்ணம் கணவன் மனைவிக்குள் பொதுவா இருக்கக் கூடாது.. விட்டுக் கொடுத்துப் போதலும் புரிந்து கொள்ளும் தன்மையும் அவசியம்.
திங்கள், 21 மே, 2012
மின்சார சிக்கனம். தேவை இக்கணம்..( இன்& அவுட் சென்னைக் கட்டுரைகள் --2)
ஒய் திஸ் கொலைவெறிடி என்ற பாட்டை அலுக்காம சலிக்காம லட்சக்கணக்கா கேட்டுக்கிட்டு இருக்கிற இளைஞர்களுக்கு தெரியுமா கூடங்குளம் பிரச்சனை.. மின்சாரம் எப்பிடி எல்லாம் நமக்கு கிடைக்குதுன்னு.. அனல் மின்சாரம், நீர் மின்சாரம்., அணு உலை மூலம் கிடைக்கும் மின்சாரம். எல்லாம் எவ்வளவு பயன் தருது.. இதனோட நன்மை தீமை என்னன்னு..
சனி, 19 மே, 2012
அளவோடு நட்பு ( இன் & அவுட் சென்னைக் கட்டுரை -- 1)
இன்னிக்கு இருக்குற டீனேஜ் பசங்களுக்கு உள்ள பிரச்சனை என்னன்னா நல்ல படிக்கணும்., நல்ல வேலைக்குப் போகணும்., நல்லா கை நிறைய சம்பாதிச்சு கேள்வி கேப்பாரில்லாம என் ஜாய் பண்ணனும். அப்பிடித்தானே நினைப்பீங்க.. இது எல்லாத்தையும் தாண்டி ஒவ்வொரு பதின்பருவ ஆணுக்கும் உள்ள ஆசை என்னன்னா., “ பால்போலே பதினாறு . எனக்கொரு கேர்ள் ஃப்ரெண்ட் வேணுமடா” என்று சங்கரின் படப்பாடல் போல ஒரு தோழிதான். பதின் பருவத்துல இல்லாட்டியும் தன்னைப் புரிஞ்சி ஊக்கம் கொடுக்குற எல்லாப்பெண்ணையும் தோழியா நினைக்கிறாங்க.. அவங்க பதின்பருவப் பெண்ணா இருந்துட்டா ரொம்பவே சந்தோஷம்தான். அவங்களோட பைக்கில ஊர் சுத்தணும். என் கேர்ள் ஃப்ரெண்ட் என நண்பர்களுக்கு காட்டணும். அப்போ அப்போ அவகிட்ட இருந்து போன் கால் வரணும். அத கெத்தா நண்பர்கள் கிட்ட காமிச்சிகிட்டு போய் தனியா பேசணும் அவங்களுக்கு.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)

















