திருவள்ளுவர் நற்பணி மன்றம் பங்களாபுதூர் கிட்டத்தட்ட ஏழு வாரங்களுக்கு மகாகவியின் விழாவைக் கொண்டாடத் திட்டமிட்டு நான்கு வாரங்களாகக் கொண்டாடி வருகிறது. கிட்டத்தட்ட 35 ஆண்டுகளுக்கும் மேலாக கோபி செட்டிப்பாளையம் பங்களாபுதூரில் இலக்கிய சேவை ஆற்றி வருகிறது இவ்வமைப்பு. நூல்கள் சிலவும் வெளியிட்டு உள்ளார்கள். பல்வேறு சமூக சேவைகளும் செய்து வருகிறார்கள்.
அவர்கள் ஏழு வார நிகழ்வாக மகாகவியின் பிறந்தநாளை சிறப்பு அழைப்பாளர்கள் கொண்டு ஜூம் மீட்டில் நிகழ்த்தினார்கள்.
தலைப்பு :- நூறாண்டு கடந்தும் வாழும் மகாகவி
முதல் நிகழ்வில் நடிகர் ரமேஷ் கண்ணா கலந்து கொண்டு சினிமாவில் மகாகவின் பாடல்களை மேற்கோள் காட்டிப் பேசினார். ரசனையாக இருந்தது.
