எங்களுக்கெல்லாம் செல்லமாக அன்னு எனப்படும் அனிதாஶ்ரீகாந்த் வசிப்பது மஹாராஷ்டிரா டோம்பிவிலி ல. மழலை பள்ளி ஆசிரியராக இருக்காங்க. இரண்டு குழந்தைகளுக்கு( பையன் மூணாவது வருஷம் கம்ப்யூட்டர் இஞ்சினியர் படிக்கிறான்..பொண்ணு பத்தாவது படிக்கிறா) அம்மா. ஆனா எனர்ஜி லெவலில் டீனேஜ் யங்ஸ்டர். அதிரடி சரவெடி எழுத்துக்குச் சொந்தக்காரர். என் அன்புத் தங்கைகளில் ஒருவர்.
இவருக்குப் புத்தகங்கள் படிக்க ரொம்பப் பிடிக்கும். அதை விமர்சிக்கவும் பிடிக்கும். இவரை நான் கண்டடைந்ததே நுழைபுலம் என்ற நூல் விமர்சனக் குழுவில்தான். எல்லோருடனும் ஒத்திசைந்து செல்வார். அதே சமயம் செம குறும்புக்காரியும் கூட.
