நண்பர் திரு. துரை அறிவழகன் காரைக்குடி மரப்பாச்சி குழுவின் மூலம் அறிமுகமானவர். காரைக்குடி புத்தகத் திருவிழாவில் அவரது ஸ்டாலுக்குச் சென்று சில புத்தகங்கள் வாங்கினேன். அதில் “தனபாக்கியத்தோட நவநேரம்” என்ற புத்தகமும் ஒன்று.இது அவர் தொகுத்த நூல். (நான் இன்னும் நூல் விமர்சனம்/அறிமுகம் செய்யவில்லை. இனிமேல்தான் செய்யவேண்டும் :)
குழுமத்தில் அவ்வப்போது அவரின் படைப்புக்களைப் படிப்பதுண்டு. இலங்கையில் பிறந்த இவர் கல்வி கற்றது தமிழகத்தில். “அவர்களுக்காக” ,” சிறகுக் குழந்தைகள்” என்ற இரு சிறுகதைத் தொகுப்புகள் வெளியிட்டுள்ளார். ”ஸ்நோபாப்பாவின் அதிசயக்கடல்”, சிறார் எழுத்தாளர்களின் கதைகளைக் தொகுத்து “ ஒரு ஊர்ல ஒரு நரி” என்னும் தலைப்பில் நூல் கொணர்ந்துள்ளார்.
