எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
சக்தி கிருஷ்ணசாமி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சக்தி கிருஷ்ணசாமி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 18 செப்டம்பர், 2021

சாட்டர்டே போஸ்ட். மறக்கப்பட்ட மேதைகள் பற்றி திரு. முத்துமணி.

 ஜகர்த்தா, இந்தோனேசியாவில் வசித்து வருகிறார் நண்பர் முத்துமணி. இவர் தேவகோட்டையைச் சேர்ந்தவர். தமிழ் வான் அவை குழுமத்தில் இவரது கவிதைகள் சிலவற்றைப் படித்திருக்கிறேன். கொரோனாவாகட்டும், சமூக இடைவெளியில்லாத மதுப்பழக்கத்தால் ஏற்படும் அவதி ஆகட்டும், பாரதி நூற்றாண்டாகட்டும், அறிஞர் அண்ணா பற்றியதாகட்டும், அந்தந்தச் சூழலுக்கு ஏற்ற சீற்றமிகு கவிதைகள் படைத்திடுவதில் வல்லவர் இவர்! 


எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும் என்பர். இவர் வணிகவியல் பட்டதாரியாக இருந்தாலும் கணக்கியலிலும்  எழுத்திலும் தன் முத்திரையைப் பதித்துக் கண்ணெனக் காத்து  வருகிறார். கவிதைகள்மேல் இவர் கொண்ட காதலால், பித்தால் கவிக்கிறுக்கனெனவும் அழைக்கப்படுகிறார்!.

Related Posts Plugin for WordPress, Blogger...