எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
SHENOYNAGAR TIMES லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
SHENOYNAGAR TIMES லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 20 ஜூலை, 2015

காதல் காதல் காதல்.



காதல் காதல் காதல்.

நாட்காட்டியில் இருக்கும் ஒவ்வொரு நாளையும் ஒவ்வொரு விசேஷ நாளாக அறிவித்து அதை வணிகமயமாக்கும் முயற்சியில் மேற்குலகம் ஈடுபட்டிருக்கிறது. தந்தையர் தினம், அன்னையர் தினம், காதலர்தினம் என்று. அந்த வணிகத்தில் அதிகம் கொள்முதல் ஆவது காதலர் தினத்தில்தான். உலகெங்கும் மில்லியன் கணக்கில் புறாக்கள், சிறகுள்ள தேவதைகள் கொண்ட காதலர்தின வாழ்த்து அட்டைகளும், சிவப்பு இதயங்களும் ( சாக்லேட்டுகள் ) சிவப்பு ரோஜாக்களும் , பரிமாறிக்கொள்ளப்படுவது அன்றுதான். அதை ஒட்டி ஒரு வாரம் விழாக்கோலம்.

ரோமப்பேரரசில் வீரர்களுக்கு திருமணமாகிவிட்டால் போரில் நன்கு யுத்தம் செய்யமாட்டார்கள் என்று திருமணத் தடையும் காதல் தடையும் ஏற்படுத்தப்பட்டிருந்ததாம். வேலண்டைன் என்ற பாதிரியார் அவர்களுள் காதலித்த வீரருக்கு ரகசியத் திருமணம் செய்து வைத்த காரணத்தால் மரண தண்டனை பெறுகிறார். பண்டைய ரோமில் கொண்டாடப்பட்ட லூபர்கேலியா என்ற திருவிழாவின் வீரியத்தைத் தடை செய்யவே புனித வேலண்டைன் நாள் என்று அறிவிக்கப்பட்டுக் காதலர் தினம் கொண்டாடப்படுவதாகவும் சொல்லப்படுவதுண்டு.

புதன், 1 ஜூலை, 2015

பெண்களுக்கான உதவித் திட்டங்களும் உதவும் சட்டங்களும். நமது மண்வாசம் & ஷெனாய் நகர் டைம்ஸ்.

பெண்களுக்கான உதவித் திட்டங்களும் உதவும் சட்டங்களும்.

பெண்களுக்கான சமத்துவ உரிமைகள் வழங்கப்பட்டாலும் பெண்களுக்கான சலுகைகளும் சட்டங்களும் இன்னும் பெரும்பாலான பெண்களுக்கு சரியாகத் தெரிவதில்லை.. வாரிசு உரிமைச் சட்டம், வரதட்சணைக் கொடுமைத் தடுப்புச் சட்டம், குடும்ப வன்கொடுமை தடுப்புச்சட்டம்னு ஒரு சில சட்டங்கள் பத்தி ஓரளவு விலாவாரியா தெரிஞ்சிருக்கும். ஆனா பெண் குழந்தை கருவில் இருப்பதிலிருந்தே அரசாங்கம் கொடுக்கும் பலவிதமான சலுகைகளையும் பெண்களுக்கான சட்டங்களையும் பற்றித் தெரிந்து கொள்வோம்.
Related Posts Plugin for WordPress, Blogger...