காதல்
காதல் காதல்.
நாட்காட்டியில்
இருக்கும் ஒவ்வொரு நாளையும் ஒவ்வொரு விசேஷ நாளாக அறிவித்து அதை வணிகமயமாக்கும் முயற்சியில்
மேற்குலகம் ஈடுபட்டிருக்கிறது. தந்தையர் தினம், அன்னையர் தினம், காதலர்தினம் என்று.
அந்த வணிகத்தில் அதிகம் கொள்முதல் ஆவது காதலர் தினத்தில்தான். உலகெங்கும் மில்லியன்
கணக்கில் புறாக்கள், சிறகுள்ள தேவதைகள் கொண்ட காதலர்தின வாழ்த்து அட்டைகளும், சிவப்பு
இதயங்களும் ( சாக்லேட்டுகள் ) சிவப்பு ரோஜாக்களும் , பரிமாறிக்கொள்ளப்படுவது அன்றுதான்.
அதை ஒட்டி ஒரு வாரம் விழாக்கோலம்.
ரோமப்பேரரசில்
வீரர்களுக்கு திருமணமாகிவிட்டால் போரில் நன்கு யுத்தம் செய்யமாட்டார்கள் என்று திருமணத்
தடையும் காதல் தடையும் ஏற்படுத்தப்பட்டிருந்ததாம். வேலண்டைன் என்ற பாதிரியார் அவர்களுள்
காதலித்த வீரருக்கு ரகசியத் திருமணம் செய்து வைத்த காரணத்தால் மரண தண்டனை பெறுகிறார்.
பண்டைய ரோமில் கொண்டாடப்பட்ட லூபர்கேலியா என்ற திருவிழாவின் வீரியத்தைத் தடை செய்யவே
புனித வேலண்டைன் நாள் என்று அறிவிக்கப்பட்டுக் காதலர் தினம் கொண்டாடப்படுவதாகவும் சொல்லப்படுவதுண்டு.





