எனது அன்பிற்குரிய உறவினரான ( சின்னாயா மகன் வீட்டுப் பேத்தி ) சீதா என்னுடைய நூல்களை அவர் வாழும் நாடான அமெரிக்காவின் நூலகங்களுக்குக் கொடுக்க விரும்பினார். சென்ற சில மாதங்களுக்கு முன்னால் இங்கே தனது தந்தையின் சஷ்டியப்தபூர்த்திக்கு வந்திருந்தபோது ( எனது மாமா திரு. சங்கரன் அவர்களின் மகள்தான் சீதா ) எனது நூல்களைக் கேட்டிருந்தார். அவரைச் சந்திக்க அவகாசமில்லாத காரணத்தால் எனது அம்மாவிடம் நூல்களைக் கொடுத்துவிட்டு ஜெர்மனிக்குச் சென்றுவிட்டேன். அவர் என் அம்மாவிடம் இருந்து பெற்றுச் சென்று வர்ஜினியாவில் உள்ள தமிழ்ப் பள்ளி நூலகத்துக்கு வழங்கி உள்ளார். இங்கே உள்ள நூலகத்தில் 1000 க்குமேல் தமிழ்ப் புத்தகங்கள் உள்ளன என்ற தகவலையும் கொடுத்தார்.
அமெரிக்க வாழ் தமிழ்மக்களே. வெர்ஜினியா வாழ் நாட்டுத் தமிழர்களே.. எனது நூல்களை நீங்கள் இருக்குமிடத்திலேயே படித்திடலாம். எனவே லூடோன் கவுண்டி நூலகத்துக்கு வருகை தாருங்கள்.
அமெரிக்க வாழ் தமிழ்மக்களே. வெர்ஜினியா வாழ் நாட்டுத் தமிழர்களே.. எனது நூல்களை நீங்கள் இருக்குமிடத்திலேயே படித்திடலாம். எனவே லூடோன் கவுண்டி நூலகத்துக்கு வருகை தாருங்கள்.
இந்நூல் வெர்ஜினியாவில் உள்ள தமிழ்ப் பள்ளி நூலகத்தில் இந்நூல் வரிசை எண் கொடுத்து அடுக்கப்பட்டவுடன் அதையும் புகைப்படம் எடுத்து அனுப்புவதாகக் கூறி இருக்கிறார்.
