எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
SWACHA BHARAT லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
SWACHA BHARAT லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 10 நவம்பர், 2019

தூய்மை இந்தியாவும் கழிப்பறைக் கனவுகளும்

தூய்மை இந்தியாவும் கழிப்பறைக் கனவுகளும்
உணவு உடை உறையுள் ஒரு மனிதனுக்கு அத்யாவசியம் என்பார்கள். அத்தோடு சுகாதாரமான கழிப்பறையும் ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஒவ்வொரு பெண்ணிற்குமான அடிப்படைத் தேவை என்று சொல்வேன். 2019 நவம்பர் 12 இல் என் வலைத்தளத்தில் எழுதிய கட்டுரை ஒன்றில் சீர்காழி வைத்தீஸ்வரன் கோவில் சாலையில் செம்மொழி நூலகம் ஒன்று திறக்கப்படக் காத்திருக்க அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மனிதர்கள் திறந்த வெளியில் மலசலம் கழிப்பதைப் பற்றியும் நூலகத்தோடு கழிப்பிடத் தேவையின் அத்யாவசியம் பற்றியும் எழுதி இருந்தேன். அனைவருக்குமான கழிப்பறையின் தேவைகள் இப்போது நனவாகி வருவது குறித்து மகிழ்ச்சியாக இருக்கிறது.
வீட்டிற்குள் கழிவறை இல்லாத காரணத்தால் நகரமோ, கிராமமோ, முள்ளும் கல்லும் நிறைந்த காட்டுப்பகுதிகளில், திறந்த வெளிகளில், வயல்வெளிகளில், ரயில்வே தண்டவாளங்களுக்கருகில் , கண்மாய்க் கரைகளில் காலைக் கடன் கழிக்கும் மக்களை முன்பு பெருவாரியாகப் பார்க்க முடியும்.
இந்தியன் ரயில்வே தண்டவாளங்கள்தான் உலகத்திலேயே நீண்ட திறந்தவெளிக் கழிவறைகள். இந்தத் திறந்தவெளிக் கழிவறைகளில் இருந்து மக்களை விடுவித்து கிராமப்புறங்களை மேம்படுத்தக் கொண்டு வந்த திட்டம்தான் ஸ்வச்சபாரத் மிஷன் கிராமின் திட்டம். சில கிராமங்களில் இன்றும் சுகாதாரமான கழிப்பறைகள் கொண்ட வீடுகள் இல்லை. நிர்மல் பாரத் அப்யான் திட்டம் கழிவறை கட்ட நிதி உதவி செய்கிறது.
Related Posts Plugin for WordPress, Blogger...