கனவுதாசன் என்றொரு கவி ஆளுமை
கனவுதாசனின் நினைவு முற்றமெங்கும் கவிதைப்பூக்கள். அவை போதவிழ்ந்து நறுமணம் பரப்பும்போது முகிழ்க்கும் தேனில் உமர்கய்யாம் கவிதைகள் போல் நம்மையும் போதைக்குள்ளாக்குகின்றன, சில தெளியவும் வைக்கின்றன. ஆகாசவீதியில் சூரியனைப் பந்தாடுவதும் புதை சேறைச் சுனைநீராக்குவதும் இவருக்கே சாத்தியம்.
இவரின் கவிதைகள் ஹைக்கூ, க்ளரிஹ்யூ வகையிலும் பூத்துள்ளன. முருகன், மானகிரி, காரைக்குடி, கம்பன் கழகம், கண்ணதாசன், சென்னை, பாரதி , இளங்குடி மேடைக்காளி, கொல்லங்காளி , பிள்ளையார், இளங்கோவடிகள், சுந்தரர் பரவை நாச்சியார் , பட்டுக்கோட்டையார் , கொப்புடையம்மன், தளக்காவூர் அதளநாயகி, கருப்பர் , வர்ஷா கல்யாணி , பாலமுரளி கிருஷ்ணா, முத்துக்குமார், மனோரமா, நா. காமராசன், கவிக்கோ, ஆண்டாள், ஸ்ரீதேவி, பாலகுமாரன் என்று தொடர்ந்து பூக்கின்றன இவரது கவிதைகள்.
