எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
மீனாட்சி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மீனாட்சி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 26 நவம்பர், 2019

மீனாக்ஷி முதியோர் இல்லத்தில் ஒரு நாள்.

காரைக்குடியில் வனா யினா வீதியில் ( ஆலங்குடியார் வீதிக்குப் பாரலல், சந்தைப்பேட்டைக்குச் செல்லும் வழி/சந்தைப்பேட்டைக்கு அருகில் ) இருக்கிறது. மீனாக்ஷி முதியோர் இல்லம். இதை காந்திமதி அறக்கட்டளையைச் சேர்ந்த திரு கணேசனும் அவரது மனைவி திருமதி தனலெக்ஷ்மியும் நடத்தி வருகிறார்கள்.

இங்கே முதியவர்கள் மாதம் ரூபாய் 5,000/- வீதம் பணம் கொடுத்துத் தங்குகிறார்கள். இவர்களை திரு. கணேசன் அவர்களும் அவரது மனைவி திருமதி. தனலெக்ஷ்மி அவர்களும் தொண்டுள்ளத்துடன் கவனித்துப் பராமரித்து வருகிறார்கள். மூன்று வேளையும் சுடச்சுட உணவளித்துத் தங்கும் வசதியுடன் கூடியது இந்த இல்லம் ( தண்ணீர், மின்சாரம், படுக்கை, கழிவறை வசதிகள் உள்ளன )


நாள் கிழமைகளில் நம்மைப் போன்ற சிலர் உணவளிக்க விரும்பினால் அதையும் ஏற்றுக் கொள்கிறார்கள். இங்கே கிட்டத்தட்டப் பதினைந்து முதியவர்கள் தங்கி இருக்கிறார்கள்.

ஞாயிறு, 29 ஜூலை, 2018

மமதையை அடக்கிய மகேசன். தினமலர். சிறுவர்மலர் - 27.


மமதையை அடக்கிய மகேசன்.

னிதர்களுக்குத் தற்பெருமையும் தான் என்ற மமதையும் இருக்கக் கூடாது. மனிதர்களுக்கே இருக்கக்கூடாது என்றால் தெய்வீக அவதாரங்களுக்கு இருக்கலாமா. அதை மகேசன் எப்படி அடக்கினார் என்பதைப் பார்ப்போம் குழந்தைகளே.

வாட்ட சாட்டமான வயிறு பெருத்த குண்டோதரர்கள் இருவர் பந்தியில் சம்மணமிட்டு அமர்ந்து ’கல்யாண சமையல் சாதம் காய்கறிகள் ப்ரமாதம்’ என்று பாடாமலே வெளுத்துக் கட்டிக்கொண்டிருந்தார்கள்.