அழகானவர்களாக வலிமை உள்ளவர்களாகப் பிறந்தும் சிலர் தீச்செயல்கள் செய்வதால் அழிந்து படுகிறார்கள். அவர்களுக்கு உதாரணமாகத் தாடகை என்ற இயக்கர்குலப் பெண்ணைச் சொல்லலாம். தாடகை யார், அவளை ஏன் அழித்தார்கள், அவளை அழித்தவர்கள் யார் எனப் பார்க்கலாம் வாருங்கள் குழந்தைகளே.
அரக்கர் குலத்திலும் மிகவும் நற்பண்புகள் கொண்டவன் சுகேது. இவனுக்குக் குழந்தைப்பேறு இல்லாமையால் பிரம்மனைக் குறித்துத் தவம் செய்தான். பல்லாண்டுகளாய் இவன் செய்த கடுந்தவத்தால் மகிழ்ந்த பிரம்மா மயில்போன்ற அழகும் மதயானையை ஒத்த வலிமையும் உள்ள மகள் பிறப்பாள் என்று வரம் அளிக்கிறார். அதன்படிப் பிறந்தவள்தான் தாடகை.
இவள் திருமணப் பருவம் எய்தியதும் இவளது தந்தை சுகேது இவலை சுந்தன் என்ற இயக்கனுக்கு மணம் புரிந்துவைத்தான். இவர்களுக்கு மாரீசன், சுவாகு என்ற இருமகன்கள் பிறந்தனர்.
எல்லாம் சுமுகமாகவே போய்க்கொண்டிருந்தது. ஆனால் ஒரு முறை சுந்தன் அகத்தியரின் ஆசிரமத்துக்கு வந்து அங்கேயிருந்த மரங்களை எல்லாம் பிடுங்கி எறிந்தான். அகத்தியர் கோபம் கொண்டு அவனை நோக்க அவன் சாம்பலானான். இதைப் பார்த்து வெகுண்டாள் தாடகை
