எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
எழில் அருள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
எழில் அருள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 2 அக்டோபர், 2021

சாட்டர்டே போஸ்ட். கொரோனா கெஸ்ட்ஸ் பற்றி எழில் அருள்

 எழில் அருள். மன நல ஆலோசகர். மனமகிழ் மைண்ட் கேர்  எனும் ஆலோசனை மையம் கடந்த ஆறு ஆண்டுகளாக நடத்துகிறார். அரசு பள்ளிக் குழந்தைகளுக்கு இலவச ஆலோசனை வழங்கும் அகல் டிரஸ்ட் அமைப்பின் பொருளாளர். நிகழ்காலம் எனும் blog எழுதுகிறார்.  அதன் மூலம் சிறந்த பெண் பிளாக்கர் ஆக the Hindu metro plus ஆல் கவுரவிக்கப்பட்டார். 

மக்கள் தொலைக்காட்சியில் உளவியல் தொடர்பான ஒரு கருத்தரங்கில் பேசியுள்ளார். பல கல்லூரிகள் மற்றும் நிறுவனங்களில் மன நலம் சார்ந்த , வாழ்வியல் முன்னேற்ற பயிலரங்குகள் நடத்தியுள்ளார்.  

தங்க மங்கை என்னும் மாத இதழில் இரு ஆண்டுகள் மன நலம் குறித்த தொடர் கட்டுரை வெளியிட்டுள்ளார்...இவர்களுடைய மன நலம் குறித்த தொகுப்புகள் manamagizhmindcare யூடியுப் சேனலில் பார்க்கலாம்...

சுயமுன்னேற்றப் பயிற்சியாளர். தோழி அகிலாவுடன் குழந்தைகளுக்கு நிறைய கவுன்ஸிலிங் செய்கிறார். கோவையில் வசிக்கிறார். பல்லாண்டுகளாக என் முக நூல் தோழி.  லவ்லி லேடீஸ் என்ற வாட்ஸப் குழுமத்திலும் ஒருங்கிணைந்து இருக்கிறோம். 


ஒருமுறை க்ராஸ் கட் ரோடு சென்றபோது இவரைச் சந்தித்தேன். அங்கேயே ஆனந்த அறிமுகமாகி ஒரு புகைப்படமும் எடுத்துக் கொண்டோம். 

அவரிடம் சாட்டர்டே போஸ்டுக்காக எழுதித் தரச் சொல்லிக் கேட்டபோது தான் வளர்த்த பூனைக்குட்டிகள் பற்றி எழுதிக் கொடுத்தார். 

///கொரானா கெஸ்ட்ஸ்..


   8 வருடத்திற்கு முன் வீட்டில் பூனைக்குட்டிகள் 6 வளர்த்துக் கொண்டிருந்தோம். அலுவலகம் சென்ற பின் வெளியில் இருக்கும். ஆனால் எலியைக் கொண்டு வந்து போடுவது, அங்கங்கே கக்கா போவதுன்னு என் வீட்டில் வேலை செய்பவர் மிகவும் வருத்தப்பட்டார். அதனால் அம்மா, குட்டிகள்னு எல்லோரையும் ஒன்றாக பேக் செய்து ஒரு தோட்டத்தில் கொண்டு விட்டு வந்தோம். இனி நாம் பார்ப்பதாய் இருந்தால் தான் பெட் வளர்க்கணும்னு முடிவெடுத்தோம். 

Related Posts Plugin for WordPress, Blogger...