யூரோப் டூரின் ஆறாம் நாள் இத்தாலியின் ரோம் நகருக்கு வந்தோம். ரோம் நகரம் ஒரே நாளில் கட்டப்படவில்லை என்ற வார்த்தைக்கு ஏற்ப வரலாற்றின் பல்வேறு காலகட்டங்களினால் கட்டப்பட்ட ரோம் நகரைச் சுற்றிப் பார்த்தோம். நடந்து நடந்து சலித்தோம். பார்த்துப் பார்த்து அசந்தோம். இறப்பதற்கு முன் ரோமைப் பார்க்கவேண்டும் என்ற வாக்கியத்தை மெய்ப்பித்து விட்டோம்.:)
கொலோசியத்துக்குப் போய்வந்த பின் பொடிநடையாக இங்கே வந்தோம். இது ரோம் ஃபாரம் என்னும் இடத்துக்குச் செல்லு வழியில் உள்ளது என நினைக்கிறேன். ரோம் நகரத்தின் ஒவ்வொரு துணுக்கிலும் வரலாறு புதைந்துள்ளது.
விக்டர் இரண்டாம் இம்மானுவேலுக்கான நினைவுச் சின்னம் இது. குழந்தைகளுக்கான கட்டாயக் கல்வித் திட்டத்தை அறிமுகப்படுத்தியவர். தனித்தனியாய் இருந்த இத்தாலியை ஒருங்கிணைத்து ஆட்சி புரிந்தவர். எனவே மிகப்பெரிய நினைவுச் சின்னமாக அமைத்திருக்கின்றார்கள்.
தூண்களுடன் மாபெரும் அரங்குகளை அமைப்பது அப்போதைய கட்டிடக் கலையாக இருக்கும் போல. இதற்குப் பல்வேறு பாணிகளும் அவற்றிற்கான தனித்தனிப் பேரும் சொல்கிறார்கள். பொதுவாக க்ளாசிக்கல் க்ரீக் ஆர்க்கிடெக்ஸர் பயன்பாட்டில் உள்ளது.
இது புனிதபேதுரு ஆலயத்தின் குவிமாடம்.

