எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

ஞாயிறு, 29 செப்டம்பர், 2019

காரைக்குடிச் சொல்வழக்கு. பொன்னுளியும் விராகனும்.


1321. இன்னம்புட்டு - இன்னும் கொஞ்சம். இன்னம் இம்புட்டு. இன்னம் இவ்வளவு. 

1322. கிண்டிக் கிழங்கெடுத்துப்புடுவாக - ஒருவர் ஒரு விஷயத்தைப் பற்றித் துருவித் துருவிக் கேள்வி கேட்டால் அதை கிண்டிக் கிழங்கெடுத்துப்புடுவாக என்று சொல்வது வழக்கம். கிழங்கை அகழ்ந்தெடுப்பதுபோல் விஷயத்தைத் (தோண்டி வெளியே எடுத்து விடுவார்கள் ) வாங்கி விடுவார்கள்.  

1323. பொறமாட்டாதவள் - பெண்கள் தான் ஆசைப்பட்ட ஒரு விஷயம் நடக்காவிட்டால் நான் என்ன பொறமாட்டாதவளா என்று ஆதங்கத்திலோ ஆத்திரத்திலோ கேட்பதுண்டு. அல்லது ஒரு விஷயத்துக்கு அல்லது தகுதிக்கு ஒருவர் லாயக்கில்லாவிட்டாலும் அவ பொறமாட்டாதவ என்று சொல்வதுண்டு. எதற்கும் அவசரப் படுபவர்களையும், பொறுக்காதவர்களையும் கூட சமயத்தில் பொறமாட்டாதவள் என்று குறிப்பிடுவதுண்டு. 

1324. அரிச்செடுத்துப்புடுவா - தான் விரும்பிய விஷயம் நடக்க வேண்டி தொணதொணத்தோ, தொடர்ந்து சொல்லியோ, அனத்தியோ அதை செயல்படுத்திக்கொள்பவர்களை அரிச்செடுத்துப்புடுவா என்று சொல்வதுண்டு. தான் நினைத்தது நடக்க வேண்டி ஆசிட் ஊற்றினால் அரித்தெடுப்பது போல் தொடர்ந்து கோபித்தோ கொந்தளித்தோ பேசுதல். 


1325. வெசாரிக்காமப் பண்ணிப்புட்டாக - பொதுவாக திருமணம் முடிந்ததும் இருபக்க வீட்டாரும் நாங்க வெசாரிக்காமப் பண்ணிப்புட்டோம். பொண்ணு பொல்லாதது என்றோ மாமியா பொல்லாதவ என்றோ சொல்வார்கள். மேலும் பையன் மேல் குத்தம் குறை இருந்தால் ( கெட்ட பழக்க வழக்கங்கள், இன்னொரு திருமணம் நடந்திருத்தல் ) அல்லது பெண் சம்பாதிப்பதால் யாரையும்  மதிக்காமல் நடந்து கொள்ளுதல், பையனைப் பாடாய்ப் பாடுபடுத்துதல்,  அதன் மூலம் பெண்ணின் அல்லது பையனின் வாழ்க்கை கெட்டிருந்தால் அப்போது அயலார் அல்லது உறவினர் வெசாரிக்காமப் பண்ணி இந்தப் புள்ள வாழ்க்கையைக் கெடுத்துப்புட்டீக என்பார்கள். 

1326. வெவரம் பத்தாது - அடிப்படையான அறிவு இன்மை. வெகுளி, விவரம் பத்தாமல் எல்லா இடத்திலும் எல்லாவற்றையும் சொல்வது. 

1327. சமால் செய்தல் - மத்யஸ்தம் செய்தல். இருபக்க விவரங்களையும் கேட்டு சீர்தூக்கி ஆராய்ந்து தீர்ப்புச் சொல்லல் அதே சமயம் இருபக்கமும் பாதகம் இல்லாமல் சமாதானப்படுத்துதல். 

1328. ஊருவாட - ஊர் ஞாபகம், ஊர் வாசனை. 

1329. நமுத்துப்புடுவா - ஒரு விஷயம் நடக்க வேண்டி தொடர்ந்து தொல்லை கொடுத்துக் கொண்டே இருத்தல். நமுநமுத்தல்ன்னு என்றும் சொல்வதுண்டு. ஏதாவது வேண்டும் என்றால் அது கிடைக்கும்வரை தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருத்தல். 

1330. அவா - ஆசை. 

1331. நட்டம நிக்கோணும் - ஒருவர் மேல் இன்னொருவர் அதிகாரம் செலுத்துதல். அதனால் அவர் எல்லாவற்றிற்கும் பக்கபலமாக கூடவே இருந்தாலும் அதை வலுக்கட்டாயமாகப் பெறுவதால் சலிப்புடன் அவுகளுக்கு எல்லாத்துக்கும் நட்டம நிக்கோணும் என்பார்கள். இதனால் தூக்கம் உணவு ஓய்வு கூட பாழ்படும். 

1332. குத்தமில்லை - ஒரு செயல் செய்யவேண்டுமானால் ஆத்தா அதை நீ செஞ்சிடு குத்தமில்லை என்பார்கள். ஒரு பெண்ணையோ உறவினரையோ குறிப்பிடும்போது அவள்/அவர்கள் நல்லவர்கள் என்பதை சொல்வதற்காக குத்தமில்லை நல்ல மக்க மனுசாதான் என்பார்கள். 

1333. பொன்னுளி - பொன் தட்டும் உளி. 

1334. விராகன் - ஒரு வராகன் என்பது 3500/ ரூ அந்தக் காலத்தில். மூணு வராகன் சீதனம் கொடுப்பது 1970 களில் திருமண வழக்கம். இதை இரண்டும் ஒன்றும் எனக் குறிப்பிடுவார்கள். மணப்பெண்ணுக்கு இரண்டும் மாமியாருக்கு ஒன்றும் ( பொதுவாக இந்தப் பணமும் டெப்பாசிட்டாகவும் பெண்ணுக்கான பட்டுப்புடவை, உடை வெள்ளி, தங்கமாகவுமே செலவழிக்கப்படும். ) 

1335. வளிஞ்சோடி - வழிந்தோடுதல். கிண்டலுக்காக இங்கே என்ன ( மிக்க மெதக்கப் பாலும் தேனுமாக ) வளிஞ்சோடிக் கிடக்குதா என்று கேட்பதுமுண்டு. 

1336. இருளடிச்சு - திடீரென கரண்ட் கட் ஆனால் இருட்டில் பிள்ளைகளுக்கு இருளடித்துவிடும். அதே போல் பட்டாலையில் இருந்து ஆல்வீட்டின் வழியாக இரண்டாங்கட்டு முகப்பு ஆகிய இடங்களுக்கு இருட்டில் விளக்கு இல்லாமலோ அல்லது திடீரென விளக்கு அணைந்தவுடனோ சென்றால் பிள்ளைகளுக்கு மட்டுமல்ல பெரியவர்களுக்கும் இருளடிச்சு விடும். அதே போல் ஒரு விஷயத்தில் ஒருவர் எதிர்பார்த்து ஏமாந்து திடீரென அப்செட் ஆனால் அவரது முகம் இருளடிச்சுக் கிடக்கு என்று சொல்வார்கள். பெரியவர்கள் சாவை நினைத்துப் பயந்தாலும் இருளடிச்சுப் போச்சு என்பார்கள். ஒரு விஷயத்தில் ஒருவரின் தவறு வெளிப்பட்டபின்பு அதைக் கண்டுபிடித்ததால் அவர் வெட்கப்பட்டு வருந்திக் கொண்டு மருகிக் கொண்டிருந்தால் முகம் இருளடிச்சது போல் ஆகிவிடும்.  

1337. சாமி அழைத்தல் - குலதெய்வம் , வீட்டுத் தெய்வம் போன்றவற்றை வீட்டில் அழைத்துக் குறை சொல்லிக் குறி கேட்பதுண்டு. தங்கள் வாழ்வின் பலா பலன்களை அறிய சாமி அழைப்பதுண்டு. நன்மை தீமை தெரிந்து அதற்கேற்ப பரிகாரம் செய்வதுண்டு. உறவினர் ஒருவருக்குச் சாமி வரும் என்று தெரிந்தால் தன் குறைகளை அவர்களிடம் சொல்லுவார்கள். அவர் சாமி வந்து அதற்கெல்லாம் பரிகாரம் சொல்லுவார். 

1338. குறை கொள்ளுதல் - முன்னோர்கள், குலதெய்வம், ஆகியோர் குறை கொள்வார்கள். தங்கள் வாரிசுகள் தங்களை வந்து முறைப்படி வணங்காவிட்டால் வயல் விளைச்சல் கம்மியாதல், திருமணத்துக்குக் காத்திருக்கும் குழந்தைகளின் திருமணம், பிள்ளைப்பேறு தடைப்படல், கல்வி, சொத்து ஆகியவற்றில் ஏற்படும் தடைகள், தம்பதிகளுக்குள் ஏற்படும் பிணக்கு, பிரிவு, ஆகியவற்றுக்குக் குலதெய்வம் குறை கொண்டுள்ளது. அதற்குப் பரிகாரம் செய்தால் சரியாகும் என்பார்கள். தனக்கு ஒரு விஷயம் நடக்கவில்லையே அல்லது மரியாதை கொடுக்கவில்லையே என்று வீட்டுப் பெரியவர்கள் வருத்தப் பட்டாலும் அதைக் குறை கொள்ளுதல் என்பார்கள். வீட்டில் பெண்பிள்ளைகள், பெண்மக்கள்,மருமக்கள் குறைகொள்ளக்கூடாது என்பார்கள். 

1339. வகுத்தைக் கட்டுதல் - உணவைக் குறைத்தல். பொதுவாக பிள்ளைப் பெற்ற வீட்டில் பெண்கள் வயிற்றைப் பட்டையாகத் துணி வைத்து இழுத்துக் கட்டுவார்கள். இல்லாவிட்டால் தொப்பை விழுந்துவிடும். உண்டி சுருங்குதல் பெண்டிர்க்கழகு என்பதாலும் உணவைக் குறைத்து வயிற்றைக் கட்டவேண்டும் என்பார்கள்.  

1340. வாங்க வலதி - சுயநலம், பேராசையுடன் தனக்கு உரிமையிலா ஒரு பொருளை வாங்க வலது கையை உடனே நீட்டுதல், வாங்கிக் கொள்ள ஆசை ஆனால் யாருக்குமே எதையுமே திருப்பிக் கொடுக்க மனதிருக்காது. 



டிஸ்கி :- 1 :- இவற்றைப் பாருங்க.

1. ஆச்சியும் அய்த்தானும் 

2. அப்பச்சியும் ஆத்தாவும்.

3. அயித்தையும் அம்மானும்.

4. ஆயாவின் வீடு

5. ஐயாக்காளையும் ஆத்தாப் பொண்ணும்.

6. செட்டிநாட்டு வீடுகள் முகப்பு. CHETTINADU HOUSES

7. செட்டிநாட்டு வீடுகள்பட்டாலை. (CHETTINADU HERITAGE HOUSES )

8. செட்டிநாட்டு வீடுகள் -வளவு (CHETTINADU HERITAGE HOUSES )

9. செட்டிநாட்டு வீடுகள் மேங்கோப்பு:- CHETTINAD HOUSES. CEILING


10.  செட்டிநாட்டு வீடுகள்பத்தி . ( CHETTINAD HERITAGE HOUSES )

11. செட்டி நாட்டு வீடுகள் . இரண்டாம் கட்டும் ஆல்வீடும்அறைகளும். (CHETTINAD HERITAGE HOUSES - ROOMS )

12. செட்டிநாட்டு வீடுகள்சாமி வீடும் படைப்பும் . CHETTINAD HERITAGE HOUSES - SAAMI VEEDU & PADAIPPU.

13.செட்டிநாட்டு வீடுகள்சூர்யப் பலகையும் நிலைகளும். CHETTINAD HERITAGE HOUSES, SURYA PALAGAI

14.செட்டிநாட்டு வீடுகளும் கலைப்பொருட்களும். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 1

15.செட்டி நாட்டு வீடுகளும் & கலைப்பொருட்களும். CHETTINAD HOUSES & ARTIFACTS. பாகம் -2.

16. செட்டிநாட்டு வீடுகளும் கலைபொருட்களும். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 3

17. செட்டி நாட்டு வீடுகளும் கலைப்பொருட்களும். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 4.

18. செட்டிநாட்டு வீடுகள் & கலைப்பொருட்கள் & ஏடுகள். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 5

19. காரைக்குடி வீடுகள் & பொருட்கள். CHETTINAD HERITAGE HOUSES பாகம்- 6.

20. காரைக்குடி வீடுகள் . CHETTINAD HERITAGE HOUSES - பாகம் - 7.

21. காரைக்குடி வீடுகள். CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 8

22. காரைக்குடி வீடுகள்.- தேர்முட்டியார் வீடு. CHETTINAD HERITAGE HOUSES - பாகம் -9

23. காரைக்குடி வீடுகள்கானாடுகாத்தான் அரண்மனை. CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 10. 

24. காரைக்குடி வீடுகளில் ஓவியங்கள். - தனலெக்ஷ்மியும்தான்யலெக்ஷ்மியும்.PAINTINGS OF CHETTINAD HERITAGE HOUSES - DHANALAKSHMI & DHANYALAKSHMI. பாகம் 11. 


25. காரைக்குடி வீடுகளில் தேக்குமரச் சிற்பங்கள். -2.TEAKWOOD CARVINGS OF CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 12. 

26. காரைக்குடி வீடுகளில் ஓவியப் படங்கள். PAINTINGS OF CHETTINAD HERITAGE HOUSES. பாகம் 13. 

27. காரைக்குடி வீடுகளில் தேக்குமரச் சிற்பங்கள். TEAKWOOD CARVINGS OF CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 14 

28. காரைக்குடிச் சொல்வழக்கு. - ஆத்தீயும் அடியாத்தீயும் ஆத்தாடீயும்.

29. காரைக்குடிச் சொல்வழக்கு - பாயிவரப்பான்பட்டுக் கிடப்பான்,அரசாளுவ . !!! 

30. காரைக்குடிச் சொல்வழக்கு :- மக்களுக்கு அப்பச்சியும் நாச்சியாமகனும்.

31. காரைக்குடிச் சொல்வழக்கு. :- கழுத்துருவும் ( கழுத்தீரு )கால்மோதிரமும்.

32. காரைக்குடி ஸ்பெஷல் உணவு வகைகளும் பந்தி விசாரணையும்.

33. காரைக்குடிச் சொல்வழக்கு :- கூடி ஆக்கி உண்ணுதலும் கோட்டைகட்டுதலும்.  

34. காவடிகள் ஆடி வரும் ஆட்டத்திலே.

35.முளைப்பாரி/முளைப்பாலிகை தயாரித்தல்

36.ஆடி வெள்ளியில் திருவிளக்கு பூஜை.

37. காரைக்குடிச் சொல்வழக்கு - வேவும் திருவாதிரைப் புதுமையும்சூள்பிடியும்/சூப்டியும்

38. காரைக்குடிச் சொல்வழக்கு - போரிடுதலும் கிலுக்கி எடுத்தலும்கொப்பி கொட்டலும்

39. 16 மாற்றுத் தங்கமும் 500 மாற்றுத் தங்கமும்.

40. புகைப்பட தின ஸ்பெஷல் 2016. காரைக்குடி வீடுகள். - KARAIKUDI HOUSES FOR CAMERA DAY SPECIAL.

41.சாரட்டில் மாப்பிள்ளை அழைப்பும் பெண்ணுக்குக் கொடுக்கும் சீரும்.

42.சிவப்பு ஓலைக் கொட்டான்கள் & வெள்ளி வேவுக் கடகாம்கள்.

43. பூந்திக் கொட்டங்காயும் பட்டுப்புடவை பராமரிப்பும்.. 

44. காரைக்குடிச் சொல்வழக்குகொரக்களியும் வர்ணக்கோமாளியும்

45. அகத்திலும் அகத்திலும் ”எங்கள் ஆத்தாள் ”.

46. காரைக்குடி வீடுகள். - ஏழு வாயிற்கதவுகளும் மணிப்பூட்டும் காசாணிஅண்டாவும். ( தண்ணிக்கிடாரம்)

47. வெற்றி ”இணையர்கள் வெங்கடாசலம் & பழனியப்பன். ( ஐபிசிஎன்கட்டுரை )

48. மார்கழித் திருவாதிரைப்புதுமைப் பாடலும் திருவாதிரைநாச்சியார்களும்.

49. காரைக்குடிச் சொல்வழக்கு :- ரேடியோப் பெட்டி அலமாரியும் ரொட்டிப்பொட்டித் தகரங்களும்

50. கோவிலூர் மியூசியம்

51. கலாச்சாரப் பயிற்றுவிப்பு முகாம் .:-

52. காரைக்குடிச் சொலவடைகள்சமத்தியும் ராராட்டும்இங்காவும்ரெங்காவும்.

53. காரைக்குடிப் பெயர்கள்அம்மைகளும் அப்பன்களும்.

54. காரைக்குடி - வீடாகு பெயர்கள்.

55. பேரனுண்டா.. பேரன் பிறந்திருக்கிறானே.56. திருப்புகழைப் பாடப் பாட..

57. காரைக்குடி வீடுகள்ஓளிபாயும் இல்லங்கள். -கோட்டையும் மதிலும்.


58. ஏடும் எழுத்துக்களும்இசைகுடிமானமும் முறி எழுதிக்கொள்ளுதலும்.

59. இலை விருந்துஇதுதாண்டா சாப்பாடு.

60. காரைக்குடிச் சொல்வழக்குஅந்தப் பக்கட்டும் இந்தப் பக்கட்டும்

61. காரைக்குடிச் சொல்வழக்குசுவீகாரம்திருவாதிரைப் புதுமைப்புகைப்படங்கள்.

62. திருவாசகத்துக்கு உருகார்.. - 108 சிவலிங்கங்கள் அமைத்த சிவலிங்கம்.

63. கூடை கூடையாய் தன்னம்பிக்கை கொடுக்கும் விஜயலெக்ஷ்மி.

64. கவுடு என்ற கண்டிகையும் ருத்ராக்ஷ தெரஃபியும்

65. காரைக்குடிச் சொல்வழக்குகைப்பொட்டியும் பொட்டியடியும்

66. சுவிட்ச்போர்டு ஓவியங்களும் அரை நூற்றாண்டுப் புகைப்படங்களும்

67. கானாடுகாத்தான் மங்கள ஆஞ்ஜநேயர்

68. இளம் தொழில் முனைவோர் - ஐபிசிஎன் - 2017. ( SAY YES TO BUSINESS - YES IBCN - 2017 ) 

69. தடுக்குகூடைகொட்டான் முடையலாம் வாங்க

70.  மாங்கல்ய தாரணமும் மங்கள தோரணமும்.

71. ஐந்தொகையும் பேரேடும் முறைச்சிட்டைகளும்அந்தக்காலஎழுத்துக்களும்.

72. நடுவீட்டுக் கோலமும் பொங்கல் கோலமும் போடுவது எப்படி ?!







டிஸ்கி :- 2 :- இவற்றையும் பாருங்க.

 1. மானகிரிக்கு காசியிலிருந்து உலா வந்த (3 1/2 கிலோ தங்கம் )சொர்ணலிங்கம் 

2. குமுதம் பக்தி ஸ்பெஷலில் திருவாசகம் என்னும் தேன்....

3. காரைக்குடியில் கார்த்திகை வேல் பூசை

4. நவராத்திரி கொலுவும் மகர்நோன்பும் அம்மன் அம்பு போடுதலும்.

5. ராமாயணம் பாராயணமும்ராமர் பட்டாபிஷேகமும்.

6. மகாகவி பாரதியும் காரைக்குடி ஹிந்து மதாபிமான சங்கமும்

7. கவியரசர் இல்லமும் கர்னகை கதையும்

8. காவிரிப்பூம்பட்டினமும் கண்ணகியும்.

9.செட்டிநாட்டு அரசர்..டாக்டர் திருஎம்..எம்ராமசாமி செட்டியார் .ஒருசகாப்தம்.

10. குமுதமும் யவண்டம் வைரவன் செட்டியார் அவர்களும்..

11. இது நகரத்தார் வீட்டுக் கல்யாணம்இவள் புதியவளில்.

12.கல்யாணத்திலே இத்தனை சடங்கா..?! (நகரத்தார் திருமணம் நம்தோழியில் ) 

13. வைரமே வைரம்...

14. குங்குமம் தோழி இணைப்பில் செட்டிநாடு ஸ்பெஷல் - 30 விதமானசமையல் குறிப்புக்கள்

15. நாட்டுக்கோட்டை நகரத்தார் வரலாறு - புத்தகம் ஒரு பார்வை

16. மங்கையர் மலரில் 32 ரெசிபிஸ் அறிமுகம் 

17. செட்டிநாட்டு காரசார சமையல் ரெசிபிஸ் 32 - மங்கையர் மலர்

2 கருத்துகள்:

  1. உங்கள் வழி அறிந்து கொண்டேன். நன்றி

    பதிலளிநீக்கு
  2. நன்றி கௌசி :)

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...