எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 9 அக்டோபர், 2017

தலைச்சீலையில் முடிவதும், தலவு/தலைப்பு முடிவதும். - காரைக்குடி கைவேலைப்பாடு.

தலைச்சீலையில் முடிவதும்,  தலவு/தலைப்பு முடிவதும். - காரைக்குடி கைவேலைப்பாடு.

*861.திருமண நடைமுறைகளில் தலைச்சீலையில் முடிவது என்று ஒரு சடங்கு உண்டு. மணவறையில் மாப்பிள்ளையும் பெண்ணும் அமர்ந்திருக்க அவர்கள்பின் நின்று மாப்பிள்ளை, மணமகளின் மாமன்மார்கள் , திருமணம் செய்துவைக்கும் வேதியர் சொன்னபடி வெற்றிலை பாக்கை இருவர் தலையிலும் மாற்றி மாற்றி வைத்து எடுப்பார்கள். ( இதை என் உறவினர் ஒருவர் சொன்னார் ) இதில் திருமணம் முடிந்ததும் செல்லும் வழிச்செலவுக்கான பணத்தை மாமன் கொடுக்க மணமகள் எடுத்துத் தலைச்சீலையின் முந்தியில் முடிந்து வைப்பதுதான் தலைச்சீலையில் முடிவது.

*862.திருப்பூட்டி முடிந்ததும் மாமியார் சடங்கு, நாத்தனார் சடங்கு முடிந்து அந்த வெற்றிலை பாக்கை இடுப்பில் செருகி வைத்துக் கொள்ளச்சொல்வார்கள். அது என்று நினைத்து எழுதி இருக்கிறேன் முன்னொரு இடுகையில்.

திருப்பூட்டிய  பின்பு மணவறையை வலம் வரும்போது மாப்பிள்ளையின் அங்கவஸ்த்ர நுனி & பெண்ணின்  திருமணப் பட்டின் முந்தி  இரண்டையும் முடிச்சிட்டு இருப்பதையும் தலைச்சீலையில் முடிவது என்று எண்ணி இருக்கிறேன்.  பொதுவாக இங்கத்திய திருமணங்களில்  கிடையாது. அது வடநாட்டார் பழக்கம்.

நிற்க.

தலைச்சீலையில் முடிவதற்கும் இந்த தலைப்பு முடிவதற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. சிண்டு முடிவதற்கு கூட :)

*863.பட்டுப்புடவை வாங்கியதும் கடைக்காரர்கள் கசவு பிரித்து முடிந்து கொடுப்பார்கள் அது குஞ்சலமாகத்  தொங்கும்.

நாம் *864 முந்திமுடியச்சொல்லிக் கொடுத்தால் இதற்கென காரைக்குடியில் இருக்கும் கைவினைக் கலைஞர்கள் ( பெண்கள்)  புடவைக்கு முதலில் ஓரம்  அடிப்பார்கள். அதன்பின் இந்தக் குஞ்சலத்தைப் பிரித்து நன்கு நீவி சிறிய சீப்பால் சீவுவார்கள். *865இரு வரிசையில் இருந்து ஏழு வரிசை வரைமுடிந்து கொடுப்பார்கள். இந்த ஏழு வரிசை முடிந்து கொடுக்க  ஒரு வரிசைக்கு 50 ரூபாய் வீதம் மொத்தம் 350 ரூபாய் ஆகும். ஓரம் அடிக்க இருபது ரூபாய் தனி.

ஆனால் ஏழுவரிசை முடிய நூல் பத்தாவிட்டால் முந்தியில் நிறைய பிரித்து விட்டு முடிவார்கள். இவ்வாறு முடிந்தால் *866.சித்திரமாய் அழகாய் இருக்கும்.

இவ்வாறு இதை முடியாவிட்டால் ஓரம் எல்லாம் பிரிந்து விடும் என்பதெல்லாம் இல்லை. இது காரைக்குடிப் பக்கட்டு மட்டுமே இருக்கக்கூடிய ஒரு கைவேலைப்பாடு. ஒவ்வொரு ஊரிலும் ஒரு எம்பிராய்டரி, பின்னல் வேலை இருப்பது போல் காரைக்குடிக்கே உரித்தான கைவேலை இது.

முன்பெல்லாம் யாரிடமாவது கொடுத்துத்தான் முடிவது வழக்கம். இதை நானே பின்ன கற்றுக் கொண்டேன். இங்கே இருக்கும் புடவைகள் ( 20 பட்டுப்புடவைகள் இருக்கும் ) நானே முடிந்ததுதான். ( தற்பெருமை. )

ஆனால் சிலவற்றை இரு வரிசைகளும். அதிகபட்சம் நான்கு வரிசைகளும் முடிந்துள்ளேன்.  ஒவ்வொரு குஞ்சலமாகப் பிரித்து *867முக்கோணமாகவும். எல்லா குஞ்சலத்தையும் பிரித்து வரிசையான *868செயின் முடிச்சாகவும் முடிந்துள்ளேன். 

கல்யாணம் ஆனதிலிருந்து ஊசி நூல் பின்னுறது, பிரிக்கிறது , முடியிறது.. ஸ்வெட்டர், க்ரோஷா, எம்பிராய்டரி,  ப்ளவுஸ் ஹெம்மிங் என்று டிவி பார்க்கும்போதெல்லாம் இதுதான் என் வேலைகள். ரங்க்ஸ் கொஞ்சம்  தள்ளியே அமர்ந்துகொள்வார். ஊசி நூலால் குத்தி விடக்கூடாது அல்லவா :)  :)



3,2,1, தனிப்பின்னல் & செயின் பின்னல் முடிச்சு 
4, 3, 2 1 செயின் பின்னல் முடிச்சு 

4, 3, 2 1 செயின் பின்னல் முடிச்சு 
2, 1  & 3, 2, 1 சிம்பிள் முடிச்சு 
2, 1  & 3, 2, 1 சிம்பிள் முடிச்சு 
2, 1  & 3, 2, 1 சிம்பிள் முடிச்சு 
 4, 3, 2, 1 செயின் முடிச்சு &   4, 3, 2, 1 தனி கோபுர முடிச்சு

ரொம்பப் பொறுமை தேவைப்படும் வேலைப்பாடு இது. ஒரு புடவைக்குத் *869தலவு முடிய மூன்று நாட்களில் இருந்து ஒருவாரம் வரை ஆகும்.

சரியாக முடியவராவிட்டால் ஒரு கிண்ணத்தில் தண்ணீர் வைத்துத் தொட்டுக் கொண்டு பிரித்து முடிவார்கள். பிசிறு இல்லாமலும் நீட்டாகவும் வரும். நம்மைப் போன்ற கற்றுக்குட்டிகளெல்லாம் முடிந்ததும் கத்திரிக்கோலால் *870முடிச்சில் நுனியை சீராக வெட்டி விட்டு பிசிறுகளையும் கட் செய்துவிட்டால் சூப்பராக இருக்கும். :)

ஓரளவு நன்றாகவே முடிந்திருக்கிறேன் என நினைக்கிறேன். நல்லா இருக்கா.

 

டிஸ்கி :- 1 :- இவற்றைப் பாருங்க. 

1. ஆச்சியும் அய்த்தானும் 

2. அப்பச்சியும் ஆத்தாவும்.

3. அயித்தையும் அம்மானும்.

4. ஆயாவின் வீடு. 

5. ஐயாக்காளையும் ஆத்தாப் பொண்ணும். 

6. செட்டிநாட்டு வீடுகள் முகப்பு. CHETTINADU HOUSES

7. செட்டிநாட்டு வீடுகள். பட்டாலை. (CHETTINADU HERITAGE HOUSES )

8. செட்டிநாட்டு வீடுகள் -வளவு (CHETTINADU HERITAGE HOUSES )

9. செட்டிநாட்டு வீடுகள் மேங்கோப்பு:- CHETTINAD HOUSES. CEILING


10.  செட்டிநாட்டு வீடுகள்- பத்தி . ( CHETTINAD HERITAGE HOUSES )

11. செட்டி நாட்டு வீடுகள் . இரண்டாம் கட்டும் ஆல்வீடும். அறைகளும். (CHETTINAD HERITAGE HOUSES - ROOMS )

12. செட்டிநாட்டு வீடுகள். சாமி வீடும் படைப்பும் . CHETTINAD HERITAGE HOUSES - SAAMI VEEDU & PADAIPPU.

13.செட்டிநாட்டு வீடுகள். சூர்யப் பலகையும் நிலைகளும். CHETTINAD HERITAGE HOUSES, SURYA PALAGAI

14.செட்டிநாட்டு வீடுகளும் கலைப்பொருட்களும். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 1
 
15.செட்டி நாட்டு வீடுகளும் & கலைப்பொருட்களும். CHETTINAD HOUSES & ARTIFACTS. பாகம் -2.

16. செட்டிநாட்டு வீடுகளும் கலைபொருட்களும். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 3

17. செட்டி நாட்டு வீடுகளும் கலைப்பொருட்களும். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 4.

18. செட்டிநாட்டு வீடுகள் & கலைப்பொருட்கள் & ஏடுகள். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 5

19. காரைக்குடி வீடுகள் & பொருட்கள். CHETTINAD HERITAGE HOUSES பாகம் - 6.

20. காரைக்குடி வீடுகள் . CHETTINAD HERITAGE HOUSES - பாகம் - 7.

21. காரைக்குடி வீடுகள். CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 8

22. காரைக்குடி வீடுகள்.- தேர்முட்டியார் வீடு. CHETTINAD HERITAGE HOUSES - பாகம் -9

23. காரைக்குடி வீடுகள். கானாடுகாத்தான் அரண்மனை. CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 10. 

24. காரைக்குடி வீடுகளில் ஓவியங்கள். - தனலெக்ஷ்மியும் தான்யலெக்ஷ்மியும்.PAINTINGS OF CHETTINAD HERITAGE HOUSES - DHANALAKSHMI & DHANYALAKSHMI. பாகம் 11.


25. காரைக்குடி வீடுகளில் தேக்குமரச் சிற்பங்கள். -2.TEAKWOOD CARVINGS OF CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 12.

26. காரைக்குடி வீடுகளில் ஓவியப் படங்கள். PAINTINGS OF CHETTINAD HERITAGE HOUSES. பாகம் 13.

27. காரைக்குடி வீடுகளில் தேக்குமரச் சிற்பங்கள். TEAKWOOD CARVINGS OF CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 14

28. காரைக்குடிச் சொல்வழக்கு. - ஆத்தீயும் அடியாத்தீயும் ஆத்தாடீயும்.

29. காரைக்குடிச் சொல்வழக்கு - பாயிவரப்பான், பட்டுக் கிடப்பான், அரசாளுவ . !!!

30. காரைக்குடிச் சொல்வழக்கு :- மக்களுக்கு அப்பச்சியும் நாச்சியா மகனும்.

31. காரைக்குடிச் சொல்வழக்கு. :- கழுத்துருவும் ( கழுத்தீரு ) கால்மோதிரமும்.

32. காரைக்குடி ஸ்பெஷல் உணவு வகைகளும் பந்தி விசாரணையும்.

33. காரைக்குடிச் சொல்வழக்கு :- கூடி ஆக்கி உண்ணுதலும் கோட்டை கட்டுதலும். 

34. காவடிகள் ஆடி வரும் ஆட்டத்திலே.

35.முளைப்பாரி/முளைப்பாலிகை தயாரித்தல். 

36.ஆடி வெள்ளியில் திருவிளக்கு பூஜை.

37. காரைக்குடிச் சொல்வழக்கு - வேவும் திருவாதிரைப் புதுமையும் சூள்பிடியும்/சூப்டியும். 

38. காரைக்குடிச் சொல்வழக்கு - போரிடுதலும் கிலுக்கி எடுத்தலும் கொப்பி கொட்டலும். 

39. 16 மாற்றுத் தங்கமும் 500 மாற்றுத் தங்கமும்.

40. புகைப்பட தின ஸ்பெஷல் 2016. காரைக்குடி வீடுகள். - KARAIKUDI HOUSES FOR CAMERA DAY SPECIAL.

41.சாரட்டில் மாப்பிள்ளை அழைப்பும் பெண்ணுக்குக் கொடுக்கும் சீரும்.

42.சிவப்பு ஓலைக் கொட்டான்கள் & வெள்ளி வேவுக் கடகாம்கள்.

43. பூந்திக் கொட்டங்காயும் பட்டுப்புடவை பராமரிப்பும்..

44. காரைக்குடிச் சொல்வழக்கு. கொரக்களியும் வர்ணக்கோமாளியும். 

45. அகத்திலும் அகத்திலும் ”எங்கள் ஆத்தாள் ”.

46. காரைக்குடி வீடுகள். - ஏழு வாயிற்கதவுகளும் மணிப்பூட்டும் காசாணி அண்டாவும். ( தண்ணிக்கிடாரம்)

47. வெற்றி ”இணைய”ர்கள் வெங்கடாசலம் & பழனியப்பன். ( ஐபிசிஎன் கட்டுரை )

48. மார்கழித் திருவாதிரைப்புதுமைப் பாடலும் திருவாதிரை நாச்சியார்களும்.

49. காரைக்குடிச் சொல்வழக்கு :- ரேடியோப் பெட்டி அலமாரியும் ரொட்டிப் பொட்டித் தகரங்களும். 

50. கோவிலூர் மியூசியம்.

51. கலாச்சாரப் பயிற்றுவிப்பு முகாம் .:-

52. காரைக்குடிச் சொலவடைகள். சமத்தியும் ராராட்டும், இங்காவும் ரெங்காவும்.

53. காரைக்குடிப் பெயர்கள். அம்மைகளும் அப்பன்களும்.

54. காரைக்குடி - வீடாகு பெயர்கள்.

 
55. பேரனுண்டா.. பேரன் பிறந்திருக்கிறானே.

56. திருப்புகழைப் பாடப் பாட..

57. காரைக்குடி வீடுகள். ஓளிபாயும் இல்லங்கள். -கோட்டையும் மதிலும்.


58. ஏடும் எழுத்துக்களும். இசைகுடிமானமும் முறி எழுதிக் கொள்ளுதலும்.

59. இலை விருந்து. இதுதாண்டா சாப்பாடு.

60. காரைக்குடிச் சொல்வழக்கு, அந்தப் பக்கட்டும் இந்தப் பக்கட்டும். 

61. காரைக்குடிச் சொல்வழக்கு. சுவீகாரம், திருவாதிரைப் புதுமைப் புகைப்படங்கள்.  

62. திருவாசகத்துக்கு உருகார்.. - 108 சிவலிங்கங்கள் அமைத்த சிவலிங்கம்.

63. கூடை கூடையாய் தன்னம்பிக்கை கொடுக்கும் விஜயலெக்ஷ்மி.

64. கவுடு என்ற கண்டிகையும் ருத்ராக்ஷ தெரஃபியும். 

65. காரைக்குடிச் சொல்வழக்கு. கைப்பொட்டியும் பொட்டியடியும். 

66. சுவிட்ச்போர்டு ஓவியங்களும் அரை நூற்றாண்டுப் புகைப்படங்களும். 

67. கானாடுகாத்தான் மங்கள ஆஞ்ஜநேயர்

68. இளம் தொழில் முனைவோர் - ஐபிசிஎன் - 2017. ( SAY YES TO BUSINESS - YES IBCN - 2017 ) 

69. தடுக்கு, கூடை, கொட்டான் முடையலாம் வாங்க. 

70.  மாங்கல்ய தாரணமும் மங்கள தோரணமும்.

71. ஐந்தொகையும் பேரேடும் முறைச்சிட்டைகளும், அந்தக்கால எழுத்துக்களும்.

72. நடுவீட்டுக் கோலமும் பொங்கல் கோலமும் போடுவது எப்படி ?!

 

73.அருகி வரும் காரைக்குடி வீடுகள். KARAIKUDI HOUSES. 

 

74. காவடிகள் ஆடி வரும் ஆட்டத்திலே. 

 

75.  காவடியாம் காவடி. கந்தவேலன்காவடி. 

 

76. முத்துவிலாசமும் லெக்ஷ்மி விலாசமும். 

 

77.காரைக்குடி வீடுகளில் ஓவியங்களும் படங்களும். 

 

78. காரைக்குடி வீடுகளில் இயற்கை வண்ணத்தில் முருகனும் கிருஷ்ணனும். 

 

79. காரைக்குடி வீடுகளில் தஞ்சை ஓவியங்களில் லெக்ஷ்மியும் சரஸ்வதியும். 

 

80. செட்டிநாடும் செந்தமிழும். தேனார் மாணிக்கணார் இயம்பும் அகத்திணையின் அகம் :-

 

 81.  மொய்ப்பண ஏடும் இசை குடிமானமும் கோயில் பிரிவுகளும்.

 

82. காரைக்குடி வீடுகளில் வரந்தை ஓவியங்கள்.

 

83.  காரைக்குடி வீடுகள்:- முன்னோர் படைப்பும், சில திருமணச் சடங்குகளும்.

 

84. காரைக்குடி கலைப் பொருட்களும் கைவினைப் பொருட்களும். 

85.உத்தர ஓவியங்களும் தேக்குமரப்படிகளும், சுவற்றலமாரிகளும். :-

 

86. காரைக்குடிச் சொல்வழக்கு :- வாவரசியும், பெருமாளும் தேவியும். 

 

87. இந்த சீர் போதுமா ?! 

 

88. புராதன வீடுகளும் புதுப்பித்தலும் 

 

89. முயற்சி திருவினையாக்கும் திரு இராஜமாணிக்கம். 

 

90. சோதனைகளில் சாதித்தெழுந்த அபிராம சுந்தரி. ( ஐபிசிஎன் ) . 

 

91.தன்னம்பிக்கையின் திருவுருவம் திருமதி சீதா தேனப்பன்.

 

92. இனியெல்லாம் பிஸினஸே

 

93. தாய்மாமா வாய்ப்பது தவப்பயன்.

 

94. வட்டார நூல்கள் மூன்று - நூல்முகம்.

 

95. தலைச்சீலையில் முடிவதும்,  தலவு/தலைப்பு முடிவதும். - காரைக்குடி கைவேலைப்பாடு.  

 

96.மகர்நோன்பும் மண்டகப்படியும் வாழைப்பழ மாலையும்.


டிஸ்கி :- 2 :- இவற்றையும் பாருங்க. 

 1. மானகிரிக்கு காசியிலிருந்து உலா வந்த (3 1/2 கிலோ தங்கம் ) சொர்ணலிங்கம் 

2. குமுதம் பக்தி ஸ்பெஷலில் திருவாசகம் என்னும் தேன்....

3. காரைக்குடியில் கார்த்திகை வேல் பூசை

4. நவராத்திரி கொலுவும் மகர்நோன்பும் அம்மன் அம்பு போடுதலும்.

5. ராமாயணம் பாராயணமும், ராமர் பட்டாபிஷேகமும்.

6. மகாகவி பாரதியும் காரைக்குடி ஹிந்து மதாபிமான சங்கமும்

7. கவியரசர் இல்லமும் கர்னகை கதையும்

8. காவிரிப்பூம்பட்டினமும் கண்ணகியும்

9.செட்டிநாட்டு அரசர்..டாக்டர் திரு. எம்.ஏ.எம். ராமசாமி செட்டியார் .ஒரு சகாப்தம்.
 
10. குமுதமும் யவண்டம் வைரவன் செட்டியார் அவர்களும்..

11. இது நகரத்தார் வீட்டுக் கல்யாணம், இவள் புதியவளில்.

12.கல்யாணத்திலே இத்தனை சடங்கா..?! (நகரத்தார் திருமணம் நம் தோழியில் )

13. வைரமே வைரம்...

14. குங்குமம் தோழி இணைப்பில் செட்டிநாடு ஸ்பெஷல் - 30 விதமான சமையல் குறிப்புக்கள்.

15. நாட்டுக்கோட்டை நகரத்தார் வரலாறு - புத்தகம் ஒரு பார்வை

16. மங்கையர் மலரில் 32 ரெசிபிஸ் அறிமுகம்

17. செட்டிநாட்டு காரசார சமையல் ரெசிபிஸ் 32 - மங்கையர் மலர்

2 கருத்துகள்:

  1. ஒரு வேளை முந்தானை முடிச்சும் இதுவு ம் ஒன்றோ

    பதிலளிநீக்கு
  2. illai Bala sir :)


    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...