எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 21 ஜூலை, 2017

காரைக்குடி வீடுகள்:- முன்னோர் படைப்பும், சில திருமணச் சடங்குகளும்.

இது காரைக்குடியில் உள்ள ஒரு அழகான இல்லத்தின் முகப்பு.
சில வீடுகளில் முன்னோர்களைக் கொண்டாடுவார்கள். அப்படிப்பட்ட இல்லம் ஒன்றில் அவர்கள் அப்பத்தாவின் புகைப்படத்தை எடுத்தேன். 



751*முன்னோர் வழிபாடு என்பது இன்றியமையாதது. நல்லதொரு நாளில் இல்லத்திலிருக்கும் ஆண்கள் ( திங்கள் அல்லது புதன் ) முன்னோருக்கு புத்தாடைகள் வாங்கிப் 752*போழையை ( பேழை ) எடுத்துத் 753*தடுக்குடன் கொண்டு சென்று குளத்தில் அலசிப் பறவைகள் நிழல் கூடப் படாமல் காயவைத்து மடித்து எடுத்து வந்து வீட்டில் வைப்பார்கள்.

753*சைவப்படைப்பென்றால் பெண்கள் பச்சரிச்சாதம் 754*பாற்சோறு பருப்பு நெய் மசித்து வாழைப்பழம் , கத்திரிக்காய் வாழைக்காய் அவித்து அப்பளம் பொரித்து வடை, 755*மரக்கறிக்காய் தோசை சுட்டுப் பாயாசம் 756*பால்பழம் வைப்பார்கள்.

757*அசைவப் படைப்பென்றால் 758*கோழிப் படைப்பாக இருக்கும். இத்தனையுடன் கோழியையும் சமைத்துப் படைப்பார்கள். முட்டை அவித்து வைப்பார்கள்.

சின்னஞ்சிறு குழந்தைகள் எண்ணெய் சீயக்காய் தேய்த்துக் குளிப்பாட்டுவார்கள்.

இரவில் பாட்டையா பாட்டியாயா படங்களுக்கு முன் துவைத்த புது உடைகளை பாட்டையா பாட்டியாயா அல்லது இன்னபிற முன்னோர்களுக்காக வாங்கிய சட்டை போன்ற தனி உடைகளை தடுக்கில் நேர்த்தியாக அடுக்கி அதன் மேல் 759*ஆண்கள் என்றால் ருத்திராக்கம், மாலை, கவுடு, கைச்சங்கிலி சங்கிலி மோதிரம் போன்றவற்றை வைப்பார்கள். சிலர் புதிதாக வாங்கிய நகைகளையும் வைத்து அலங்கரிப்பதுண்டு.

760*பெண்கள் என்றால் சுமங்கலி என்றால் கழுத்துரு, தாலிச்சங்கிலிகள், வளையல்கள் மோதிரம், மிஞ்சி தோடு போன்றவற்றை வைத்து அலங்கரிப்பதுண்டு.

அலங்கரிக்கும் முன் நகைககளைக் கழுவித் துடைத்துதான் வைப்பார்கள். பூக்கள் , பூமாலைகளும் போட்டு அலங்கரிப்பார்கள்.

இரவில் பால்பழம் பாற்சோறு பாயாசம் ஆகியன ஒன்பது மணி வாகில் ரெடியானவுடன் சாமி வீட்டில் அலங்கரிக்கப்பட்ட உடைகள் நகைகள் முன்பு நுனி இலை போட்டுப் 761*பள்ளயம் போடுவார்கள்.

பள்ளயம் என்பது மேல் வரிசையில் காய்கறியும் கீழ்வரிசையில் நடுவில் பாற்சோறும் (அதன் நாற்புறமும் உரித்த வாழைப்பழங்களும்) அதன் இருபுறமும் வெள்ளைச் சோறும் அதில் பருப்பும் நெய்யும் ஊற்றி அவற்றின் நாற்புறமும் நான்கு வாழைப்பழங்களும் வெற்றிலை பாக்கு வைத்து படைப்பார்கள்.

சிலர் வீடுகளில் 762*படைப்புப் பணியாரமும் செய்வதுண்டு. இவற்றை எல்லாம் நெய்யிலேயே செய்வார்கள்.

763*வெளிவாசற்கதவைத் திறந்துவைத்து  சாம்பிராணி தூப தீபம் காட்டி அனைவரும் வணங்கி சந்தனம் குங்குமம் விபூதி தரித்து உணவு உண்ணுவார்கள். கிட்டத்தட்ட பதினோரு மணி ஆகிவிடும்.

வீட்டில் வந்திருக்கும் விருந்தாளிகள் குழந்தைகளுக்கு சில இல்லங்களில் படைப்புவரை காத்திராமல் இரவுப் பலகாரங்களை ( இடியாப்பம் கோசமல்லி, கந்தரப்பம், இட்லி, கதம்பச்சட்னி )ஏற்பாடு செய்து வழங்கிவிடுவதுண்டு.

முன்பு அனைத்து ஐட்டங்களையும் சாமி வீட்டின் முன்பு 764*கோட்டை அடுப்பு அல்லது இரும்பு அடுப்பு வைத்து விறகு எரித்து 765*சிரட்டை போட்டுச் சமைப்பார்கள். இப்போது கேஸ் அடுப்புக்கு மாறிவிட்டார்கள்.

அதிலும் பல இல்லங்களில் அடுப்படியிலேயே வேலை செய்பவர் சமைத்து வைத்துவிட எடுத்து வந்து படைத்துவிடுகிறார்கள்.

நாமே செய்து படைக்க வேண்டும் என்ற சிரத்தை குறைந்துதான் வருகிறது. ( சிறிய வீடுகளிலேயே வெளியூரில் 766*புழங்கியவர்களுக்கு இந்த மாதிரிப் பெரிய வீடுகளில் ஆடிக்கொருதரம் அம்மாவாசைக்கொருதரம் வருவதால் வேலை செய்யப் புரிவதில்லை. )

ஆனாலும் நாமே செய்து படைப்பது நல்லது. அனைவரும் சாப்பிடும் வரை 767*விளக்கெரிய வேண்டும்.

அனைவரும் சாப்பிட்டபின் இரவு மிஞ்சிய சாதத்தில் நீர் விட்டு வைப்பார்கள். நகைகளை மட்டும் அப்போதே எடுத்துவிடுவது உண்டு.

மறுநாள் 768*நீர்ச்சோத்துப் படைப்பு. பூக்களை எடுத்துப் பெண்டிர் அனைவருக்கும் கொடுப்பார்கள்.

769*அனுவல்காரர்கள் அந்த உடைகளை உடுத்திக் கொள்வார்கள். நீர்ச்சோற்றில் தயிர், சின்ன வெங்காயம், உப்புப் போட்ட கடாரங்காய் அல்லது நார்த்தங்காய் போட்டுப் பிசைந்து வைப்பார்கள்.

770* உப்புக் கண்டம்  பொரித்து மரக்கறிக்காய் தோசை சுட்டு 771*வள்ளிக்கிழங்கை அவித்துத் தாளித்து 772*பருப்புத் துவையல் செய்வார்கள். இன்னும் மண்டி, பிரட்டல் போன்றவையும் செய்வதுண்டு.

இவற்றைப் படைத்துத் திரும்பக் கும்பிட்டு முன்னோர்கள் அருள் பெற்று அனைத்துப் பொருட்களையும் 773*யதாஸ்தானத்தில் வைப்பார்கள்.
வீட்டில் 774*குடிபுகுதல், திருமணம் போன்றவை நடக்கும் முன்பு முன்னோரின் ஆசி வேண்டிப் படைப்பதுண்டு.

775*சிலர் எளிமையாகப் பால்பழம் வைத்துப் பணியாரம் அல்லது தேன்குழல் ( எண்ணெய்ப் பலகாரம் ) செய்துவைத்து பூப்போட்டு வணங்குவதும் உண்டு.

இது கீழ் வாசலில் போடப்பட்ட ஒரு 776*திருமணக் கொட்டகை. இங்கே பந்தல் என்று சொல்லமாட்டார்கள். சுபகாரியத்துக்குப் போடப்படுவதன் பெயர் கொட்டகை. கல்யாணக் கொட்டகை என்றும் சொல்வார்கள்.
திருமணச் சடங்கில் பெண் அழைத்தபின் மாப்பிள்ளையும் பெண்ணும் 777*குலம்வாழும் பிள்ளை ( குலவாழும் பிள்ளை ) எடுத்தல் என்னும் சடங்கு நடைபெறும்.

அதற்கு மாப்பிள்ளை பெண் நிற்க இரண்டு தடுக்குப் போடுவார்கள். இங்கே 778*வெல்வெட்டில் தடுக்குப் போட்டிருக்கின்றார்கள்.

மாப்பிள்ளையின் மாமி 779*வெள்ளைப் பொங்கல் வைப்பார். அதை மூன்று இலைகளில் பள்ளயம் வைத்து ( சதுரமாக வைத்து ) நடுவில் வெல்லம் வைத்து நெய்யூற்றி நாற்புறமும் வாழைப்பழம் வைப்பார்கள்.

மூன்று புது பித்தளைப் பாத்திரங்களில் (ஒரு அண்டா இரு குடங்கள். ) நீர் நிரப்பி வைத்திருப்பார்கள்.

பெண்ணின் தாய்மாமாவும், மாப்பிள்ளையின் தாய்மாமாவும் பெண் மாப்பிள்ளையின் கைபிடித்து சுற்றி வந்து இந்தக் குடங்களில் மாப்பிள்ளை பெண்ணைக் கை விடச் சொல்வார்கள்.

இதில் ஏதோ ஒன்றில் இருக்கும் குழந்தை உருவத்தை மாப்பிள்ளை எடுத்துப் பெண் கையில் தரவேண்டும். மாப்பிள்ளை பெண் யார் எடுக்கிறார்கள் என்று சில சமயம் போட்டியாகவும் ஜாலியாகவும் இருக்கும் இச்சடங்கு :)

இதைச் செய்தபின் மாப்பிள்ளையும் பெண்ணும் நான்கு திசைகளிலும் திரும்பிச் சென்று இத்தடுக்குகளின் மேல் நிற்க மாமியார் 780*பெண்ணழைத்த சடங்கு செய்வார்.
அதன் பின் 781*வேவு இறக்குதல் நடைபெறும். மாப்பிள்ளை வீட்டுப் பெண்மணிகளும் பெண் வீட்டு ஆண்களும் ( பங்காளிகளும் உண்டு)  வேவு இறக்குவார்கள். இவ்வேவு 782*பெண்ணழைத்த வேவு எனப்படும்.

இந்த 783*ஸ்லேட்டு விளக்கை மாப்பிள்ளையின் அப்பத்தா அல்லது அத்தை கொண்டு வந்து நிலைவாசலில் வளவு நடையில் கோலமிடப்பட்ட இடத்தில் வைப்பார்கள். பெண் வீட்டிலிருந்து 784*வெள்ளி வேவுக்கடகாமைக் ( பச்சரிசி வெல்லம் தேங்காய் வைத்திருக்கும் ) கொண்டு வருவார்கள்.

ஆண்கள் 785*தலைப்பா கட்டிக் கொள்ள பெண்கள் வந்து இறக்கி இருவரும் அதைப் பிடித்தபடி சென்று சாமிவீட்டில்வைத்து வணங்கி அமர்ந்து விபூதி பூசிக் கொள்வார்கள்.

786*இந்த வேவு பதினொன்று , பதினாறு, இருபத்தி ஒன்று என்ற அளவில் இரு வீட்டிலும் இருக்கும் ஆண் பெண்களைப் பொறுத்து அமையும்.

இந்த விளக்கை 787*நடையில் வைத்துவிட்டு வேவு இறக்கி முடியும்வரை குழந்தைகளோ அல்லது வேறு யாருமோ தட்டிவிடாமல் இருக்கவேண்டுமே என்று பதக் பதக் என்று இருக்கும் :)
நான்காம் உலகத்தமிழ் மாநாடு நடைபெற்ற வள்ளல் அழகப்பரின் அண்ணன் மகள் வள்ளி ஆச்சியின் வீடு.
அதே ஊரில் அவர்களின் இல்லத்துக்குச் சிறிது அருகில் பராமரிப்பு இல்லாமல் பாழ்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு இல்லம்.

788*தண்ணீர் வெளியேறும் கால்வாய் ( கோயில் பாணியில் இருக்கிறது. ). கார் ஷெட்டும் துருப்பிடித்திருக்கிறது. சிலர் வெளிநாடு அல்லது வெளியூரில் செட்டிலாகி இம்மாதிரிப் பங்கு இல்லங்களைப் பராமரிப்பதே இல்லை என்பது பெருஞ்சோகம்.
ஆளில்லா வீட்டில் நடையில் குப்பைகளும் 789*செத்தைகளும் கிடக்க 790*குரங்குகள் குலைத்த ஓடுகள் ஒரு பக்கம்.

வள்ளி ஆச்சி வீட்டில் வள்ளல் அழகப்பரும் நேரு மாமாவும் உரையாடும் அரிய புகைப்படம்.
 

டிஸ்கி :- 1 :- இவற்றைப் பாருங்க. 

1. ஆச்சியும் அய்த்தானும் 

2. அப்பச்சியும் ஆத்தாவும்.

3. அயித்தையும் அம்மானும்.

4. ஆயாவின் வீடு. 

5. ஐயாக்காளையும் ஆத்தாப் பொண்ணும். 

6. செட்டிநாட்டு வீடுகள் முகப்பு. CHETTINADU HOUSES

7. செட்டிநாட்டு வீடுகள். பட்டாலை. (CHETTINADU HERITAGE HOUSES )

8. செட்டிநாட்டு வீடுகள் -வளவு (CHETTINADU HERITAGE HOUSES )

9. செட்டிநாட்டு வீடுகள் மேங்கோப்பு:- CHETTINAD HOUSES. CEILING


10.  செட்டிநாட்டு வீடுகள்- பத்தி . ( CHETTINAD HERITAGE HOUSES )

11. செட்டி நாட்டு வீடுகள் . இரண்டாம் கட்டும் ஆல்வீடும். அறைகளும். (CHETTINAD HERITAGE HOUSES - ROOMS )

12. செட்டிநாட்டு வீடுகள். சாமி வீடும் படைப்பும் . CHETTINAD HERITAGE HOUSES - SAAMI VEEDU & PADAIPPU.

13.செட்டிநாட்டு வீடுகள். சூர்யப் பலகையும் நிலைகளும். CHETTINAD HERITAGE HOUSES, SURYA PALAGAI

14.செட்டிநாட்டு வீடுகளும் கலைப்பொருட்களும். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 1
 
15.செட்டி நாட்டு வீடுகளும் & கலைப்பொருட்களும். CHETTINAD HOUSES & ARTIFACTS. பாகம் -2.

16. செட்டிநாட்டு வீடுகளும் கலைபொருட்களும். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 3

17. செட்டி நாட்டு வீடுகளும் கலைப்பொருட்களும். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 4.

18. செட்டிநாட்டு வீடுகள் & கலைப்பொருட்கள் & ஏடுகள். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 5

19. காரைக்குடி வீடுகள் & பொருட்கள். CHETTINAD HERITAGE HOUSES பாகம் - 6.

20. காரைக்குடி வீடுகள் . CHETTINAD HERITAGE HOUSES - பாகம் - 7.

21. காரைக்குடி வீடுகள். CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 8

22. காரைக்குடி வீடுகள்.- தேர்முட்டியார் வீடு. CHETTINAD HERITAGE HOUSES - பாகம் -9

23. காரைக்குடி வீடுகள். கானாடுகாத்தான் அரண்மனை. CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 10. 

24. காரைக்குடி வீடுகளில் ஓவியங்கள். - தனலெக்ஷ்மியும் தான்யலெக்ஷ்மியும்.PAINTINGS OF CHETTINAD HERITAGE HOUSES - DHANALAKSHMI & DHANYALAKSHMI. பாகம் 11.


25. காரைக்குடி வீடுகளில் தேக்குமரச் சிற்பங்கள். -2.TEAKWOOD CARVINGS OF CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 12.

26. காரைக்குடி வீடுகளில் ஓவியப் படங்கள். PAINTINGS OF CHETTINAD HERITAGE HOUSES. பாகம் 13.

27. காரைக்குடி வீடுகளில் தேக்குமரச் சிற்பங்கள். TEAKWOOD CARVINGS OF CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 14

28. காரைக்குடிச் சொல்வழக்கு. - ஆத்தீயும் அடியாத்தீயும் ஆத்தாடீயும்.

29. காரைக்குடிச் சொல்வழக்கு - பாயிவரப்பான், பட்டுக் கிடப்பான், அரசாளுவ . !!!

30. காரைக்குடிச் சொல்வழக்கு :- மக்களுக்கு அப்பச்சியும் நாச்சியா மகனும்.

31. காரைக்குடிச் சொல்வழக்கு. :- கழுத்துருவும் ( கழுத்தீரு ) கால்மோதிரமும்.

32. காரைக்குடி ஸ்பெஷல் உணவு வகைகளும் பந்தி விசாரணையும்.

33. காரைக்குடிச் சொல்வழக்கு :- கூடி ஆக்கி உண்ணுதலும் கோட்டை கட்டுதலும். 

34. காவடிகள் ஆடி வரும் ஆட்டத்திலே.

35.முளைப்பாரி/முளைப்பாலிகை தயாரித்தல். 

36.ஆடி வெள்ளியில் திருவிளக்கு பூஜை.

37. காரைக்குடிச் சொல்வழக்கு - வேவும் திருவாதிரைப் புதுமையும் சூள்பிடியும்/சூப்டியும். 

38. காரைக்குடிச் சொல்வழக்கு - போரிடுதலும் கிலுக்கி எடுத்தலும் கொப்பி கொட்டலும். 

39. 16 மாற்றுத் தங்கமும் 500 மாற்றுத் தங்கமும்.

40. புகைப்பட தின ஸ்பெஷல் 2016. காரைக்குடி வீடுகள். - KARAIKUDI HOUSES FOR CAMERA DAY SPECIAL.

41.சாரட்டில் மாப்பிள்ளை அழைப்பும் பெண்ணுக்குக் கொடுக்கும் சீரும்.

42.சிவப்பு ஓலைக் கொட்டான்கள் & வெள்ளி வேவுக் கடகாம்கள்.

43. பூந்திக் கொட்டங்காயும் பட்டுப்புடவை பராமரிப்பும்..

44. காரைக்குடிச் சொல்வழக்கு. கொரக்களியும் வர்ணக்கோமாளியும். 

45. அகத்திலும் அகத்திலும் ”எங்கள் ஆத்தாள் ”.

46. காரைக்குடி வீடுகள். - ஏழு வாயிற்கதவுகளும் மணிப்பூட்டும் காசாணி அண்டாவும். ( தண்ணிக்கிடாரம்)

47. வெற்றி ”இணைய”ர்கள் வெங்கடாசலம் & பழனியப்பன். ( ஐபிசிஎன் கட்டுரை )

48. மார்கழித் திருவாதிரைப்புதுமைப் பாடலும் திருவாதிரை நாச்சியார்களும்.

49. காரைக்குடிச் சொல்வழக்கு :- ரேடியோப் பெட்டி அலமாரியும் ரொட்டிப் பொட்டித் தகரங்களும். 

50. கோவிலூர் மியூசியம்.

51. கலாச்சாரப் பயிற்றுவிப்பு முகாம் .:-

52. காரைக்குடிச் சொலவடைகள். சமத்தியும் ராராட்டும், இங்காவும் ரெங்காவும்.

53. காரைக்குடிப் பெயர்கள். அம்மைகளும் அப்பன்களும்.

54. காரைக்குடி - வீடாகு பெயர்கள்.

 
55. பேரனுண்டா.. பேரன் பிறந்திருக்கிறானே.

56. திருப்புகழைப் பாடப் பாட..

57. காரைக்குடி வீடுகள். ஓளிபாயும் இல்லங்கள். -கோட்டையும் மதிலும்.


58. ஏடும் எழுத்துக்களும். இசைகுடிமானமும் முறி எழுதிக் கொள்ளுதலும்.

59. இலை விருந்து. இதுதாண்டா சாப்பாடு.

60. காரைக்குடிச் சொல்வழக்கு, அந்தப் பக்கட்டும் இந்தப் பக்கட்டும். 

61. காரைக்குடிச் சொல்வழக்கு. சுவீகாரம், திருவாதிரைப் புதுமைப் புகைப்படங்கள்.  

62. திருவாசகத்துக்கு உருகார்.. - 108 சிவலிங்கங்கள் அமைத்த சிவலிங்கம்.

63. கூடை கூடையாய் தன்னம்பிக்கை கொடுக்கும் விஜயலெக்ஷ்மி.

64. கவுடு என்ற கண்டிகையும் ருத்ராக்ஷ தெரஃபியும். 

65. காரைக்குடிச் சொல்வழக்கு. கைப்பொட்டியும் பொட்டியடியும். 

66. சுவிட்ச்போர்டு ஓவியங்களும் அரை நூற்றாண்டுப் புகைப்படங்களும். 

67. கானாடுகாத்தான் மங்கள ஆஞ்ஜநேயர்

68. இளம் தொழில் முனைவோர் - ஐபிசிஎன் - 2017. ( SAY YES TO BUSINESS - YES IBCN - 2017 ) 

69. தடுக்கு, கூடை, கொட்டான் முடையலாம் வாங்க. 

70.  மாங்கல்ய தாரணமும் மங்கள தோரணமும்.

71. ஐந்தொகையும் பேரேடும் முறைச்சிட்டைகளும், அந்தக்கால எழுத்துக்களும்.

72. நடுவீட்டுக் கோலமும் பொங்கல் கோலமும் போடுவது எப்படி ?!

 

73.அருகி வரும் காரைக்குடி வீடுகள். KARAIKUDI HOUSES. 

 

74. காவடிகள் ஆடி வரும் ஆட்டத்திலே. 

 

75.  காவடியாம் காவடி. கந்தவேலன்காவடி. 

 

76. முத்துவிலாசமும் லெக்ஷ்மி விலாசமும். 

 

77.காரைக்குடி வீடுகளில் ஓவியங்களும் படங்களும். 

 

78. காரைக்குடி வீடுகளில் இயற்கை வண்ணத்தில் முருகனும் கிருஷ்ணனும். 

79. காரைக்குடி வீடுகளில் தஞ்சை ஓவியங்களில் லெக்ஷ்மியும் சரஸ்வதியும். 

80. செட்டிநாடும் செந்தமிழும். தேனார் மாணிக்கணார் இயம்பும் அகத்திணையின் அகம் :-

 81.  மொய்ப்பண ஏடும் இசை குடிமானமும் கோயில் பிரிவுகளும்.

82. காரைக்குடி வீடுகளில் வரந்தை ஓவியங்கள்.

83.  காரைக்குடி வீடுகள்:- முன்னோர் படைப்பும், சில திருமணச் சடங்குகளும்.


டிஸ்கி :- 2 :- இவற்றையும் பாருங்க. 

 1. மானகிரிக்கு காசியிலிருந்து உலா வந்த (3 1/2 கிலோ தங்கம் ) சொர்ணலிங்கம் 

2. குமுதம் பக்தி ஸ்பெஷலில் திருவாசகம் என்னும் தேன்....

3. காரைக்குடியில் கார்த்திகை வேல் பூசை

4. நவராத்திரி கொலுவும் மகர்நோன்பும் அம்மன் அம்பு போடுதலும்.

5. ராமாயணம் பாராயணமும், ராமர் பட்டாபிஷேகமும்.

6. மகாகவி பாரதியும் காரைக்குடி ஹிந்து மதாபிமான சங்கமும்

7. கவியரசர் இல்லமும் கர்னகை கதையும்

8. காவிரிப்பூம்பட்டினமும் கண்ணகியும்

9.செட்டிநாட்டு அரசர்..டாக்டர் திரு. எம்.ஏ.எம். ராமசாமி செட்டியார் .ஒரு சகாப்தம்.
 
10. குமுதமும் யவண்டம் வைரவன் செட்டியார் அவர்களும்..

11. இது நகரத்தார் வீட்டுக் கல்யாணம், இவள் புதியவளில்.

12.கல்யாணத்திலே இத்தனை சடங்கா..?! (நகரத்தார் திருமணம் நம் தோழியில் )

13. வைரமே வைரம்...

14. குங்குமம் தோழி இணைப்பில் செட்டிநாடு ஸ்பெஷல் - 30 விதமான சமையல் குறிப்புக்கள்.

15. நாட்டுக்கோட்டை நகரத்தார் வரலாறு - புத்தகம் ஒரு பார்வை

16. மங்கையர் மலரில் 32 ரெசிபிஸ் அறிமுகம்

17. செட்டிநாட்டு காரசார சமையல் ரெசிபிஸ் 32 - மங்கையர் மலர்



4 கருத்துகள்:

  1. சுவாரஸ்யமான நடைமுறைகள். பராமரிப்பில்லாமல் இருக்கும் அந்த வீடு ஒரு காலத்தில் எப்படி இருந்திருக்கும்! வீடும் பெருமூச்சு விடும்!

    பதிலளிநீக்கு
  2. aam Sriram

    enakku eeno blog il Tamil Manam box kanama pochu . enna aachunnu therila. so submit panna mudila

    aam Venkat sago , niraiya nadaimuraigal undu :)


    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...