எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 8 டிசம்பர், 2015

நட்புத்தத்துவமும் நனைந்த புத்தகங்களும்.

561. தேவதை தெய்வம்
முயல்குட்டி கோழிக்குஞ்சு
பூம்பாவை தேன்சோலையவள்


தேவன் சாமி
கந்தர்வன் காதலன்
அன்பன் கருணைக்காரனவன்



அவள்
யட்சிணியாகும்போது யட்சனாக
காளியாகும்போது கருப்பனாக,
பூதமாகும்போது பேய்பிசாசாக
வேட்டைக்காளியாகும்போது சுடலைமாடனாக
முருதாடியாகும்போது ராட்சசனாக
ரூபம் எடுக்கிறான் அவனும்.


ராட்சசம் ஆடிப் போரிட்டுமுடிந்து
சாந்தமாகும் இருவரிடத்தும்
அதே ராட்சச வேகத்தில்
தெய்வமும் புகுந்துகொள்கிறது .

562. ஏக் காவ் மே ஏக் கிஸான் ரகு தாத்தா..
,
,
,
,எதுக்குன்னு புரியல எல்லாரும் இன்னிக்கு ஹிந்தி பத்தி பேசி இருக்காங்க.. நானும் ஹிந்தி பேசிட்டேன். 

563. எனக்கு க்ளோஸ் ஃப்ரெண்டு ரெண்டு பேரை வேற கோத்து விட்டுருக்கு எஃப் பி... யாருடாது பார்த்தேன். ஆடிக்கொருக்கா அமாசிக்கு ஒருக்கா லைக் போடுறவங்க. நாம கோக்காம அதுவே நமக்கு க்ளோஸ் ஃப்ரெண்டுன்னு கோக்க முடியுமா தெரில.


564. ஒருத்தர் நல்ல தேர்ந்த இலக்கியவாதி. ஆனா பேக் ஐடில இருக்காரோன்னு தோணுது. பிறந்தநாள் வாழ்த்துச் சொல்லப்போனா அவர் சுவத்துல வாழ்த்துத் தெரிவிச்ச பாதிப்பேரு பேக் ஐடில இருக்காங்க போலேருக்கே. எப்பிடி இத்தன ஐடி மெய்ண்டெயின் பண்றாங்க..

565. என்னை உனக்குப் பிடிக்கும்
உன்னை எனக்குப் பிடிக்கும்
நம் இருவரின் ஜாதிக்கும் நம்மைப் பிடிப்பதில்லை.
ஒருவரை வைத்து ஒருவரை எய்துகொண்டிருக்கிறது
தன் வெடிப்பொருளாய்.
வெடித்துச் சிதறும்போதும் உணர்கிறோம்
நீ வேறு நான் வேறு நட்பு வேறு அல்ல
திருத்தியமைக்கப்படாத யதார்த்தமும் எண்ணப்போக்குகளும்தான்.

‪#‎நட்புத்தத்துவம்‬.

566. முகநூலை மூடிடலாமான்னு சில சமயம் தோணுது.. சில நேரங்களில் சிலரின் மறைவுகள் இனம்புரியாத உணர்வுகளைத் தோற்றுவிக்கின்றன.நாமே அவராக மாறி, நம் புகைப்படங்களும் நம்மைப் பற்றிய செய்திகளும் இழப்பு பற்றிய வருத்தங்களும் பகிரப்படுவதைப் பார்ப்பது போல் இருக்கிறது.
‪#‎கூடடையும்மாலைப்பறவைகளின்நிம்மதியின்மை‬.

567. காற்று கனவேகமாய் வீசித் தழுவியது. புளியம்பிஞ்சின் மணம், வயலில் நடந்த கதிர் அறுப்புக்குப் பின் உள்ள ஒரு மண் மணம், மழை எங்கோ தூறியதால் காற்றில் பரவிக் கிடக்கும் ஈரமண் வாசம் எல்லாம் நெஞ்சை வயிற்றை மூளையை கழுத்தை மூக்கை கண்ணை வாயை நிறைத்துக் கொண்டது. மூச்சை நன்றாக இழுத்தேன். என்ன ! மணம் என்ன மணம். ! அப்பப்பா.. இதுதான் சொர்க்கம், மெல்லிசுச் சட்டையிலும் தாவணியிலும் லேசாகப் பொறித்திருந்த வியர்வைப் பொடிகளை காற்று புகுந்து சுத்தமாகத் துடைத்துவிட்டுப் போயிற்று.
--- அந்த இரவின் தென்றல் இனிமை என்ற என்னுடைய கட்டுரையிலிருந்து. 

568. மரக்கிளையிலிருந்து மிதந்து மடிசேர்ந்த அதைக் கவனமாகப் பற்றினேன்.மெத்தென்ற தன்மை அது இருந்த இடத்தின் மென்மையைச் சொன்னது. வெதுவெதுப்பு அதன் உயிர்த்துடிப்படங்காததை உணர்த்தியது. கவனமின்மையாலோ வேண்டாததாலோ வெறுப்பாலோ காலம் தீர்ந்ததாலோ, களையப்பட்ட அது களைத்தும் கிடந்தது. வடக்கும் கிழக்கும் மேற்கும் தெற்கும் மேலும் கீழும் ஒன்றுதான். போதும் பறந்தது என்று பிசிறடித்துக் கிடந்தது என் உள்ளங்கைக்குள் ஓவியமாய் ஒரு இறகு.

569. வைஃபை இன்றி அமையாது உலகு.

570. வெள்ளம் தின்னும் உயிர்கள். என்ன செய்வதுன்னு தெரில. கையறு நிலை.

571. எங்கள் கேகே நகர் வீட்டிலும் பொருட்களைப் பிரிக்கக் கூட இல்லாமல் பிரித்த சிலவற்றையும் அப்படியே விட்டு விட்டு வந்திருக்கிறோம் மோகன் சகோ. எங்கள் அண்டை வீட்டார் என்ன ஆனாங்கன்னு தெரியல.

572. வெள்ளத்தில் நான் வாங்கிய புத்தகங்களும் எனது புத்தகங்களுமே அழிந்து போயிருக்குமே என்ற வருத்தத்தை என்னால் தாங்க முடியவில்லை.

573.இன்னும் 3 நாள் மழை இருக்காம். பத்ரமா இருங்க சென்னை மக்காஸ்.

574. chennai is fighting back.. seeing it with tearssss


575. ஜெர்மனியிலிருந்து ஒரு நண்பர் வினவி இருக்கிறார். ////ஒரு வேண்டுகோள்
------------

தமிழக மக்கள் வெள்ளத்தினால் சொல்லெணாத்துயரை அனுபவித்து வருகிறார்கள். அவர்களுக்கு பணம் சேகரித்து அனுப்பு பண்ணாகம் இணையத்தளம் தமிழ் எழுத்தாளர் இணைய இகம் ஆகிய இணைந்து செயலாக்க விரும்புகிறது.

தமிழக அரசின் முகவரி அல்லது நேர்மையான ஊழல் செய்யாத பொது அமைப்பின் முகவரி தேவை மின்னஞ்சலுடன் , அவற்றைப் பெற்றுத்தர முடியுமா?

-- ஆர் ஜே பாலாஜியின் முகநூல் பக்கத்தை அனுப்பி இருக்கிறேன். என் மகனின் பரிந்துரை.

576. அச்சு வெல்லம் சர்க்கரைக் கிழங்கு
உன் குரல் கூடப் பாகா வழியுதுடா
உன்னுடன் இருக்கும்போது ஊரே கண்ணுக்குத் தெரியலடா
உன்னை விட்டுப் பிரிஞ்சால் உன்மத்தம் பிடிச்சுப் போகுதுடா
ஊனிலும் உயிரிலும் கலந்துவிட்டாய்.
உள்ளிலும் வெளியிலும் உருகி நின்றேன் நான் மருகி நின்றேன்
என்ன நிகழ்கிறதெனக்குள் நினவும் பிசகுகிறது.
உன் குரல் மட்டும் என்னுள் இறங்குகிறது.
உயிர்தொட்டு உயிர்ப்பிக்கும் கலை எங்கு கற்றாய்
உன் உயிர்திரவம் சொட்டும் குரல் மட்டும் அனுப்பு

577. முகநூல் வலைத்தளம் எங்க போனாலும் எதைப் பார்த்தாலும் ஒரு மாதிரி வெறுமையா இருக்கு. என்ன செய்றதுன்னு தெரில. எதையோ ப்லாகுல கிறுக்கிட்டு இருக்கேன் வெறுமையத் தவிர்க்க..


578. யார் யாரோ எதைஎதையோ சொல்லி நாம் சொன்னதாக நிறுவுவதுதான் கொடுமையிலும் கொடுமை.

579.மனிதநேயத்தைப் பெருக்குகிறது மாமழை

580. விட்டுடுன்னு கதறியாச்சு தெளியவச்சு தெளியவச்சு அடிக்குது மழை.

டிஸ்கி :-

இவற்றையும் பாருங்க.


1. ஞானம் பிறந்த கதை. 

2. ஸ்வரமும் அபஸ்வரமும். 

3. அழகும் அறிவும் அன்பும் குழந்தைகளும்.

4. கணவன் அமைவதெல்லாம்..

5. தம்ஸ் அப் & வெல்விஷர்ஸ்..

6. அன்பெனும் பேராயுதம்.

7. கடல் விலங்கும் புத்தகக் குறிப்புகளும்.

8. க்ளார்க்ஸ் டேபிளும், கர்ணனின் கவசமும். 

9. என் வீடு என் சொர்க்கம்.

10. எழுத்தீர்ப்பு விசையும் இரும்பின் ருசியும். 

11. சந்தோஷ நாடோடியும் தாய்நதியும். 

12. கண்ணம்மாவும் ராஜிக்காவும்.

13. கசப்புதான் தேனின் உண்மையான ருசி‬.

14. அரை நிமிடத்தில் ஆயிரம் லைக் வாங்கும் அபூர்வ சிந்தாமணி

15. ட்விட்டர் கருப்பும் நெட் ந்யூட்ராலிட்டியும் 

16. மீண்டும் தெலுங்கானா. - ரிடர்ன் டு ஹைதை :)

17. முகமூடிகளும் மனப்பூக்களும். 

18. பாகுபலியா பாயும் புலியா.. ? வெறும் புலிதான் !. 

19. தனி ஒருவனும் அழகான வில்லிகளும். 

20. எருக்கஞ்செடியும் வெற்றிலைக் கொடியும்.

21. நெபந்தஸ் முத்தமும் நிம்பர்கரும்.  

22. இன்ஃபாக்‌ஷுவேஷன் & மிட்லைஃப் க்ரைஸிஸ். !!!

23. கரோர்பதி ஸ்டூலும் பேப்பர் ரோஸ்டும். 

24. வேண்டாத குப்பைகளும் வெள்ளைப் பொய்யர்களும்.

25. அம்முவும் அம்மாவும் எலவச எலக்கியக் குடிசையும். 

26. தோற்றவர்களும் துணிந்தவர்களும்.

27. நோக்கு வர்மமும் நவக்கிரகமும். 

28. வெள்ளாட்டுக் குட்டிகளும் வெரைட்டி ரைஸும்.

29.  நட்புத்தத்துவமும் நனைந்த புத்தகங்களும்.

30. ஸ்டிக்கர்களும் முப்பரிமாண வடிவங்களும். 

31.வெள்ளத் தீயும் தேரை இதயமும். 

32. காதல் கவுஜைகளும் முகநூல் காதலும். 

33. பேதை மனுஷியும் மாமியார் சிண்ட்ரோமும்.

34. டிவிஎஸ் 50 யும் ஸ்வீட் நத்திங்ஸும். :)

35. நோக்கர்களும் நந்தா விளக்கு விருதும். 

36. போதையும் போதிமரமும்.

37. மாயக் குடுவையும் மனமீனும்.


2 கருத்துகள்:

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...