எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 28 டிசம்பர், 2015

அவளுக்கான..

ஒரு கடல்
ஒரு இரவு
ஒரு விளக்கு
ஒரு தென்றல்
வரைகிறது
அம்முகத்தை
அதன் வடிவை
அந்தக் கூந்தல் அலைவை.

உருவாக்குபவற்றுள்
நீராய்ப்
பொருந்திக் கொள்கிறாளவள்.

அந்தப் புன்னகையை மட்டும்
ரகசியமாய்க் கடத்திக் கொண்டிருக்கிறன,
இருளாடும் அலையில்
அவளுக்கான இரு கண்கள். :)


1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)