எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 22 செப்டம்பர், 2020

அரசாணிக்கால் ஊன்றுதலும் மாத்துக் கட்டுதலும்.

 1591. அரசாணிக்கால் ஊன்றுதல்:- திருமணத்துக்கு முதல் நாள் பங்காளி வீட்டு ஆண்கள் அரசாணிக்கால் கட்டுவார்கள். உள்ளூர்த் திருமணமாக இருந்தால் மாப்பிள்ளை வீடு, பெண் வீடு இரண்டிலுமே அரசாணிக்கால் கட்டுவார்கள். வெளியூர்க் கல்யாணமாக இருந்தால் பெண் வீட்டில் மனைபோடும் இடத்தில்,, மனைக்கு எதிரில் (சாமி வீட்டின் எதிரே) அரசாணிக்கால் ( கறுப்புநிற – கிரானைட் கல்லில் படி வைத்துக் குழியுடன் இருக்கும் ஒரு கனமான சதுரக் கல்) வைத்து அதில் சிறிது பால் ஊற்றிப் பவளம் போடுவார்கள். இதில் ஒரு நீண்ட குச்சியை வைத்து அதில் கிளுவை பாலை மரக் கம்புகளை உத்தரத்தின் வளையத்தையும் இணைத்து சேர்த்துக் கட்டுவார்கள். இதில் மாவிலைகளையும் அரச இலைகளையும் சுற்றிக் கட்டி அழகுபடுத்துவார்கள். வீட்டார் சங்கு ஊத இதைப் பங்காளி வீட்டு ஆண்கள் வந்திருந்து ஊன்றுவார்கள். அரசன் ஆணை பெற்று அதன் அடையாளமாக அரசாணிக்கால் ஊன்றி இத்திருமணம் நடைபெறுவதாக ஐதீகம்.  

இதற்குப் பக்கத்தில் உயரம் குறைவான ஒரு ஸ்டூலில் சரவிளக்கை ஏற்றி வைக்க வேண்டும். அந்தக்காலத்தில் சரவிளக்கைத் தொங்க விடுவார்கள்.

1592. மாத்துக் கட்டுதல்:- சிலப்பதிகாரத்தில் இந்த மாற்றுக் கட்டுதல் பற்றிக் குறிப்பிடப்படுகிறது. மாலைகள் தொங்கும் உச்சியைக் கொண்ட வயிரமணித் தூண்களை உடைய மண்டபத்தில் நீல மேற்கட்டியின் கீழ் அமைந்த அழகிய முத்துப் பந்தலில், (“நீலவிதானத்து நித்திலப்பூம்பந்தர்க் கீழ் ” என்ற வரியின் மூலம் புலப்படுகிறது.) திருமணம் நடந்ததாம்.

திருமணத்துக்கு முதல் நாள் சலவைத் தொழிலாளி வந்து மணமேடையின் மேல் மாத்துக் கட்டுவார்.அதிலும் நீலமாத்து ரொம்பவே விசேஷம்.

1593. சாமான் பரப்புதல்:- முன்பெல்லாம் பெண்ணுக்குச் சேலைகள், வெள்ளி, சில்வர், பித்தளை, மங்கு, மரம், தகரம் , ஜாடி, மரச்சாமான் , கொட்டான், ப்ளாஸ்டிக், ரப்பர், இரும்பு இன்னபிற சாமான்களைப் பரப்புவார்கள். இன்று அந்த வழக்கம் இல்லை.  

1594. மாப்பிள்ளைக்கு வைக்கும் சாமான் :- இதுவும் இப்போதெல்லாம் வைப்பதில்லை. முன்பு மாப்பிள்ளைக்கு ரேடியோ, டேப் ரெக்கார்டர், டேபிள் ஃபேன், டேபிள் சேர் ஆகியன வைப்பார்கள். உடைகள் , செண்ட் பாட்டில், ஷேவிங் செட், செருப்பு, இன்னபிறவும் உண்டு.  

1595. மாமியாருக்கு வைக்கும் சாமான்.:- இதில் அடுப்பு, பொங்கலிடும் தவலை, கோலக்கூட்டு, இரு தூக்குச்சட்டிகள் இருக்கும். 

1596. பெண்ணுக்கு வைக்கும் சீர் இப்போது இது மட்டும்தான் 


1597. மாமியார் வீட்டில் பெண்ணுக்குப் பரப்பும் சீர்.




1598. கழுத்துரு வாங்கப் போதல் :- மாப்பிள்ளை வீட்டைச் சேர்ந்த இருவர் ( சித்தப்பா/சகோதரர் மற்றும் பங்காளிகளில் ஒருவர் ) பெண்வீட்டிற்குச் சென்று மறுநாள் திருப்பூட்ட வேண்டிய கழுத்துருவை வாங்கி வருவார்கள். பெண்வீட்டார் பட்டுத் துண்டில் வைத்து கழுத்துரு உருப்படிகளை ( 35) யும் தாலிச்சங்கிலிகளையும் கொடுப்பார்கள். அத்துடன் விரலி மஞ்சள், வெற்றிலை பாக்கு, மல்லிகைப்பூ போன்றவற்றை வாங்கி வள்ளுவப் பையில் வைத்துக் கொள்வார்கள். பெண்வீட்டிலும் மாப்பிள்ளை வீட்டிலும் வயதில் முதிர்ந்த பங்காளிகள் இந்தக் கழுத்துருவைக் கொடுத்து பெற்று வாங்கிச் செல்வார்கள். 

1599. கழுத்துரு கோர்த்தல் :- மாப்பிள்ளை வீட்டுக்  பங்காளிகள் திருமணத்துக்கு முதல்நாள் மாலை கூடி இந்தக் கழுத்துருவைக் கோர்ப்பார்கள். எட்டாம் நம்பர் அல்லது பத்தாம் நம்பர் வெள்ளை நூல்கண்டு வாங்கி அதில் 21 பாகம் எடுத்து மூன்றாக மடித்து ஒருமடிப்புக்குள் இன்னொருமடிப்பு வரும்படி மடித்து நன்கு திரித்து அரைத்த பட்டணம் மஞ்சளால் உரசுவார்கள். இந்த நூலை இரண்டாக மடித்துக் கீழ்ப்பாக 15 உருப்படிகளையும் மேற்பாகம் 16 உருப்படிகளையும் கோர்ப்பார்கள்.

1600. கழுத்துரு உருப்படிகள்:- கழுத்துருவில் கடைமணி 4, உரு – 19, ஏத்தனம் – 4 லெக்ஷ்மி ஏத்தனம் – 1, சரிமணி – 2, திருமாங்கல்யம் – 1 ஆக மொத்தம் 31. இவை போக குச்சி தும்பு துவாலை ஒற்றைத் தும்பு போன்றவை திருமணமான மறுநாள் கழுத்திருவில் கோர்த்துக் கட்டப்படும்.

கழுத்திரு கோர்க்கும் முறை:- அச்சிட்ட மாதிரிப் படங்களை வைத்துக் கொண்டுதான் இவற்றைக் கோர்ப்பார்கள். கோர்த்து முடித்ததும் இரு பக்கங்களிலும் அவை உருவிக்கொண்டு விடாதபடி முடிச்சுப் போட்டு வைப்பார்கள். குச்சி தும்பு துவாலை ஒற்றைத் தும்பு போன்றவற்றையும் தனியாக பிள்ளைச்சரடு எனப்படும் மஞ்சள் நூலில் கோர்த்து வைப்பார்கள்.

டிஸ்கி :- 1 :- இவற்றைப் பாருங்க.


1. ஆச்சியும் அய்த்தானும் 

2. அப்பச்சியும் ஆத்தாவும்.

3. அயித்தையும் அம்மானும்.

4. ஆயாவின் வீடு

5. ஐயாக்காளையும் ஆத்தாப் பொண்ணும்.

6. செட்டிநாட்டு வீடுகள் முகப்பு. CHETTINADU HOUSES

7. செட்டிநாட்டு வீடுகள்பட்டாலை. (CHETTINADU HERITAGE HOUSES )

8. செட்டிநாட்டு வீடுகள் -வளவு (CHETTINADU HERITAGE HOUSES )

9. செட்டிநாட்டு வீடுகள் மேங்கோப்பு:- CHETTINAD HOUSES. CEILING


10.  செட்டிநாட்டு வீடுகள்பத்தி . ( CHETTINAD HERITAGE HOUSES )

11. செட்டி நாட்டு வீடுகள் . இரண்டாம் கட்டும் ஆல்வீடும்அறைகளும். (CHETTINAD HERITAGE HOUSES - ROOMS )

12. செட்டிநாட்டு வீடுகள்சாமி வீடும் படைப்பும் . CHETTINAD HERITAGE HOUSES - SAAMI VEEDU & PADAIPPU.

13.செட்டிநாட்டு வீடுகள்சூர்யப் பலகையும் நிலைகளும். CHETTINAD HERITAGE HOUSES, SURYA PALAGAI

14.செட்டிநாட்டு வீடுகளும் கலைப்பொருட்களும். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 1

15.செட்டி நாட்டு வீடுகளும் & கலைப்பொருட்களும். CHETTINAD HOUSES & ARTIFACTS. பாகம் -2.

16. செட்டிநாட்டு வீடுகளும் கலைபொருட்களும். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 3

17. செட்டி நாட்டு வீடுகளும் கலைப்பொருட்களும். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 4.

18. செட்டிநாட்டு வீடுகள் & கலைப்பொருட்கள் & ஏடுகள். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 5

19. காரைக்குடி வீடுகள் & பொருட்கள். CHETTINAD HERITAGE HOUSES பாகம்- 6.

20. காரைக்குடி வீடுகள் . CHETTINAD HERITAGE HOUSES - பாகம் - 7.

21. காரைக்குடி வீடுகள். CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 8

22. காரைக்குடி வீடுகள்.- தேர்முட்டியார் வீடு. CHETTINAD HERITAGE HOUSES - பாகம் -9

23. காரைக்குடி வீடுகள்கானாடுகாத்தான் அரண்மனை. CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 10. 

24. காரைக்குடி வீடுகளில் ஓவியங்கள். - தனலெக்ஷ்மியும்தான்யலெக்ஷ்மியும்.PAINTINGS OF CHETTINAD HERITAGE HOUSES - DHANALAKSHMI & DHANYALAKSHMI. பாகம் 11. 


25. காரைக்குடி வீடுகளில் தேக்குமரச் சிற்பங்கள். -2.TEAKWOOD CARVINGS OF CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 12. 

26. காரைக்குடி வீடுகளில் ஓவியப் படங்கள். PAINTINGS OF CHETTINAD HERITAGE HOUSES. பாகம் 13. 

27. காரைக்குடி வீடுகளில் தேக்குமரச் சிற்பங்கள். TEAKWOOD CARVINGS OF CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 14 

28. காரைக்குடிச் சொல்வழக்கு. - ஆத்தீயும் அடியாத்தீயும் ஆத்தாடீயும்.

29. காரைக்குடிச் சொல்வழக்கு - பாயிவரப்பான்பட்டுக் கிடப்பான்,அரசாளுவ . !!! 

30. காரைக்குடிச் சொல்வழக்கு :- மக்களுக்கு அப்பச்சியும் நாச்சியாமகனும்.

31. காரைக்குடிச் சொல்வழக்கு. :- கழுத்துருவும் ( கழுத்தீரு )கால்மோதிரமும்.

32. காரைக்குடி ஸ்பெஷல் உணவு வகைகளும் பந்தி விசாரணையும்.

33. காரைக்குடிச் சொல்வழக்கு :- கூடி ஆக்கி உண்ணுதலும் கோட்டைகட்டுதலும்.  

34. காவடிகள் ஆடி வரும் ஆட்டத்திலே.

35.முளைப்பாரி/முளைப்பாலிகை தயாரித்தல்

36.ஆடி வெள்ளியில் திருவிளக்கு பூஜை.

37. காரைக்குடிச் சொல்வழக்கு - வேவும் திருவாதிரைப் புதுமையும்சூள்பிடியும்/சூப்டியும்

38. காரைக்குடிச் சொல்வழக்கு - போரிடுதலும் கிலுக்கி எடுத்தலும்கொப்பி கொட்டலும்

39. 16 மாற்றுத் தங்கமும் 500 மாற்றுத் தங்கமும்.

40. புகைப்பட தின ஸ்பெஷல் 2016. காரைக்குடி வீடுகள். - KARAIKUDI HOUSES FOR CAMERA DAY SPECIAL.

41.சாரட்டில் மாப்பிள்ளை அழைப்பும் பெண்ணுக்குக் கொடுக்கும் சீரும்.

42.சிவப்பு ஓலைக் கொட்டான்கள் & வெள்ளி வேவுக் கடகாம்கள்.

43. பூந்திக் கொட்டங்காயும் பட்டுப்புடவை பராமரிப்பும்.. 

44. காரைக்குடிச் சொல்வழக்குகொரக்களியும் வர்ணக்கோமாளியும்

45. அகத்திலும் அகத்திலும் ”எங்கள் ஆத்தாள் ”.

46. காரைக்குடி வீடுகள். - ஏழு வாயிற்கதவுகளும் மணிப்பூட்டும் காசாணிஅண்டாவும். ( தண்ணிக்கிடாரம்)

47. வெற்றி ”இணையர்கள் வெங்கடாசலம் & பழனியப்பன். ( ஐபிசிஎன்கட்டுரை )

48. மார்கழித் திருவாதிரைப்புதுமைப் பாடலும் திருவாதிரைநாச்சியார்களும்.

49. காரைக்குடிச் சொல்வழக்கு :- ரேடியோப் பெட்டி அலமாரியும் ரொட்டிப்பொட்டித் தகரங்களும்

50. கோவிலூர் மியூசியம்

51. கலாச்சாரப் பயிற்றுவிப்பு முகாம் .:-

52. காரைக்குடிச் சொலவடைகள்சமத்தியும் ராராட்டும்இங்காவும்ரெங்காவும்.

53. காரைக்குடிப் பெயர்கள்அம்மைகளும் அப்பன்களும்.

54. காரைக்குடி - வீடாகு பெயர்கள்.


















































129. திருப்பூட்டுதலும் கழுத்துரு கோர்க்கும் முறையும். 


130. கன்னு/கண்ணித் துணியும் மேட்டித் துணியும்.

131.காரைக்குடி முனியையா கோயில்.

132. அஃகன்னா அமைப்பில் தமிழ்த்தாய் திருக்கோயில்.

133. பொங்கி மரவையும் டொப்பி மரவையும் சிலோன் மரவையும்.

134. வட்டாரப் பழமொழிகள் - 1.

135. வட்டாரப் பழமொழிகள் - 2.

136. வட்டாரப் பழமொழிகள் - 3.

137. வட்டாரப் பழமொழிகள் - 4 

138. வட்டாரப் பழமொழிகள் - 5.

139. வட்டாரப் பழமொழிகள் - 6.

140. வட்டாரப் பழமொழிகள் - 7.

141. வட்டாரப் பழமொழிகள் - 8.

142. வட்டாரப் பழமொழிகள் - 9.

143. கெட்டிபண்ணிக் கொள்ளுதலும் கல்யாணம் சொல்லுதலும்.

144.தும்பு பிடித்தலும் மாப்பிள்ளைக்கு மிஞ்சி அணிவித்தலும்.

145. மாத்தூர் - சில சிறப்புகள்.

146. கூம்பு ஆலாத்தியும் சதுராலாத்தியும்.

147. பேர் பெற்ற வீடு.

148. மாத்தூர்க் கோவிலில் பிரமோற்சவம்.

149. கார்த்திகை பூசையும் மாவிளக்கும்.

150. பூசைச் சாப்பாடு.


டிஸ்கி :- 2 :- இவற்றையும் பாருங்க.

 1. மானகிரிக்கு காசியிலிருந்து உலா வந்த (3 1/2 கிலோ தங்கம் )சொர்ணலிங்கம் 

2. குமுதம் பக்தி ஸ்பெஷலில் திருவாசகம் என்னும் தேன்....

3. காரைக்குடியில் கார்த்திகை வேல் பூசை

4. நவராத்திரி கொலுவும் மகர்நோன்பும் அம்மன் அம்பு போடுதலும்.

5. ராமாயணம் பாராயணமும்ராமர் பட்டாபிஷேகமும்.

6. மகாகவி பாரதியும் காரைக்குடி ஹிந்து மதாபிமான சங்கமும்

7. கவியரசர் இல்லமும் கர்னகை கதையும்

8. காவிரிப்பூம்பட்டினமும் கண்ணகியும்.

9.செட்டிநாட்டு அரசர்..டாக்டர் திருஎம்..எம்ராமசாமி செட்டியார் .ஒருசகாப்தம்.

10. குமுதமும் யவண்டம் வைரவன் செட்டியார் அவர்களும்..

11. இது நகரத்தார் வீட்டுக் கல்யாணம்இவள் புதியவளில்.

12.கல்யாணத்திலே இத்தனை சடங்கா..?! (நகரத்தார் திருமணம் நம்தோழியில் ) 

13. வைரமே வைரம்...

14. குங்குமம் தோழி இணைப்பில் செட்டிநாடு ஸ்பெஷல் - 30 விதமானசமையல் குறிப்புக்கள்

15. நாட்டுக்கோட்டை நகரத்தார் வரலாறு - புத்தகம் ஒரு பார்வை

16. மங்கையர் மலரில் 32 ரெசிபிஸ் அறிமுகம் 

17. செட்டிநாட்டு காரசார சமையல் ரெசிபிஸ் 32 - மங்கையர் மலர்

4 கருத்துகள்:

  1. அரசாணிக்கால்...இதனை அரசன் ஆணைக் கால் என்று சொல்லக் கேள்விப்பட்டுள்ளேன். அந்நடைமுறையே தற்போது தொடர்வதாகக் கூறுவர்.

    பதிலளிநீக்கு
  2. நன்றி டிடி சகோ

    நன்றி ஜம்பு சார். நீங்கள் சொல்வதைத்தான் குறிப்பிட்டு உள்ளேன்

    நன்றி வெங்கட் சகோ

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...