எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 15 ஆகஸ்ட், 2019

காரைக்குடிச் சொல்வழக்கு :- மகமையும் புள்ளி வரியும்.

1301. மெத்த சந்தோஷம் - மிகுந்த மகிழ்ச்சி/ அளவற்ற சந்தோஷம். 

1302. பீம சாந்தி - 55 ஆவது பிறந்ததினம்.

1303. சாந்திக் கல்யாணம்/உக்ர ரத சாந்தி/சஷ்டியப்த பூர்த்தி  - 60 ஆம் கல்யாணம். ( 60 ஆவது பிறந்தநாள் கொண்டாட்டம் சாந்திக்கல்யாணம் என்று கொண்டாடப்படுகிறது ). கணபதி பூஜை, ஹோமம், ஆயுஷ் ஹோமம், நவக்ரஹ சாந்தி ஆகியன செய்து உற்றம் சுற்றம் அனைவரையும் அழைத்து ஹோமத்தில் வைக்கப்பட்ட கும்ப நீர் சொரிந்து அபிஷேகம் செய்து கொள்வார்கள். ( 59 ஆம் பிறந்த நாளிலும் திருக்கடையூரில் ஆயுஷ் ஹோமம் செய்து கொள்வார்கள் ) 

1304. பீமரத சாந்தி - 70 ஆவது பிறந்த தினம். 

1305. விஜய ரத சாந்தி - 75 ஆவது பிறந்த தினம்.  

1306. சதாபிஷேகம் - 80 ஆவது பிறந்த நாள் . ஒருவர் தன் வாழ்நாளில் ஆயிரம்பிறை கண்ட நாளைக் கொண்டாட சதாபிஷேகம் செய்து கொள்வார்கள். 


1307. கனகாபிஷேகம்/மகுடாபிஷேகம் - 96 ஆவது பிறந்த நாள். கும்பநீரில் தங்க வெள்ளிக்காசுகளைப் போட்டுக் கும்பம் சொரிவார்கள்.  

1308. மகாபிஷேகம்/ பூர்ணாபிஷேகம் - 100 வயது பூர்த்தியானதைக் கொண்டாடுவது. 

1309. நல்ல நாள் பார்த்தல், முகூர்த்தம் குறித்தல் - நல்ல நிகழ்வுகளுக்கு ( திருமண நிச்சயம், முகூர்த்தம், குடிபுகல், பிள்ளை பெற்று அழைக்க, கொண்டு விட, சமைந்ததற்கு வடிக்க, பிள்ளை பெற்றதற்கு வடிக்க நல்ல நாள் பார்ப்பார்கள் ) 

1310. கண்ணாத்தாள் - கண்ணகி. கண்ணாத்தாள் என்ற அம்மன் நாட்டரசங்கோட்டையில் அருளாட்சி புரிகிறாள். அந்த அம்மனை வழிபட்டால் கண் பார்வை தெளிவாகத் தெரியும். கண் சம்பந்தப்பட்ட நோய்களை நீக்கும் தெய்வம். கண்ணகியையும் கண்ணாத்தாள் என்று அழைக்கும் பழக்கம் இருக்கிறது. 

1311. புள்ளிவரி - ஒரு வீட்டில் இருக்கும் ஆண் அரைப்புள்ளி. அவனுக்குத் திருமணமானால் ஒரு புள்ளி. கணவன் இறந்துமனைவி இருந்தாலும் மனைவி இறந்து கணவன் இருந்தாலும் அவர்கள் அரைப்புள்ளி. எப்படி இருந்தாலும் ஊரில் உள்ள நகரச் சிவன் கோவிலில் நகரத்தார் புள்ளியாகப் பதிந்து கொள்வார்கள். நகரத்தாரின் ஒன்பது கோவில்களில் எந்தக் கோவிலைச் சார்ந்தவர்களோ அந்தக் கோவில் புள்ளியாகப் பதிந்து கொள்ள வேண்டும். நகரச் சிவன் கோவிலுக்கு ஆண்டுதோறும் புள்ளி வரி செலுத்தியும் வரவேண்டும். அதே போல் அவரவர் சார்ந்த கோவில்களிலும் புள்ளியாகப் பதிவு செய்து புள்ளிவரி செலுத்தி வர வேண்டும். திருமணம் போன்ற நல் நிகழ்வுகளின் போது அவரவர் சார்ந்த கோவில்களில் பாக்கு வைத்துச் சொல்லி ( இறைவனுக்கு அழைப்பு வைத்து அழைத்து ) புள்ளி வரி செலுத்திப் பதிவு செய்து கொள்ள வேண்டும். இப்படிப் பதிவு செய்தால்தான் அவர் புள்ளியாக அங்கீகரிக்கப்பட்டு கோவில் மாலை வரும். கோவில் மாலை வந்தால்தான் திருப்பூட்ட முடியும் ( திருமணம் நகரத்தார் திருமணமாக அங்கீகரிக்கப்பட்டுப் பதிவு செய்யப்படும் ). 

1312. மகமை - எல்லாப் பெரிய இந்துக் கோவில்கள் இருக்கும் ஸ்தலங்களிலும் நகரத்தாரின் சத்திரம் இருக்கும். இந்தச் சத்திரங்கள் முன்னோர்களால் உருவாக்கப்பட்டு அதன் நடைமுறை செலவுகளுக்காக சத்திரங்களின் முன்புறம் கடைகள் கட்டி வாடகைக்கு விடப்பட்டிருக்கும். இச்சத்திரங்களில் நகரத்தார் சென்று தங்க முடியும். ஹோட்டல்களில் அதிக வாடகை கொடுத்துத் தங்குவதற்குப் பதிலாக இந்தச் சத்திரங்களில் குறைந்த வாடகையில் அறைகள் கிடைக்கும். ( இப்போது ஏசி ரூம்கள் தனி பாத்ரூம்களோடும் கிடைக்கிறது )  அதற்கு வாடகை செலுத்த வேண்டும். அறைகள் வேண்டாமென்றால் பொருட்களை வைத்துப் பூட்டிக் கொள்ள வாடகைக்கு அலமாரிகள் கிடைக்கும். ( க்ளோக் ரூம் போல் ). இங்கே சென்று தங்கினால் ரூம் வேண்டாமென்றால் இலவசமாக வராண்டாவில் படுத்துக் கொள்ளலாம். தலையணை, பாய் கொடுப்பார்கள். குடிநீர் வைக்கப்பட்டிருக்கும். பாத்ரூம், டாய்லெட் போன்றவற்றை உபயோகித்துக் கொள்ளலாம். முக்கால்வாசி சத்திரங்களில் இதற்குக் குறைந்த அளவில் ( 10 ரூ ஒரு ஆளுக்கு ) மகமை வசூலிப்பார்கள். இரவில் தங்கினால் மட்டுமே சிலவற்றில் மகமை செலுத்த வேண்டி இருக்கும். பகலில் தங்கிச் சென்றால் இலவசம்தான். சில சத்திரங்களில் ( காசி, இராமேஸ்வரம் ) மதிய அன்னதானமும் கூட உண்டு. 

1313. சாட்சிபூதம் - ஆண்டவன். கோர்ட் கேஸ் என்று தங்கள் சொத்துப் பிரச்சனைக்காக வாதாட முடியாதவர்கள் சாட்சிபூதத்தைத் துணைக்கழைப்பதுண்டு.  

1314. ரசீது கொண்டி - ரசீதுகளைக் கோர்த்து சேமித்து வைக்கும் வளைவான கொக்கி கொண்ட குச்சி.

1315. பவர் பத்திரம் - சொத்துக்குண்டான பவர் பத்திரம். சொத்து உரிமையைக் கைமாற்றி விடும், வாரிசுதாரரை நியமிக்கும் பத்திரம், கூட்டு பிஸினஸில் சொத்துக்களை, இடங்களை , ஷேர்களை ( பங்குகளை ) , வியாபாரத்தையே கைமாற்றிவிடவும், விற்கவும் வாங்கவும் அளிக்கப்படும் பவர்  - பவர் பத்திரம் எனப்படும். 

1316. தாவா - வாய்தா வாங்குதல், வக்காலத்து கொடுத்தல். 

1317. கக்கடேசி - ஆகக் கடைசி, கட்டக் கடைசி

1318. ஊருநாடு போல் - பேச்சுவாக்கில் நம்மூரு போல வருமா எனக் கேட்பது. 

1319. காடி - வண்டி, பொதுவாக காரை காடி எனக் குறிப்பிடுவார்கள். ( வெள்ளைக்காடி என்றால் வொயிட் வினிகர் )

1320. மனுசன் வீடு - மேன்மக்கள், தன் நிலையில் இருந்து தாழாதவர்கள், நல்ல தரமான மனிதர்களைக் குறிப்பிட அவுக மனுசன் வீடு என்பார்கள்.  

டிஸ்கி :- 1 :- இவற்றைப் பாருங்க.

1. ஆச்சியும் அய்த்தானும் 

2. அப்பச்சியும் ஆத்தாவும்.

3. அயித்தையும் அம்மானும்.

4. ஆயாவின் வீடு

5. ஐயாக்காளையும் ஆத்தாப் பொண்ணும்.

6. செட்டிநாட்டு வீடுகள் முகப்பு. CHETTINADU HOUSES

7. செட்டிநாட்டு வீடுகள்பட்டாலை. (CHETTINADU HERITAGE HOUSES )

8. செட்டிநாட்டு வீடுகள் -வளவு (CHETTINADU HERITAGE HOUSES )

9. செட்டிநாட்டு வீடுகள் மேங்கோப்பு:- CHETTINAD HOUSES. CEILING


10.  செட்டிநாட்டு வீடுகள்பத்தி . ( CHETTINAD HERITAGE HOUSES )

11. செட்டி நாட்டு வீடுகள் . இரண்டாம் கட்டும் ஆல்வீடும்அறைகளும். (CHETTINAD HERITAGE HOUSES - ROOMS )

12. செட்டிநாட்டு வீடுகள்சாமி வீடும் படைப்பும் . CHETTINAD HERITAGE HOUSES - SAAMI VEEDU & PADAIPPU.

13.செட்டிநாட்டு வீடுகள்சூர்யப் பலகையும் நிலைகளும். CHETTINAD HERITAGE HOUSES, SURYA PALAGAI

14.செட்டிநாட்டு வீடுகளும் கலைப்பொருட்களும். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 1

15.செட்டி நாட்டு வீடுகளும் & கலைப்பொருட்களும். CHETTINAD HOUSES & ARTIFACTS. பாகம் -2.

16. செட்டிநாட்டு வீடுகளும் கலைபொருட்களும். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 3

17. செட்டி நாட்டு வீடுகளும் கலைப்பொருட்களும். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 4.

18. செட்டிநாட்டு வீடுகள் & கலைப்பொருட்கள் & ஏடுகள். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 5

19. காரைக்குடி வீடுகள் & பொருட்கள். CHETTINAD HERITAGE HOUSES பாகம்- 6.

20. காரைக்குடி வீடுகள் . CHETTINAD HERITAGE HOUSES - பாகம் - 7.

21. காரைக்குடி வீடுகள். CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 8

22. காரைக்குடி வீடுகள்.- தேர்முட்டியார் வீடு. CHETTINAD HERITAGE HOUSES - பாகம் -9

23. காரைக்குடி வீடுகள்கானாடுகாத்தான் அரண்மனை. CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 10. 

24. காரைக்குடி வீடுகளில் ஓவியங்கள். - தனலெக்ஷ்மியும்தான்யலெக்ஷ்மியும்.PAINTINGS OF CHETTINAD HERITAGE HOUSES - DHANALAKSHMI & DHANYALAKSHMI. பாகம் 11. 


25. காரைக்குடி வீடுகளில் தேக்குமரச் சிற்பங்கள். -2.TEAKWOOD CARVINGS OF CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 12. 

26. காரைக்குடி வீடுகளில் ஓவியப் படங்கள். PAINTINGS OF CHETTINAD HERITAGE HOUSES. பாகம் 13. 

27. காரைக்குடி வீடுகளில் தேக்குமரச் சிற்பங்கள். TEAKWOOD CARVINGS OF CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 14 

28. காரைக்குடிச் சொல்வழக்கு. - ஆத்தீயும் அடியாத்தீயும் ஆத்தாடீயும்.

29. காரைக்குடிச் சொல்வழக்கு - பாயிவரப்பான்பட்டுக் கிடப்பான்,அரசாளுவ . !!! 

30. காரைக்குடிச் சொல்வழக்கு :- மக்களுக்கு அப்பச்சியும் நாச்சியாமகனும்.

31. காரைக்குடிச் சொல்வழக்கு. :- கழுத்துருவும் ( கழுத்தீரு )கால்மோதிரமும்.

32. காரைக்குடி ஸ்பெஷல் உணவு வகைகளும் பந்தி விசாரணையும்.

33. காரைக்குடிச் சொல்வழக்கு :- கூடி ஆக்கி உண்ணுதலும் கோட்டைகட்டுதலும்.  

34. காவடிகள் ஆடி வரும் ஆட்டத்திலே.

35.முளைப்பாரி/முளைப்பாலிகை தயாரித்தல்

36.ஆடி வெள்ளியில் திருவிளக்கு பூஜை.

37. காரைக்குடிச் சொல்வழக்கு - வேவும் திருவாதிரைப் புதுமையும்சூள்பிடியும்/சூப்டியும்

38. காரைக்குடிச் சொல்வழக்கு - போரிடுதலும் கிலுக்கி எடுத்தலும்கொப்பி கொட்டலும்

39. 16 மாற்றுத் தங்கமும் 500 மாற்றுத் தங்கமும்.

40. புகைப்பட தின ஸ்பெஷல் 2016. காரைக்குடி வீடுகள். - KARAIKUDI HOUSES FOR CAMERA DAY SPECIAL.

41.சாரட்டில் மாப்பிள்ளை அழைப்பும் பெண்ணுக்குக் கொடுக்கும் சீரும்.

42.சிவப்பு ஓலைக் கொட்டான்கள் & வெள்ளி வேவுக் கடகாம்கள்.

43. பூந்திக் கொட்டங்காயும் பட்டுப்புடவை பராமரிப்பும்.. 

44. காரைக்குடிச் சொல்வழக்குகொரக்களியும் வர்ணக்கோமாளியும்

45. அகத்திலும் அகத்திலும் ”எங்கள் ஆத்தாள் ”.

46. காரைக்குடி வீடுகள். - ஏழு வாயிற்கதவுகளும் மணிப்பூட்டும் காசாணிஅண்டாவும். ( தண்ணிக்கிடாரம்)

47. வெற்றி ”இணையர்கள் வெங்கடாசலம் & பழனியப்பன். ( ஐபிசிஎன்கட்டுரை )

48. மார்கழித் திருவாதிரைப்புதுமைப் பாடலும் திருவாதிரைநாச்சியார்களும்.

49. காரைக்குடிச் சொல்வழக்கு :- ரேடியோப் பெட்டி அலமாரியும் ரொட்டிப்பொட்டித் தகரங்களும்

50. கோவிலூர் மியூசியம்

51. கலாச்சாரப் பயிற்றுவிப்பு முகாம் .:-

52. காரைக்குடிச் சொலவடைகள்சமத்தியும் ராராட்டும்இங்காவும்ரெங்காவும்.

53. காரைக்குடிப் பெயர்கள்அம்மைகளும் அப்பன்களும்.

54. காரைக்குடி - வீடாகு பெயர்கள்.

55. பேரனுண்டா.. பேரன் பிறந்திருக்கிறானே.56. திருப்புகழைப் பாடப் பாட..

57. காரைக்குடி வீடுகள்ஓளிபாயும் இல்லங்கள். -கோட்டையும் மதிலும்.


58. ஏடும் எழுத்துக்களும்இசைகுடிமானமும் முறி எழுதிக்கொள்ளுதலும்.

59. இலை விருந்துஇதுதாண்டா சாப்பாடு.

60. காரைக்குடிச் சொல்வழக்குஅந்தப் பக்கட்டும் இந்தப் பக்கட்டும்

61. காரைக்குடிச் சொல்வழக்குசுவீகாரம்திருவாதிரைப் புதுமைப்புகைப்படங்கள்.

62. திருவாசகத்துக்கு உருகார்.. - 108 சிவலிங்கங்கள் அமைத்த சிவலிங்கம்.

63. கூடை கூடையாய் தன்னம்பிக்கை கொடுக்கும் விஜயலெக்ஷ்மி.

64. கவுடு என்ற கண்டிகையும் ருத்ராக்ஷ தெரஃபியும்

65. காரைக்குடிச் சொல்வழக்குகைப்பொட்டியும் பொட்டியடியும்

66. சுவிட்ச்போர்டு ஓவியங்களும் அரை நூற்றாண்டுப் புகைப்படங்களும்

67. கானாடுகாத்தான் மங்கள ஆஞ்ஜநேயர்

68. இளம் தொழில் முனைவோர் - ஐபிசிஎன் - 2017. ( SAY YES TO BUSINESS - YES IBCN - 2017 ) 

69. தடுக்குகூடைகொட்டான் முடையலாம் வாங்க

70.  மாங்கல்ய தாரணமும் மங்கள தோரணமும்.

71. ஐந்தொகையும் பேரேடும் முறைச்சிட்டைகளும்அந்தக்காலஎழுத்துக்களும்.

72. நடுவீட்டுக் கோலமும் பொங்கல் கோலமும் போடுவது எப்படி ?!






டிஸ்கி :- 2 :- இவற்றையும் பாருங்க.

 1. மானகிரிக்கு காசியிலிருந்து உலா வந்த (3 1/2 கிலோ தங்கம் )சொர்ணலிங்கம் 

2. குமுதம் பக்தி ஸ்பெஷலில் திருவாசகம் என்னும் தேன்....

3. காரைக்குடியில் கார்த்திகை வேல் பூசை

4. நவராத்திரி கொலுவும் மகர்நோன்பும் அம்மன் அம்பு போடுதலும்.

5. ராமாயணம் பாராயணமும்ராமர் பட்டாபிஷேகமும்.

6. மகாகவி பாரதியும் காரைக்குடி ஹிந்து மதாபிமான சங்கமும்

7. கவியரசர் இல்லமும் கர்னகை கதையும்

8. காவிரிப்பூம்பட்டினமும் கண்ணகியும்.

9.செட்டிநாட்டு அரசர்..டாக்டர் திருஎம்..எம்ராமசாமி செட்டியார் .ஒருசகாப்தம்.

10. குமுதமும் யவண்டம் வைரவன் செட்டியார் அவர்களும்..

11. இது நகரத்தார் வீட்டுக் கல்யாணம்இவள் புதியவளில்.

12.கல்யாணத்திலே இத்தனை சடங்கா..?! (நகரத்தார் திருமணம் நம்தோழியில் ) 

13. வைரமே வைரம்...

14. குங்குமம் தோழி இணைப்பில் செட்டிநாடு ஸ்பெஷல் - 30 விதமானசமையல் குறிப்புக்கள்

15. நாட்டுக்கோட்டை நகரத்தார் வரலாறு - புத்தகம் ஒரு பார்வை

16. மங்கையர் மலரில் 32 ரெசிபிஸ் அறிமுகம் 

17. செட்டிநாட்டு காரசார சமையல் ரெசிபிஸ் 32 - மங்கையர் மலர்

3 கருத்துகள்:

  1. சொற்களுக்கான விளக்கங்கள் வியக்கவைத்தன. நன்றி.

    பதிலளிநீக்கு
  2. நல்லதொரு தொகுப்பு.

    புள்ளிவரியும், மகமையும் வியப்பு அளிக்கும் செய்திகள். நகரத்தார் சத்திரங்கள் - காசியில் பார்த்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  3. நன்றி ஜம்பு சார்

    நன்றி வெங்கட் சகோ. ஆம் இன்னும் பல ஊர்களில் இருக்கின்றன சகோ.

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...