எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 6 ஆகஸ்ட், 2019

ஹம் காமாட்சி கோவிலில் ஆதி சங்கரர் வரலாறு.

ஹம் காமாட்சி அம்மன் கோவிலின் எதிரிலேயே அக்கோவிலின் அன்னதான உணவுக்கூடமும் அமைந்துள்ளது. அங்கேயே முன்புறம் உள்ள இல்லத்தில் அக்கோவில் உருவாகக் காரணமாக இருந்த பாஸ்கரன் என்பவரும் வசித்து வருகிறார். பின்புறம் அன்னதானக் கூடமும் ரெஸ்ட் ரூமும் உள்ளது.

கோயிலுக்கும் அன்னதானத்துக்கும் நிதி அளிக்க விரும்புபவர்கள் அங்கே இருக்கும் உண்டியலில் நிதியைச் சேர்க்கலாம். உணவுண்டு வந்த பின்பு உண்டியலைப் பார்த்த நாங்களும் ஒரு தொகையை சேர்த்தோம். :)


ஆதி சங்கரர் காலடி என்னும் ஊரில் ஆர்யாம்பாள், சிவகுரு தம்பதியினருக்கு மகவாய்ப் பிறந்தார்.



கோவிந்த பகவத் பாதர் என்பவரிடம் சீடராகச் சேர்ந்து வேதாந்தம் தத்துவம் ஆகியவற்றைக் கற்றுக் கொண்டார்.
ஏழாம் நூற்றாண்டில் பிறந்த இவர் காஞ்சியில் சர்வக்ஞா பீடம் நிறுவி உள்ளார்.

அதன்பின் இவர் இங்கேயே சமாதி அடைந்ததாக காஞ்சி சங்கரமடம் வரலாறு சொல்கிறது. இம்மடமே காஞ்சி காமாட்சியம்மன் கோவில் நிர்வாகத்தை ஏற்று நடத்தி வருகிறது. இந்தக் கோவிலும் காமாட்சி அம்மனும் ஆதி சங்கரரும்  இணைந்த கோவிலாகவே உள்ளது. கோவிலிலும் அவரது ஓவியங்கள் காணப்படுகின்றன.


துறவறம் மேற்கொண்டாலும் தாய் ஆர்யாம்பாளுக்குக் கொடுத்த வாக்குப்படி அவரது மரணத் தருவாயில் உடனிருந்து இறுதிக் காரியங்கள் செய்தார்.


அத்வைத சித்தாந்தத்தை நிறுவியவர் இவர். உபநிடதங்கள், பிரம்ம சூத்திரம், பகவத் கீதைக்கு உரை இயற்றி உள்ளார். சுப்ரமண்ய புஜங்கம், பஜ கோவிந்தம் கனகதாரா ஸ்தோத்திரம் ஆகியன இயற்றி உள்ளார்.

கபாலிகர்களோடு வாதம் செய்து தடுத்தாட்கொண்டு கபாலிக மதத்தை வேரறுத்தார்.


மண்டன மிஸ்ரர் என்பவருடன் வாதம் செய்ய நேரிட்டது. அவரது மனைவி சரசவாணியே நடுநிலை ஏற்று அமர்கிறார். வாதத்தின் போது சங்கரர் அணிந்த மாலை வாடவே இல்லை. மண்டன மிஸ்ரர் அணிந்த மாலை வாடிச் சுருங்கிவிடுகிறது. எனவே சரஸவாணி தன் கணவன் மண்டன மிஸ்ரர் தோற்றதாக அறிவிக்க வேண்டி வருகிறது. உடனே சரஸவாணியும் சங்கரருடன் வாதில் பொருத அமர்கிறார். அவரும் தோற்றவுடன் மண்டன மிஸ்ரர் சுரேஸ்வரர் என்னும் நாமத்துடன் சங்கரரின் சீடராகிறாகிறார்.

ஆதி குரு தட்சிணா மூர்த்திக்கு சனகாதி முனிவர்கள் போல் நான்கு சீடர்களை உருவாக்கி இருக்கிறார் சங்கரர். அவர்கள் முறையே பத்மபாதர், சுரேஷ்வரர், அஸ்தாமலகர், மற்றும் தோடகர்.
இவர்களை முறையே கிழக்கு, தெற்கு, மேற்கு , வடக்கு ஆகிய திசைகளில் மடங்கள் அமைத்து அதற்கு பீடாதிபதிகள் ஆக்கினார். ரிக், யஜுர் , சாமம் , அதர்வணம் ஆகிய வேதங்களில் இவர்கள் சிறந்து விளங்கினார்கள்.

முடிவில் ஆதி சங்கர பகவத் பாதர் பிரம்மமே ஆனந்தமயமானவன் என்பதை நிறுவி மறைந்தார்.

டிஸ்கி :- அழகான இந்த ஓவியங்களை வரைந்தவர் வர்ணகலாபம் கிருபா என்பவர்.

டிஸ்கி 2. ஆமாம் ஹம் காமாட்சியின் ப்ரசாதம் தருகிறேன் என்றீர்களே சங்கரர் பற்றித்தானே எழுதி இருக்கீங்க என்று கேட்கின்றீர்களா. ஆமாம். அங்கே காய்கறிகள் போட்ட கலவை/ சாம்பார் சாதம் கிடைத்தது. அதை விட சங்கரர் என்னும் அருட் பிரசாதம் ஓவிய வடிவில் கிடைத்தது மனதிற்கு இனிமையாக இருந்தது அதனால்தான் அதைப் பகிர்ந்துள்ளேன். இதுதான் ஹம் காமாட்சி தந்த சங்கரப் பிரஸாதம். :) 

3 கருத்துகள்:

  1. நியூ ஜெர்சி வரும்போது தெரிவிக்க மறக்காதீர்கள்!

    பதிலளிநீக்கு
  2. சங்கரப் பிரசாதம்... நன்று.

    தொடரட்டும் பதிவுகள்.

    பதிலளிநீக்கு
  3. நிச்சயம் சொல்கிறேன் செல்லப்பா சார்

    நன்றி வெங்கட் சகோ

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...