எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
ஆதி சங்கரர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஆதி சங்கரர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 6 ஆகஸ்ட், 2019

ஹம் காமாட்சி கோவிலில் ஆதி சங்கரர் வரலாறு.

ஹம் காமாட்சி அம்மன் கோவிலின் எதிரிலேயே அக்கோவிலின் அன்னதான உணவுக்கூடமும் அமைந்துள்ளது. அங்கேயே முன்புறம் உள்ள இல்லத்தில் அக்கோவில் உருவாகக் காரணமாக இருந்த பாஸ்கரன் என்பவரும் வசித்து வருகிறார். பின்புறம் அன்னதானக் கூடமும் ரெஸ்ட் ரூமும் உள்ளது.

கோயிலுக்கும் அன்னதானத்துக்கும் நிதி அளிக்க விரும்புபவர்கள் அங்கே இருக்கும் உண்டியலில் நிதியைச் சேர்க்கலாம். உணவுண்டு வந்த பின்பு உண்டியலைப் பார்த்த நாங்களும் ஒரு தொகையை சேர்த்தோம். :)


ஆதி சங்கரர் காலடி என்னும் ஊரில் ஆர்யாம்பாள், சிவகுரு தம்பதியினருக்கு மகவாய்ப் பிறந்தார்.

வெள்ளி, 31 மே, 2019

இருப்பதை ஈந்ததனால் ஐஸ்வர்யம் பெற்றவள். தினமலர் சிறுவர்மலர் - 17.


இருப்பதை ஈந்ததனால் ஐஸ்வர்யம் பெற்றவள்

சிலர் தம்மிடம் எவ்வளவு செல்வம் இருந்தாலும் அதில் துளிக்கூடப் பிறருக்குக் கொடுக்க மாட்டார்கள். மாடி வீடு, மகிழுந்து, மாடு மனை என்றிருப்போரும் கூட அடுத்தவருக்குக் கிள்ளிக் கூடக் கொடுக்க மாட்டார்கள். ஆனால் ஒரு ஏழைப் பெண்மணி , எளிய ஓட்டுவீட்டில் வசித்தவள் தன்னிடம் இருந்த ஒரே ஒரு பொருளை உணவாக தானம் கொடுத்தாள். அதனால் அவள் பெற்றதோ அவள் வறுமையை நீக்கும் வளமான தங்கமழை. ஆச்சர்யமாக இருக்கிறதல்லவா குழந்தைகளே. வாருங்கள் அவள் கதை பற்றிப் பார்ப்போம்.
அது நான்காம் நூற்றாண்டுக்காலம். கேரளாவில் காலடி என்னும் சிற்றூரில் ஆர்யாம்பாள் சிவகுரு தம்பதிகளுக்கு மகவாகத் தோன்றினார் ஆதி சங்கரர். தனது எட்டாவது வயதில் துறவறம் மேற்கொண்டு கோவிந்த பகவத் பாதரிடம் சீடராகச் சேர்ந்தார்.
இளம் துறவிகள் தங்கள் குருமார்களுக்கு சேவை செய்ய வேண்டும். வேதம், தத்துவங்களைக் கற்றுக் கொள்ள முடியும். ஆனால் துறவியாயிருப்பதால் தனக்கான உணவை அன்றன்றே உஞ்சவிருத்தியாகப் பெற்று அன்றைக்கே உண்டு விட வேண்டும். எதையும் சேமித்து வைத்துக் கொள்ளக் கூடாது.
Related Posts Plugin for WordPress, Blogger...