1397. பாம்பின் கால் பாம்பறியும்
1398. ஆயிரம் பொய் சொல்லியும் ஒரு கல்யாணத்தைப் பண்ணிவை.
1399. ஆனை பல்லு விளக்குதா பூனை பல்லு விளக்குதா
1400. ஆனை இங்கே அங்குசம் எங்கே
அழகப்பா பல்கலையில் 2018 ஆம் ஆண்டு இருபதாம் நூற்றாண்டுத் தமிழ்ப்புதின, சிறுகதை ஆசிரியர்கள் என்ற தலைப்பில் ஒரு பன்னாட்டுக் கருத்தரங்கம் நடைபெற்றது.
அதில் தமிழக மற்றும் ஈழப் புதின எழுத்தாளர்கள் பற்றிய ஆய்வுக் கட்டுரைகள், சுய விவரக் குறிப்புகள், படைப்புகள் பற்றிய விவரங்கள் இடம்பெற்றிருந்தன.
ஃப்ரெஞ்சிலிருந்து மலையாளத்திலும் ( ராமகிருஷ்ணன் குமரநல்லூர் ) மலையாளத்திலிருந்து தமிழுக்கும் வந்திருக்கும் நூல் இது. குழந்தைகளின் உலகம் எவ்வளவு எளிமையானது என்பதைப் பதிய வைத்தது.
ஒவ்வொரு விஷயத்தையும் பெரியவர்களாகிய நாம் எவ்வளவு சிக்கலாகப் புரிந்து கொள்கிறோம். அதே நம் குழந்தைப் பருவத்தில் அவற்றை எப்படி வியப்போடு நோக்கினோம் என்பது புரிந்தது. விஷயங்களை அறிய அறிய இன்னும் தீர்க்க இயலா முடிச்சுக்கள் நம்மைச் சுற்றிப் பிணைந்து கிடக்கின்றன.