எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
சவுண்ட் க்ளவுட் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சவுண்ட் க்ளவுட் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 9 மார்ச், 2020

பாரதி, பாரதிதாசன் - சவுண்ட் க்ளவுல் ஒரு சிற்றுரை.

காரைக்குடி கம்பன் கற்பகம் பள்ளியில் நடந்துவரும் புத்தகக் கண்காட்சியில் பாரதி, பாரதிதாசன் பாடல் ஒப்புவித்தல் போட்டியில் மூன்று நடுவர்களுள் ஒருவராக இன்று பங்கேற்றேன். நிகழ்ச்சியை ஒருங்கிணைத்துப் பரிசுகள் வழங்கியவர் குழந்தைக் கவிஞர் திரு. அழ வள்ளியப்பா அவர்களின் புதல்வி திருமதி தேவி நாச்சியப்பன். மற்ற நடுவர்கள் சாந்தா , ஸ்வேதா ஜீவரத்தினம் ( கார்த்திகேயன் பள்ளித் தலைமை ஆசிரியை ).
( இந்நிகழ்வின் சில புகைப்படங்களைப் பின்னர் பகிர்வேன் )

வியாழன், 30 ஜனவரி, 2020

”எழுத்தும் நானும்.” உரை சவுண்ட் க்ளவுடில்.

எழுத்தும் நானும்.

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தில் கடந்த டிசம்பர் மாதம் ”எழுத்தும் நானும் “ என்ற தலைப்பில் உரையாற்ற அழைப்பு வந்தது.

அப்போது பேசியவற்றை சவுண்ட் க்ளவுடில் மகனார் பதிந்து அனுப்பி உள்ளார். அது இதோ உங்கள் பார்வைக்கு. அதாவது கேளுங்க, கேளுங்க கேட்டுக்கிட்டே இருங்க  :)

https://soundcloud.com/sabalaksh/thennamai-lakshmanan-ezhuthum-naanum-speech?fbclid=IwAR2GtL18PY2kU3Ku3NyVKG-v1xyFUdbV2NmVppr8PVcdRwYo2n1J7Z-q540

இதையும் பாருங்க.

”எழுத்தும் நானும்” தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம்.

புதன், 12 டிசம்பர், 2018

சிறுகதை புதின ஆசிரியர்கள் பற்றி அழகப்பர் கல்லூரியில் ஆற்றிய உரை ஒளி, ஒலி வடிவில்.

அழகப்பர் கல்லூரியில் ஆற்றிய உரையை என் மகன் வீடியோ எடுத்திருக்கிறான் அதை இங்கே பகிர்ந்துள்ளேன்.

மேலும் பேச ஆரம்பிக்கும்போது நான் ரெக்கார்ட் செய்து கொண்டேன். அதை சின்னவன் சவுண்ட் க்ளவுடில் போட்டு அனுப்பி உள்ளான்.



புதன், 10 ஆகஸ்ட், 2016

சரஸ்வதி தியாகராஜன் அவர்களின் குரலில் - சிவப்புப் பட்டுக் கயிறு நூலில் உள்ள நந்தினி சிறுகதை .

தென்றலுக்கு ஒன்றரை வருடங்களுக்கு முன் அனுப்பி அதன் பின் மறந்துவிட்டு என் சிறுகதைத் தொகுப்பில் வெளியிட்ட கதை ஒன்றை தென்றலுக்காக ஒலிவடிவமாக்கி இருக்கின்றார்கள்.


வேறு நூலில் வந்ததை வெளியிடமுடியாது என்றாலும் ஒலி வடிவில் முன்பே ஏற்றியதை பெருமதிப்பிற்குரிய என் முகநூல் தோழி திருமதி சரஸ்வதி தியாகராஜன் அனுப்பி இருக்கின்றார்கள்.

அதைப் பகிர்வதில் மகிழ்கிறேன். அவர்கள் குரலில் என் கதையைக் கேட்கும்போது அற்புதமாய் இருக்கிறது. படிக்கும்போதே நெகிழ்ந்துவிட்டதாகச் சொன்னார்கள். மிக்க நன்றி மேம். வாழ்க வளமுடன்.

என் சிறிய மகன் சபாரெத்தினத்தினம் இதை சவுண்ட்க்ளவுடில் போட்டுக்கொடுத்துள்ளான்.

https://soundcloud.com/sabalaksh/nanthini-story 

எனது சிறுகதைத் தொகுப்பு - ஐந்தாவது நூல் - சிவப்புப் பட்டுக் கயிறு நூலில் இந்தக் கதை வெளியாகி உள்ளது.  கேட்டுட்டு சொல்லுங்க :)


Related Posts Plugin for WordPress, Blogger...