எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
நாவல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நாவல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 6 ஜூலை, 2023

பால் சுரக்கும் பாளை - சோகிசிவா நாவலுக்கு திரு. துரை அறிவழகன் அவர்களின் முன்னுரை.

 பால்சுரக்கும் பாளை




கால ஊற்றில் இருந்து கசியும் நீர் குடித்த பொடிக் குருவி ஒன்றின் பார்வையில் இருந்து விரிகிறது நகரத்தார் கலாச்சார வாழ்வும் அவர்களின் தத்துவமும்
.

ஆச்சி, அப்பச்சிகள் என வாழ்ந்த மூதாதையர் சமூக வாழ்வின் சாரத்தின் ரேகைகளோடு தன் கதை வரைபடத்தை வரைந்துள்ளார் நாவலாசிரியர்.

சுண்ணாம்புக் கலவை, கருப்பட்டி, கடுக்காய்களை அரைத்து முட்டை வெள்ளைக் கருவுடன் கலந்த கலவையில் சுவர் பூச்சு; ஓடைக் கற்களை கொண்டு வந்து கைச் சூளையில் நீர்த்த சுண்ணாம்புக் கலவையில் சுனை சிற்பங்கள்……இப்படி வீடு கட்டுவதற்கு என்றே வாழ்ந்தவர்கள் நகரத்தார்கள்.

செவ்வாய், 10 மார்ச், 2020

தோழர் சிவானந்தம் அவர்கள் பார்வையில் காதல் வனம்.

சகோதரி தேனம்மைலக்ஷ்மணன்  அவர்களின் காதல் வனம்   என் போன்ற சிறார்களுக்கு காதல் பொக்கிஷம் . இதனுள் இடம்பெற்ற வாடகைத் தாய் பற்றிய பதிவுகள் என்னை ஒரே நாளில் நாவலை வாசிக்க தூண்டியது.

இப்பிரபஞ்சத்தில் ஆண் பெண் புணர்தலால் உண்டாகும் கருதரித்தலானது  காலப்போக்கில் செயற்கை முறையில் அதிநவீன கருவிகளைப் பயன்படுத்தி பலவாறாக கருத்தரித்தல் நிகழ்வு நிகழ்கிறது. இவற்றுள் வாடகைத்தாயும் உள்ளடக்கம் என்பதனை தெளிவாக பதிவு செய்துள்ளார்.


புதன், 5 பிப்ரவரி, 2020

சூல் – ஒரு பார்வை

சூல் – ஒரு பார்வை

சூல்

இந்த நூலின் கதாநாயகன் கதாநாயகி எல்லாம் கண்மாய்தான். கம்பர் சரயூ நதியைத் தெய்வமாகப் புனைந்து பாடிய பாடல்கள்போல் இந்தக் கண்மாயும் தெய்வதத் தன்மை பெறுகிறது. அற்ற குளத்து அறுநீர்ப் பறவைகள் போல் கண்மாய் வரண்டதும் அனைவரின் வாழ்வும் வரண்டு போய்க்கொண்டே இருக்கிறது என்பதைக் கறாராகப் பதிய வைத்த சுற்றுச்சூழல் நாவல் இது

பழங்கதைகள், தொன்மங்கள், நம்பிக்கைகள், வரலாறு, அரச குடும்பம், கிராமத்து வாழ்வியல், வழிபாடுகள் அனைத்தும் கருக்கொண்டது.  யதார்த்தமான பாணியில் சொல்லப்பட்டுள்ளது.

வெள்ளி, 22 பிப்ரவரி, 2019

புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவில் “ காதல் வனம் “

எனது புது நாவலான “ காதல் வனம் “ புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவில் டிஸ்கவரி அரங்கு எண் . 8 இல் கிடைக்கிறது. புதுக்கோட்டை வலைப்பதிவ நண்பர்கள், முகநூல் நண்பர்கள் வாங்கி வாசித்து கருத்துக்கூற வேண்டுகிறேன்.


டிஸ்கவரி அரங்கு எண் . 8 

திங்கள், 31 டிசம்பர், 2018

ஸ்ரீ லெக்ஷ்மியின் மூன்று நாவல்கள். ஒரு அறிமுகம்.

ஸ்ரீ லெக்ஷ்மியின் மூன்று நாவல்கள் நோஷன் ப்ரஸ் மூலம் வெளியாகி உள்ளன. இவரது நெஞ்சுக்குள்ளே நீ ஒளிந்திருந்தாய் நாவல் பற்றி நான் எழுதிய விமர்சனம் படித்திருக்கலாம். மிக அழகான எழுத்துக்குச் சொந்தக்காரர்.


புதன், 24 மே, 2017

ஜி எம் பி சாரின் நாவல் நினைவில் நீ – ஒரு பார்வை.



ஜி எம் பி சாரின் நாவல் நினைவில் நீ – ஒரு பார்வை.

இந்தத் தலைப்பைப் பார்த்ததும் இது ஜி எம் பி சார் எழுதியதுதானா என்று ஐயப்பாடு தோன்றவே இதை முதலில் படித்தேன். மிக அருமையான கட்டுக்கோப்பான நாவல். ஆனால் பாபுவின் முடிவை மாற்றி இருக்கலாம் என்று தோன்றியதை மறுக்க முடியாது.

செவ்வாய், 23 ஆகஸ்ட், 2016

நெஞ்சுக்குள்ளே நீ ஒளிந்திருந்தாய். - ஒரு பார்வை.


நெஞ்சுக்குள்ளே நீ ஒளிந்திருந்தாய்

அழகான நாவல் ஒன்று படித்தேன் சமீபத்தில். அதை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். வாட்ஸப் , ஃபேஸ்புக் உலகத்தில் பெரும்பாலும் ஷேர்ஸ் செய்தே வாழும் இளையதலைமுறையினர் நடுவில் லெக்ஷ்மி கருப்பையா என்ற இளவயது எழுத்தாளர் மிக அருமையான நாவல் ஒன்றைப் படைத்துள்ளார். ஆன்லைனிலும் இந்நாவல் படிக்கக் கிடைக்கிறது.

வியாழன், 25 டிசம்பர், 2014

சுசீலாம்மாவின் யாதுமாகி :-



சுசீலாம்மாவின் யாதுமாகி :-

குழந்தைகள் உங்கள் மூலமாக உலகத்துக்கு வந்தார்கள் ஆனாலும் ஆனால் அவர்கள் உங்களை முழுமையாகச் சார்ந்தவர்கள் அல்ல என்ற கலீல் கிப்ரானின் வாசகம் நினைவில் ஆடியது. யாதுமாகியில் சாரு என்ற மகளின் கதாபாத்திரம் வழியாக தேவி என்ற தாயின் இறந்தகால நிகழ்கால சரிதம் எடுத்தியம்பப்படுகிறது.

முழுக்க முழுக்க ஒரு மகளின் பார்வையில் தாயின் கடந்தகாலமும், அது சார்ந்த நிகழ்வுகளும் சுற்றிச் சுற்றிச் சுழன்றடிக்கிறது நம்மை. குழந்தைத் திருமணம் ஆகி பால்ய விதவையாகும் 1900களின் ஆரம்பக் கட்டத்தில் கல்வியின் இன்றியமையாமையும் பெண்களின் நிலமையையும் ஏன் ஆண்களின் கட்டுப்பெட்டித்தனமான நிலைமையையும் விவரிக்கும் இக்கதை அங்கங்கே நம்மை உறைய வைக்கிறது.

Related Posts Plugin for WordPress, Blogger...