சூல் – ஒரு பார்வை
சூல்
இந்த நூலின் கதாநாயகன் கதாநாயகி எல்லாம்
கண்மாய்தான். கம்பர் சரயூ நதியைத் தெய்வமாகப் புனைந்து பாடிய பாடல்கள்போல் இந்தக்
கண்மாயும் தெய்வதத் தன்மை பெறுகிறது. அற்ற குளத்து அறுநீர்ப் பறவைகள் போல் கண்மாய்
வரண்டதும் அனைவரின் வாழ்வும் வரண்டு போய்க்கொண்டே இருக்கிறது என்பதைக் கறாராகப்
பதிய வைத்த சுற்றுச்சூழல் நாவல் இது
பழங்கதைகள், தொன்மங்கள், நம்பிக்கைகள், வரலாறு, அரச குடும்பம், கிராமத்து வாழ்வியல், வழிபாடுகள் அனைத்தும் கருக்கொண்டது. யதார்த்தமான பாணியில் சொல்லப்பட்டுள்ளது.
