எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
திங்கள், 31 ஜூலை, 2017
முத்துக்கமலம் இணைய இதழ்
முதலில் அனுப்பிய முத்துக்கமலம் இணைய இதழ் ஆசிரியருக்கு நன்றிகள்.
முத்துக்கமலம் இணைய இதழ்
சென்னையில் இருப்பவர்களில் ஓரிருவர் மட்டும் தமிழ் இணைய இதழ் தொடங்கிய
காலத்தில், சென்னைக்கு வெளியில் தேனியிலிருந்து மு. சுப்பிரமணி முதன்
முதலாகக் கடந்த 01-06- 2006 முதல் முத்துக்கமலம் எனும் பெயரில் தமிழ் இணைய
இதழ் (www.muthukamalam.com) ஒன்றினைத் தொடங்கி அதன் ஆசிரியராக இருந்து
வருகிறார். இதன் வெளியீட்டாளராக உ. தாமரைச்செல்வி இருக்கிறார். மின்னிதழ்
குறித்துப் பலரும் அறியாத நிலையில், இணையத்தில் கிடைக்கும் பல்வேறு
மின்னஞ்சல் முகவரிகளுக்கு ‘முத்துக்கமலம்’ இணைய இதழின் ஒவ்வொரு
புதுப்பித்தலுக்கும், புதுப்பித்தலில் இடம் பெற்றிருக்கும் படைப்புகள் குறித்த
தகவல்களை அனுப்பி அதனைப் பார்வையிடச் செய்வதற்காக ஐந்தாண்டுகள் வரை
தொடர் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆங்கில மொழியிலான
இணையதளங்களைப் போல தமிழ் இணையதளங்களுக்கு விளம்பர வருவாய்
எதுவும் கிடைக்காத நிலையிலும், விடாமுயற்சியுடன் தொடர்ந்து நடத்தப் பெற்று
வருகிறது. முத்துக்கமலம் படைப்பாளர்களை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் பல்வேறு
முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு, 12 ஆம் ஆண்டு தொடக்கம் முதல் ஒவ்வொரு
புதுப்பித்தலிலும் இடம் பெறும் சிறுகதை, கட்டுரை, கவிதை ஆகிய தலைப்புகளிலான
படைப்புகளில் ஒன்று தேர்வு செய்யப்பட்டு, அதனை எழுதியவருக்கு நூல் ஒன்று
பரிசாக வழங்கப்பட்டு வருகிறது. பிற தலைப்புகளிலான படைப்புகளுக்கும் நூல்
அல்லது பயன்படுத்தக்கூடிய பொருள் பரிசு அளிப்பதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டு
வருகின்றன.
பிக்பாஸ் கண்டெக்டர்ஸும் கூகுள் ஸ்மார்ட் காரும்
1522. பாராட்டணும்னா கை தட்டணும். அது ஏன் டேபிளை ஒடைக்கிறாங்க. :)
1523. எதேச்சையா சானல் மாத்தினா
ஏன் அவ்ளோ பேரும் கண்டெக்டர் மாதிரி ஒரு பை மாட்டிட்டு வீட்ல உக்காந்திருக்காங்க. :)
1524. பெருமையோ சிறுமையோ என்றோ நிகழ்ந்த ஒன்று, இன்றைய நட்பை உடைக்கப் போதுமானதாயிருக்கிறது..
1525. ada super apo nan driving kathukirennu veetla irukavangkala padutha vendam..
....... net leye ukkarnthu kannu ponalum pogamudiyum...
#google smart CAR WITHOUT driver.
சனி, 29 ஜூலை, 2017
சாட்டர்டே போஸ்ட் :- கேட்டராக்டைத் தாமதிக்க திரு. இருங்கோவேள் சொல்லும் யோசனைகள்.
நண்பர் திரு இருங்கோவேள் அவர்களின் இவ்விடுகை மிகமுக்கியம் என்பதால் இன்றே இரண்டாவது சாட்டர்டே போஸ்டாக இதையும் வெளியிடுகிறேன்.
சாட்டர்டே ஜாலிகார்னர். குஜராத் ஜர்வானியின் இயலுலகில் ஆஸ்வின் ஸ்டான்லி
நீர்மேலாண்மையைத் தேடி – ஒரு பார்வை.
பண்டைக்காலத்திலிருந்து இன்றைக்காலம் வரை நீர் பற்றிய தகவல்கள் அடங்கிய தொகுப்பு இது. நீர் சேமிப்பு, நீராதாரங்கள், அவை இருந்த இடங்கள் அவற்றை எப்படி உருவாக்கினார்கள். இன்று அவை எவ்வாறு மறைந்தன அவற்றினால் ஏற்படும் இயற்கைப் பேரிடர்கள் அவற்றைத் தவிர்ப்பது எப்படி, மென்மேலும் நீர்வளத்தைத் தக்கவைக்க என்னென்ன செய்யலாம், அவற்றின் பராமரிப்பு என்பதை ஆக்கபூர்வமாக அலசுகிறது இந்நூல்.
பொதுமக்களும் அரசும் கைகோர்த்துச் செயல்பட்டால்தான் இதன் உண்மையான வெற்றி சாத்தியப்படும். சென்னையிலும் மதுரையிலும் எத்தனை எத்தனையோ கண்மாய்களும் ஏரிகளும் கால்வாய்களும் எப்படி மறைந்தன என்று இவர் கூறும் தகவல்கள் வருந்தவைக்கும் ரகம். இதனால்தான் சுனாமி போன்ற வெள்ள அழிவுகள் ஏற்பட்டு ஊரே நாசமானது. அதேபோல் இன்றைய வறட்சிக்கும் இதேதான் காரணம்.
நீர் சம்பந்தப்பட்ட நீர்க்கோள், மாமூல்நாமா, வாரபந்தி, சுருங்கை, கலிங்கு, குமிழித்தூம்பு, கொறம்பு, கற்சிறை, பாசிபட்டம், குழிகுத்தி, திருவோடிப்புறம், குளப்பட்டி, தூம்புகள், தசபந்து, மடை, குமிழி, மதகு, முறைப்பானை, குமுழிப்பள்ளன், நீர்க்கீய்ந்த வண்ணம் ஆகிய அருஞ்சொற்பொருள்களைத் தெரிந்துகொள்ள வேண்டியே இந்நூலை வாசியுங்கள்.
மேலாண்மை என்றால் என்ன, அறிஞர்களின் கருத்துக்கள், புவி வெப்பம், கோயில்களின் அருகில் நீர் நிலைகள், ஆறு, குளம், வாய்க்கால், ஏரி ( கண்மாய் ) கிணறு ஆகியவற்றின் வகைகள், நீர்வழிச் சூத்திரம், நீர் நிலைகளின் பெயர்கள், குடி மராமத்து முறை, பிடாகை முறை, மடை அடைப்பவர்களை அழைக்கும் பெயர்கள், நீர்க்கட்டிகள், நீர்ப் பழமொழிகள், நீர் பற்றிய சொல்வழக்குகள், மன்னர்கள் காலத்துப் பாசனம், அவர்கள் வழங்கிய நிலங்களுக்கும் பாசனம் செய்ய நீர்நிலைகளை சாசனம் செய்தது, நீர்மேலாண்மையின் அரசு, சமூகம், தனிநபர் ஆகியோரின் பொறுப்பு விவரிக்கப்படுகிறது.
இன்னும் சில ஆண்டுகள் இதே தொடர்ந்தால் நீர் சேமிப்பைத் தகுந்த முறையில் செய்யாவிட்டால் உணவு உற்பத்தியில் தட்டுப்பாடு, சுற்றுச்சூழல் அச்சுறுத்தல் மட்டுமல்ல மிகுந்த வறட்சியில் சிக்கித் தவிக்க நேரும் எவ்வுயிரும் உயிர்வாழ்வதற்கே அச்சுறுத்தலாகும் என்று எச்சரிக்கை மணி அடிக்கிறார்.
மகாராஷ்ட்ராவில் உள்ள ஒரு ஊரில் தண்ணீர் கொண்டுவரவேண்டியே ஆண்கள் பலதிருமணங்கள் புரிகிறார்கள் என்பது அதிர்ச்சிச் செய்தி. நீர்மேலாண்மை பற்றிச் சினிமாக்களில் இருந்தும் மேற்கோள் காட்டி உள்ளார்.
இவர் பகிர்ந்திருந்த பல்வேறு சங்ககாலப் பாடல்கள் , இலக்கியங்களில் இருந்து இந்தப் பாடல் மிகவும் பிடித்தது. நீர்மேலாண்மையைப் பற்றி அன்றே பாடி இருக்கிறார்கள்.
1600 ஆண்டுகளுக்கு முன்பு காரியாசான் என்பவர் எழுதியது ( பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றான சிறுபஞ்சமூலத்தில் )
குளந்தொட்டுக் கோடு பதித்து, வழி சீத்து
உளந்தொட்டு உழுவயலாக்கி,
- வளந்தொட்டுப்
பாகு படும்கிணற்றோ டென்றிவ்வைம் பாற்படுத்தான்
ஏகும் சுவர்க்கத் தினிது ( 66 )
இதைப் பின்பற்றினால் என்றும் இன்பமே. முழுமையான இந்நூலைப் படித்துப் பாருங்கள். நீர்மேலாண்மையில் நம் ஒவ்வொருவரின் கடமையும் என்ன என்பது தெள்ளென விளங்கும்.
நூல் :- நீர்மேலாண்மையைத் தேடி
ஆசிரியர் :- ப. திருமலை
வெளியீடு :- தமிழர் ஆய்வு மையம்
விலை :- ரூ 50/-
